You are on page 1of 13

தேசிய வகை தெலுக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளி

தமிழ்மொழி
ஆண்டு 5
பெயர் : _______________________ வகுப்பு : ________

பாகம் 1
பிரிவு அ : செய்யுளும் மொழியணியும்
(கேள்விகள் 1- 10)
(10 புள்ளிகள்)
(நேரம் : 15 நிமிடங்கள்)

1. பிழையான இரட்டைக் கிளவியைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு


செய்க.

A. கையும் களவுமாகப் பிடிபட்ட சிறுவன் திருதிருவென விழித்தான்.


B. தாயார் வாங்கி வந்த வெள்ளிப் பாத்திரங்கள் பளபளவென
மின்னின.
C. மலர் வேலைக்காரியிடம் எப்போதும் சரசரவென எரிந்து விழுவார்.
D. அறைக் கதவை யாரோ தடதடவென்று தட்டும் ஓசை கேட்டு
வருணவி திடுக்கிட்டாள்.

2. கோடிடப்பட்ட இடத்திற்கு ஏற்ற மரபுத் தொடரைத் தெரிவு செய்க.

தோட்டப்புறத்தில் வசித்து வந்த பிரபா, எவ்வித வெளியுலக


தொடர்புமின்றி _____________ வாழ்ந்து வந்தார்.

A. கண்ணும் கருத்துமாக
B. கிணற்றுத் தவளையாக
C. திட்ட வட்டமாக
D. ஓட்டை வாயாக

3. ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

ஏதோ தவறு செய்தவன் போல் சதீஸ் சோகமாகக் காணப்பட்டான்.

A. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.


B. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
C. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

4. கொடுக்கப்ப்பட்ட விளக்கத்திற்குத் பொருத்தமான உலகநீதி வரியைத்


தெரிவு செய்க.

1
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

A. நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்.


B. நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்.
C. நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்.
D. நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.

5. தெருவோரத்தில் ஓவியம் தீட்டிக் கொண்டிருக்கும் இளைஞர் மிகவும்


அற்புதமான ஓர் ஓவியக் கலைஞர். ஆனால், அவரின் புகழ் இன்னும்
வெளிப்படாமல் _________ வாழ்ந்து வருகிறார்.

A. மலரும் மனமும் போல


B. காட்டுத் தீ போல
C. குன்றின் மேலிட்ட விளக்குப் போல
D. இலைமறை காய் போல

6. தருமத்தையும் முயற்சியையும் வலியுறுத்தும் ஆத்திசூடிகளைத்


தெரிவு செய்க.

i. ஊக்கமது கைவிடேல்
ii. அறஞ்செய விரும்பு
iii. உடையது விளம்பேல்
iv. ஆறுவது சினம்

A. i , ii
B. i , iii
C. ii , iv
D. i , iv

7. திருக்குறளின் முதல் அடியைத் தேர்ந்தெடு.

__________________________________
இகழ்வாரை நோவது எவன்.

A. எழுத்தறி வித்தவன் இறைவனாகும்


B. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
C. புகழ்பாட வாழாதார் தந்நோவார் தம்மை
D. புகழ்பாட தந்நோவார் வாழாதார் தம்மை

8. கீழ்க்காணும் செய்யுளின் முதலடி இடம் பெற்றிருக்கும் நூல் எது ?

²Å¡ Áì¸û ãÅ¡ ÁÕóÐ

2
A. நல்வழி
B. மூதுரை
C. கொன்றை வேந்தன்
D. நீதிநெறி விளக்கம்

9. பிழையான இணைமொழியை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு


செய்க.

A. எலும்பும் தோலுமாய் காணப்பட்ட அச்சிறுவனுக்கு அப்பெரியவர்


உதவ முன்வந்தார்.
B. தேர்வில் சிறந்த வெற்றி பெற குமாரி சரளா ஆடிப் பாடிப் படித்து
வந்தாள்.
C. திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் அன்றும் இன்றும்
அழியாதவை.
D. திருடர்கள் வங்கியில் நுழையும் முன் சுற்றும் முற்றும் பார்த்தனர்.

10. பின்வரும் செய்யுளின் மூன்றாவது அடியைத் தெரிவு செய்க.

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

A. புல்லிதழ் பூவிற்கும் உண்டு


B. நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
C. நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
D. அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்.

