Professional Documents
Culture Documents
விளைப்பயன்தொடர்பாடல் திறன் -
விளைப்பயன்தொடர்பாடல் திறன் -
தொடர்பாடல் திறன் என்பது தலைமைத்துவப் பண்புகளுள் முதன்மையானதும் முக்கியமானதுமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இப்பண்பு
பொதுவாக மாணவர்கள் தங்கள் ஆளுமையை விருத்திச் செய்து கொள்வதற்கும் குறிப்பாக, மாணவத் தலைவர்களுக்கும் ஏனைய
தலைமைத்துவப் பதவி வகிக்கின்ற மாணவர்களுக்கும் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது. தொடர்பாடலில் ஏற்படும் தடங்கல்கள்,
தவறுகளினால் உருவாகும் விளைவுகள் தவிர்க்கப்பட வேண்டும். இதற்குச் சான்றாக வாழ்க்கையில் பல உதாரணங்களைக் கூற முடியும்.
ஒரு கருத்தினைச் சொல்லும்போது பிழையாக விளங்கிக் கொள்ளும் ஒருவர் தான் விளங்கியவாறு செய்ய முயற்சிப்பார். முடிவில் நடக்க
வேண்டும் என எதிர்பார்த்த நிகழ்வு நடைபெற்றிருக்க மாட்டாது. இதுபோல் தகவல்களை வழங்கும் போது சரியான முறையில்
வழங்காவிட்டாலும் இதே பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். இறுதியில் தகவல் வழங்குபவர்களுக்கும்
பெறுபவர்களுக்குமிடையில் முரண்பாடும் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பாக அது அமைந்து விடுகிறது.
எனவே, ஒருவரின் ஆளுமையை விருத்தி செய்வதற்கும் ஒரு காரியத்தை ஆக்கப்பூர்வமாக நிறைவேற்றுவதற்கும் தொடர்பாடல் திறன் மிக
இன்றியமையாததாக இருக்கிறது.
இறைவன் மனிதனுக்கு ஒரு நாவையும் இரண்டு கண்களையும் இரு காதுகளையும் கொடுத்துள்ளான். அதிகம் கேட்டு, அதிகம் பார்த்து
அளவோடு பேச வேண்டும் என்பதற்காகவே. சிலர் அடுத்தவர்கள் பேசும்போது அதை கவனிக்க மாட்டார்கள். அது அவசியமற்ற பேச்சு
என்பது போல் முகத்தைத் திருப்பிக் கொள்வர். அல்லது கவனத்தை வேறு திசையில் செலுத்துவர். பேசுபவர் பேச்சை முடிக்கும் முன்னரே
பக்கத்தில் இருக்கும் மறொருவரிடம் வேறு ஒரு விசயம் பேச ஆரம்பிப்பார் அல்லது பேச்சை இடையில் நிறுத்தி தான் பேச ஆரம்பிப்பார்.
இத்தகைய செயற்பாடுகள் பேசுபவரின் பேச்சையும் அவரையும் இழிவுபடுத்துவதாக அமையும். எனவே உங்கள் சகோதரன் பேசும்போது
அவனது பேச்சை ஆர்வத்துடனும் அவதானத்துடனும் கேளுங்கள்.
3. தகவல்களை வழங்குதல்
தகவல்களை வழங்கும்போது முடியுமானளவு ஐம்புலன்களையும் பயன்படுத்த முயற்சியுங்கள். வழங்கப்படுகின்ற தகவல்கள் உரியவரைச்
சரியான முறையில் சென்றடைய பின்வரும் அம்சங்கள் துணைசெய்கின்றன:
தெளிவாகப் பேசுதல்
ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ளும் மொழியைப் பயன்படுத்துங்கள்.
தொனியை உயர்த்தியும் தாழ்த்தியும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு அமைத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பாகச் சொல்ல நாடும் வ்சயத்திற்கு அழுத்தம் கொடுங்கள்.
அட்டவணைகள், வரைபடங்கள், வரிப்படங்கள் போன்றவற்றைக் காட்சிப்படுத்தி விளக்குங்கள்.
செவிமடுப்பவரின் கண்கள் மற்றும் நெற்றிப் பகுதிகளைப் பார்த்துப் பேசுங்கள்.
இவை தவிர இன்னும் பல பயனுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தித் தகவல்களை இலகுபடுத்தி யாவரும் விளங்கும்படி செய்யலாம்.
