You are on page 1of 2

பரத நாட்டியம்

பரதநாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய,

சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை

வாய்ந்ததும்[சான்று , இந்தியாவிலும், வெளிநாடுகளிலும்


தேவை]
பிரபலமானதுமாகும்.

புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உருவாக்கப்பட்டதலாலேயே பரதம்

என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர்[சான்று தேவை]


. அதேவேளை பரதம் என்ற சொல்,

ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும்

சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்"

(வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற

சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக

கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும்

குறிக்கும். இவற்றுடன் தாளம்ச் சேர்ந்த நடனமே பரத நாட்டியம் ஆகும்.

வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று

பரதநாட்டியம். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்

தமிழகத்தில் உருவாகியது[சான்று தேவை]


. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம்,

சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம்

அழைக்கப்பட்டது. ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக இது ‘பரத நாட்டியம்’

என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.[1] பரதநாட்டியம் தமிழ்நாட்டுக்

கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின்

நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு

நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் நவரசங்களின் பாவனைகளையும்

வெளிக்கொணருதலைக் காணலாம்.

இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர்

பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ

சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த


நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான்

ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில்

அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர்

ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான

அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று

அழைக்கப்படுகிறது.

உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று

வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120

உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில்

உள்ளது. சிதம்பரம் ,மற்றும் மேலக்கடம்பூர் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில்

இவை செதுக்கப்பட்டுள்ளன.

பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை

தேவை. வணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய
ீ இசைக்கருவிகள்

இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒருபுறமாக அமர்ந்து

இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம்

ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப்

பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான

நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.

பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவற்றில் சில,

'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி',

'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். இக்கலையின்

ஆசிரியர்களில், பந்தநல்லூர் மீ னாட்சி சுந்தரம்,வழுவூர் பி. இராமையா

பிள்ளை, திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை, தனஞ்சயன், அடையார்

லக்ஷ்மணன், கலாநிதி நாராயணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.

You might also like