பிரிவு ஆ : இலக்கணம்
(கேள்விகள் 11- 20)
(10 புள்ளிகள்)
(நேரம் : 15 நிமிடங்கள்)

11. தமிழ் எழுத்துகளில் வல்லினம் மெல்லினம் இரண்டுக்கும் இடைப்பட்ட


எழுத்துகளைத் தெரிவு செய்க.

A. ங், ஞ், ண், ந், ம், ன்


B. ய், ர், ல், வ், ழ், ள்
C. க், ச், ட், த், ப், ற்

3
12. பின்வருவனவற்றுள் எந்தத் தொடர் வலிமிகும் ?

A. இவ்வளவு + செலவு
B. இன்று + சென்றேன்
C. அங்கு + போனேன்
D. எத்தனை + சிறிய

13. வாக்கியத்தில் விடுபட்ட இடைச்சொல்லைத் தெரிவு செய்க.

நாளை பிரேமா பூப்பந்து பயிற்சிக்கு வரமாட்டாள்.______________


அவளுக்குப் பதிலாக உஷா பயிற்சியில் கலந்து கொள்வாள்.

A. மேலும்
B. எனவே
C. ஆனால்
D. ஏனெனில்

14. மிகச் சரியான நிறுத்தற்குறிகளைக் கொண்ட வாக்கியத்தைத்


தெரிவு செய்க.

A. கி.குகன். எண் 24. தாமான் மாஸ், தம்பின், நெகிரி செம்பிலான்.


B. கி.குகன், எண் 24, தாமான் மாஸ், தம்பின், நெகிரி செம்பிலான்.
C. கி.குகன் எண் 24, தாமான் மாஸ், தம்பின், நெகிரி செம்பிலான்.
D. கி.குகன், எண், 24, தாமான் மாஸ், தம்பின், நெகிரி செம்பிலான்.

15. அயராத உழைப்பினாலேயே டாக்டர் மு.வரதராசனார் வாழ்வில்


_____________.

A. முன்னேறினார்
B. முன்னேறுகிறார்
C. முன்னேறுவார்
D. முன்னேற்றினார்

16. பன்மை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

A. குகன் தசரதனுடன் நூலகத்திற்குச் சென்றன்.


B. நளினி தன் தங்கைக்குப் பாடம் சொல்லித் தந்தாள்.
C. பிரபாவும் கிருஷ்ணனும் அறிவியல் பூங்காவைச் சுத்தம் செய்தனர்.
D. சரோஜா கவிதைப் போட்டியில் பங்குப் பெற்றாள்.

4
17. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்று எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது
என்பதை தெரிவு செய்க.

இன்று போய் நாளை வா !

A. செய்தி வாக்கியம்
B. வேண்டுகோள் வாக்கியம்
C. விழைவு வாக்கியம்
D. கட்டளை வாக்கியம்

18. கோடிட்டப்பட்ட சொற்களுள் எஃது அஃறிணையக் குறிக்கின்றது ?

இளமாறனும் ரோகினியும் ஆலயத்திற்குச் சென்று இறைவனைத்


வணங்கி இல்லம்
A B C
திரும்பினார்கள்.

19. பிழையில்லாமல் எழுதப்பட்ட சொற்றொடரைத் தெரிவு செய்க.

A. மேடு பல்லம்
B. ஆற்றங் கறை
C. விருப்பு வெறுப்பு
D. பலக்கம் வழக்கம்

20. பிழையாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

காலையில் வேட்டைக்குச் சென்ற பழனிமலை காடு மேடெல்லாம்


அலைந்துத்
A B
திரிந்தான். காட்டில் எங்குத் தேடியும் விலங்குகளைக் காணாமல்
சோர்ந்து
C D
வீடு திரும்பினான்.

பாகம் 1 முற்றுப் பெற்றது


BAHAGIAN 1 TAMAT

5
பாகம் 2
[நேரம் : 45 நிமிடங்கள்]
கேள்வி 21
அ. சரியான சொற்களின் அடியில் கோடிடு.

1. வேடன் விரித்த (வலை, வளை) யில் மாட்டிக் கொண்ட மான் தவித்தது.


(1 புள்ளி)
2. (அனைக்கட்டு, அணைக்கட்டு) உடைந்ததனால் ஊரில் வெள்ளம்
புகுந்தது. (1 புள்ளி)
3. (கன்னை, கண்ணை) நம்பாதே, உன்னை ஏமாற்றாதே! என்பது ஒரு
பாடலின் முதல் வரியாகும்.
(1 புள்ளி)
4. கோட்டைக்குள் புகுந்து திருடர்கள் ( கொல்லை, கொள்ளை) அடித்துச்
சென்று விட்டனர்.
( 1 புள்ளி)

ஆ. கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளின் அடிகளை முறைப்படுத்தி


எழுதுக.

