Professional Documents
Culture Documents
Untitled Document
Untitled Document
ஆரம்பகாலத்தில்
ஒலிகலையும் செய்கையும் கொண்டு தொடர்பாடிக் கொண்டிருந்த மனிதர்கள்,
காலப்போக்கில் மொழிகளை உருவாக்கி பேச்சுக்கலையை வளர்த்தனர். கற்றறிந்த
தகவல்களைப் பிறருடன் பகிர்வதற்காகப் பயன்படுத்தப்படுவதே நல்லதொரு பேச்சுக்கலைப்
பயன்பாடாகும். சிறந்த பேச்சிற்கான இலக்கணம் பற்றித் திருவள்ளுவர்,
கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் (643)
என்கிறார். சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும்
கேட்க விரும்புமாறு கூறப்படுவதே சொல்வன்மை என்கிறார் வள்ளுவர். பேச்சுக்கலை
வாழ்நாள்முழுவது பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், மேடைப்பேச்சு என்று வரும்போது
அதற்கென எடுத்தல், தொடுத்தல், முடித்தல் என மூன்று படிநிலைகள் உள்ளன.
மேடைப்பேச்சுக்குப் பேச்சின் முன், பேச்சின் போது, பேச்சின் பின் என மூன்று நிலைகள்
உள்ளன. இந்த பேச்சுக்கலைக்கு அரிஸ்டாட்டில் லோகோஸ், ஏத்தோஸ் மற்றும் பாத்தோஸ்
என கோட்பாடுகள் தந்துள்ளார். தர்க்கரீதியாக மற்றும் பகுத்தறிவு நிறைந்த வாதம் என்பதே
லோகோஸ். நம்பகத்தன்மை மற்றும் பேச்சாளரின் தன்மை என்பதே ஏத்தோஸ் ஆகும்.
பாத்தோஸ் என்பது கேட்பவர்களுடன் உணர்ச்சிபூர்வமான பிணைப்பாகும்.