மாணவர்களைப் பொறுத்தவரையில் தொடர்பாடற் திறன் என்பது அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆளுமைப் பண்புகளில்
ஒன்றாகும். வகுப்பறையில் ஆசிரியர் கற்பிக்கின்ற விடயங்கள் தவிர பாடப்பரப்புக்கு வெளியிலும் ஆசிரியர்கள் பல கட்டளைகளையும்
அறிவுறுத்தல்களையும் வழங்குவர். இவற்றை ஒழுங்கான முறையில் செவிமடுத்துச் சேமித்துத் தேவையானபோது மீட்டிப் பயன்படுத்தும் போது
அங்கு சிறந்த ஆளுமைகள் வளர்கின்றன. சரியான முறையில் செவிமடுக்கத் தவறும்போது வேண்டப்பட்ட காரியம் சரியாக நிறைவேறாமல்
பிழைத்து விடுவதுடன் உனக்கு ஒரு விடயத்தைச் சொல்வது எருமை மாட்டில் மழை பெய்வதுபோல் என்றும் செவிடன் காதில் ஊதிய
சங்குபோல் என்றும் ஆசிரியரின் வாயால் திட்டுவாங்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. பிற்காலத்தில் இது மாணவர்களின் ஆளுமையில்
மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திச் சமூகத்திலிருந்தும் ஒதுக்கப்படக் காரணமாக அமையலாம்.
மாணவத் தலைவர்கள், வகுப்புத் தலைவர்கள் மற்றும் ஏனையப் பொறுப்புக்களிலுள்ள மாணவர்களும் பொறுப்பாசிரியர்கள் மற்றும் ஏனைய
உயர் பொறுப்புக்களில் உள்ளவர்களிடமிருந்தும் தகவல்களைச் சரியான முறையில் பெற்று அதன்படி ஒழுகத் தவறின் அங்கு ஒழுக்காற்று
மற்றும் நிருவாகச் சிக்கல்கள் ஏற்பட ஏதுவாக அமைந்துவிடும். இவற்றிலிருந்து தவிர்த்துக் கொள்ள தொடர்பாடல் திறன் என்ற ஆளுமைப்
பண்பை மாணவர்கள் அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பெறுகின்ற தகவல்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள எப்போதும் தம்முடன் சிறியதொரு குறிப்புப் புத்தகத்தை வைத்துக் கொள்வது சாலச்
சிறந்ததாகும். கட்டளைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் போது ஏதாவது தகவல்கள் விளங்காவிட்டால் அல்லது மயக்கம், குழப்பம்
காணப்பட்டால் அந்த இடத்தில் தமது சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். பிழையாக விளங்கித் தவறாகக்
காரியமாற்றுவது ஆளுமை விருத்திக்கு உதந்ததல்ல.
பேசும்போது
பேசும்போது குறைவாகப் பேசுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். பலர் உரையாடும்போது அனாவசியமாக நீண்ட நெடிய
விளக்கங்களைக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். ஆழ்மனதில் தங்கியிருக்கும் தாழ்வு மனப்பான்மை அல்லது பாதுகாப்பின்மை போன்ற
உணர்வுகள் இதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.
அளவுக்கதிகமாகப் பேசுவது ஒரு குறையாகும். ஆனால் அளவுக்கதிகம் என்பதை எந்த அளவு கோலைக் கொண்டு நிர்ணயிப்பது என்ற
கேள்வி எழலாம். மேடைப் பேச்சென்றால் இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா என்று பிறர் நினைக்கும் நேரத்தில் முடிக்க வேண்டும் என்பர்.
பொதுவாக குறிப்பிட்ட இடத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு போதுமான தகவல்களையும் விடயங்களையும் மாத்திரம் பேச வேண்டும்.
நிறையப் பேசினால் நம் கூற்று மட்டுமல்லாது நம் ஆளுமையும் சிதைந்துபோகும் அபாயம் ஏற்படுகிறது. இது தவிர நம் பேச்சு செல்லும்
திசையும் நம் கட்டுப்பாட்டிலிருந்து விலகி ஏதோ பேசி வம்பில் கொண்டுவிடும் அபாயமும் ஏற்படுகிறது.
குறைவாகப் பேசுபவர்கள்மேல் எப்போதும் ஏனையோர் தன்னையறியாமல் ஒருவித அச்சம் கலந்த மரியாதையுடன் அணுகுவார்கள்.
அதிகமாகப் பேசப் பேச, ஏதாவது முட்டாள்தனமாகப் பேசிவிட ஏதுவாகும். ஒவ்வொரு சொல்லும் நம் முழுக் கட்டுப்பாட்டுடனும் நம்
சிந்தனை அடிப்படையில் முடிவு செய்யப்பட்டும் வெளிவர வேண்டும்.
மாணவப் பருவத்தில் வளர்த்துக் கொள்ளும் இவ்வாறான ஆளுமைப் பண்புகள் பாடசாலை வாழ்க்கையுடன் முற்றுப் பெறுவதில்லை. சமூக
வாழ்க்கை, தொழில் வாழ்க்கை என அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது. எனவே, தொடர்பாடற் திறனை வளர்த்து முழுமையான
ஆளுமையை விருத்தி செய்ய முயற்சி செய்வோம். இதனூடாக சுவனம் நுழைவதற்கான சந்தர்ப்பத்தையும் அமைத்துக் கொள்வோம்.