5. தோன்றுக தோன்றின் தோன்றாமை புகழோடு


அஃதிலார் தோன்றலின் நன்று

____________________________________________________________________

___________________________________________________________
__________ (2 புள்ளி)

[ 6 புள்ளி ]

6
கேள்வி 22
கொடுக்கப்பட்ட பகுதியை அடிப்படையாகக் கொண்டு பின்டரும்
வினாக்களுக்கு விடை எழுதுக.

வெளிநாடுகளில் வேலை செய்ய


ஓர் அரிய வாய்ப்பு !
கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் அரேபிய நாடுகளில்
வேலை செய்ய விரும்புகிறீர்களா ?

மேல் விபரங்களுக்கு இன்றே கீழ்க்காணும் முகவரியில்


உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.

சங்கி மங்கி நிறுவனம்


107, தாமான் சித்தி,
73000 நெகிரி செம்பிலான்.

அ) மேலேயுள்ள அறிவிப்பு எதைப் பற்றியது ?

______
________________________________________________________________
( 1 புள்ளி )

ஆ) அறிவிப்பின்படி எங்கெங்கு வேலை செய்ய வாய்ப்பு உள்ளது ?

7
_______________________________________________________________
_ ( 2 புள்ளி
)

இ) வேலைசெய்ய விரும்புவோர் யாரைத் தொடர்பு கொள்ள


வேண்டும் ?

________________________________________________________________
( 1 புள்ளி )

ஈ) இவ்வறிக்கையின் நோக்கம் யாது ?

________________________________________________________________
(2 புள்ளி )

[ 6 புள்ளி ]

கேள்வி 23
கொடுக்கப்பட்ட படத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வரும்
வினாக்களுக்கு விடை எழுதுக.

8
அ. இப்படத்தில் சிறுவன் எதிர்நோக்கும் பிரச்சனை யாது ?

________________________________________________________________
( 1 புள்ளி )

ஆ. இந்நிலை தொடருமானால் இச்சிறுவன் எத்தகைய பாதிப்புகளை


எதிநோக்குவான் ?

i. _________________________________________________________
_

ii. _________________________________________________________
_
( 2 புள்ளி )

இ. இந்தச் சிக்கலைக் களைய நீ என்ன செய்வாய் ?

i. ______________________________________________________

ii. ________________________________________________________
( 2 புள்ளி )

[ 5 புள்ளி ]

கேள்வி 24
கீழே கொடுக்கப்பட்டுள்ள கவிதையை வாசித்து, அதன் பின்வரும்
வினாக்களுக்கு விடை காண்க.

சிறியவரும் பெரியவரே

9
இன்று சிறுவர் தானே நம்மால்
என்ன செய்ய முடியும் ?
என்று நீங்கள் எண்ண வேண்டாம்
எதுவும் முடியும் உன்னால்.

பன்னிரண்டு வயதுக்குள்ளே
பாரதி என்ற சிறுவன்
கன்னித் தமிழில் பாட்டுப் பாடி
கவிதை மன்னன் ஆனான்.

கிழவர் இருவர் சொன்ன வழக்கைக்


கேட்டுக் கரிகால் வளவன்
குழந்தை நல்ல தீர்ப்புக்
கூறிப் புகழைப் பெற்றான்.

சின்னஞ் சிறிய வயதிலேயே


ஜேம்ஸ் வாட் பெயரோன்
சொன்ன நீரின் ஆவின் சக்தி
இயந்திரங்கள் ஓட்டும்.

[ தனிகை உலகநாதன்
]

அ) இளவயதிலேயே கவிதை இயக்கும் திறமை பெற்ற சிறுவன் யார் ?

___________________________________________________________________________
(1 புள்ளி
)

ஆ) சிறு வயதினரால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு எவை சான்றாக


விளங்குகின்றன ?
_____________________________________________________________________
_______

_____________________________________________________________________
_______
( 2 புள்ளி )

10
இ) ஜேம்ஸ் வாட் என்ற அறிஞர் எந்தத் துறையைச் சார்ந்தவராக இருப்பர் ?

___________________________________________________________________________
_
(1 புள்ளி
)

ஈ) சிறுவயதினரான நீ, இவர்களைப் போல் சாதனை பெற என்ன


செய்யலாம் என
எண்ணுகிறாய் ?

_____________________________________________________________________
_______

_____________________________________________________________________
_______
( 2 புள்ளி )

[ 6 புள்ளி ]

கேள்வி 25
கீழே கொடுக்கப்பட்டுள்ள சிறுகதையை வாசித்து, அதன் பின்வரும்
வினாக்களுக்கு விடை காண்க.

முப்பது ஆன்டுகளுக்குப் பிறகு மீண்டும், தான் பிறந்து வளர்ந்த ஊருக்கு


வருகிறான் சேது.
கம்பங்களும் இரப்பர் மரங்களும் இருந்த சாலையோரங்களில் ‘தாமான்கள்’
முளைத்திருந்தன. வித்தியாசம் அவ்வளவுதான் ‘பிறை’ பகுதியில்
சகதிகளிலேயே பெரும் தொழிற்சாலைகள் உருவாகி நேராகவே
பார்த்தவனாகையால், அவனுக்கொன்றும் இந்த தாமான்கள்
அதிசத்தையோ அதிர்ச்சியையோ தரவில்லை.

11
ஆனால், மனத்துக்குள் ஓர் இனம் தெரியாத பரபரப்பு. அவன் அந்த
ஊருக்கு வர வேண்டுமென்று என்றுமே நினைத்தது கிடையாது.
அந்தப் பிறந்த ஊரைப் பற்றியே நினைவே அவனுக்கு ஒரு படுபயங்கர
கனவுபோல இருந்தது. அவன் பால்ய உயிர் நண்பன் இராமு அவனைப்
பினாங்கில், கோயில் திருவிழாவில் கண்டுவிட்டு இவன் விலாசத்தையும்
பெற்றுக்கொண்டு போனவன், மகள் திருமணத்துக்குப் பத்திரிக்கையோடு
வற்புறுத்தி வருமாறு கடிதமும் எழுதியிருந்தான்.
ஊரைப் புறக்கணித்தவனுக்கு உயிரான நண்பனைப் புறக்கணிக்க
முடியவில்லை.ஒரு காலத்துல அவன் அழும்போதெல்லாம் அவன்
கண்ணீரைத் துடைத்தவனாயிற்றே! சேதுக்கு அப்பா யார், அம்மா யார் என்று
இதுவரையில் தெரியாது. அவனை எடுத்து வளர்த்த அத்தைதான்
அம்மாவாக இருந்தாள். அவனுக்குக் கருத்து தெரிந்து அந்த அத்தையிடம்
அவன் வாங்கிய பேச்சுகளும் அடிகளும் பசுமரத்தாணி போல் அவன் மனதில்
பதித்திருந்தது.
அவன் பிறர் வியக்கும் வகையில் விலை உயர்ந்த காரில் பந்தல் வாசலில்
வந்து நின்றான். சேதுவை பந்தல் வாசலில் கண்டுவிட்டு இராமு ஓடோடி வந்து
வரவேற்றான். சேதுவும் இராமுவும் தாங்கள் சந்தித்த மகிழ்ச்சியில் கட்டித்
தழுவிக்கொண்டனர்.

அ) எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சேது தன் ஊருக்கு வருகிறான் ?

______________________________________________________________________
(1 புள்ளி
)

ஆ) மேற்கண்ட கதையில் எத்தனை கதை மாந்தர்கள் வந்தனர் ?

_______________________________________________________________________
(1 புள்ளி
)

12
இ) சேது அந்த ஊருக்கு வரவேண்டுமென்ற எண்ணம் தோன்றாமைக்கு
காரணம்
என்ன ?

_____________________________________________________________________
__

_____________________________________________________________________
__
( 2 புள்ளி )

ஈ) சேதுவின் அத்தையிடம் எத்தகைய பண்பு நலன்களை காணலாம் ?

i. _______________________________________________________________
__

ii. _______________________________________________________________
___
( 2 புள்ளி )

உ) ஏற்ற விடைக்கு ( √ ) என அடையாளமிடுக.

ஊரைப் புறக்கணித்தவனுக்கு உயிரான நண்பனைப் புறக்கணிக்க


முடியவில்லை என்ற சொற்றொடருக்குப் பொருள் என்ன ?

1 ஊரின் மேல் அவருக்கு கோபம்


2 உதவி செய்த நண்பனின் அன்பை மறுக்க முடியவில்லை
3 அத்தையின் கொடுமைகளை மறக்க முடியவில்லை
4 ஊர் மக்கள் அனைவரும் கொடியவர்கள்
( 1 புள்ளி )

13

You might also like