Professional Documents
Culture Documents
தக்காளியை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் மிகவம் ஏற்றது. மண்ணின் கார தன்மை 6.0-7.0 என்ற
அளவில் இருக்கவேண்டும். வெப்பநிலை 210 முதல் 240 செ.கி வரை இருப்பது இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
விதையும் விதைப்பும்
விதை நேர்தத் ி : ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை 40 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்தத ் ி செய்யவேண்டும். இவ்வாறு நேர்தத
் ி செய்யப்பட்ட விதைகளை 1
மீட்டர் அகலம் உள்ள மேட்டுப் பாத்திகளில் 10 ச.மீ வரிசை இடைவெளியில் விதைக்கவேண்டும். பிறகு மணல் கொண்டு மூடிவிடவேண்டும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது பண்படுத்தவேண்டும். பின்பு பார்கள் அனைத்து 25 நாள் வயதுடைய நாற்றுக்களைப் பார்களின் ஒரு பக்கத்தில் நடவேண்டும். நடுவதற்குமுன் இரண்டு கிலோ
அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கலவையை 20 கிர்லா தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.
இடைவெளி
நாற்று நட்ட மூன்றாவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். அதன்பிறகு மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை நீர்
பாய்ச்சவேண்டும்.
அடியுரமான எக்டருக்கு தொழு உரம் 25 டன், தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 100 கிலோ, சாம்பல் சத்து 50 கிலோ, போராக்ஸ் 10 கிலோ மற்றும் துத்தநாக சல்பேட் 50 கிலோ
இடவேண்டும். நட்ட 30 ம் நாள் தழை்சசத்து 75 கிலோ இட்டு மண் அணைக்கவேண்டும். நாற்று நட்ட 15 ம் நாள் ட்ரைகோன்டால் 1 பிபிஎம் என்ற அளவில் பூக்கும் தருணத்தில்
தெளிக்கவேண்டும். இவ்வாறு தெளிப்பதினால் மகசூலை அதிகரிக்க செய்யலாம்.
பயிர் இடவேண்டிய சத்துக்கள்(கிலோவில்) இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய
அளவு (கிலோவில்)
ஒரு லிட்டர் புளுகுளோரலின் மருந்தை 500 லிட்டர் நீரில் நன்றாகக் கலந்து நாற்று நடுவதற்கு முன்னர் நிலத்தில் தெளித்து நீாப் பாய்ச்சி பின்னர் நாற்றுக்களை நடவேண்டும். நாற்று நட்ட
30 ம் நாள் ஒரு கைக்கிளை எடுக்கவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
வேர் முடிச்சு நூற்புழு : கார்போபியூரான் குருணை மருந்தை ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் விதைக்கும் போது இடவேண்டும்.
நோய்கள்
நாற்று அழுகல் : விதைப்பதற்கு 24 மணி நேரம் முன்பு விதைகளை ட்ரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் ஒரு கிலோ விதைக்கு அல்லது கேப்டான் 2 கிராம் ஒரு கிலோ
விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும். நாற்றாங்காலில் நீர் தேங்கக்கூடாது. காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் ஒரு லிட்டர்
தண்ணீர் என்ற அளவில் கலந்து மருந்தை பாத்திகளில் ஊற்றவேண்டும்.
இலைச்சுருட்டு நச்சுயிரி நோய்: இது தக்காளிச் செடியைத் தாக்கும் முதன்மை நோயாகும். இந்த நச்சுயிரி வெண் ஈக்கள் மூலமாகப் பரவுகிறது. வெய்யில்
காலங்களில் மிகவும் அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு மெத்தில் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபஸ் அல்லது டைமீத்டோயேட் 500
மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
இலைப்பேன்கள் : இது தக்காளியில் புள்ளி வாடல் நோயினைப் பரப்பும் காரணியாக செயல்படுகிறது. இந்நோயினால் தாக்கப்பட்ட செடிகளை முதலில் களைவதுடன்
இலைப்பேன்களைக் கட்டுப்படுத்த எக்டருக்கு 7 கிலோ ப்யூரடான் குறுணையை இடவேண்டும்.
அறுவடை
முன்னுரை
தக்காளியில் உயர் விளைச்சல் இரகங்கள் ஒரு எக்டருக்கு 30 முதல் 40 டன் வரை மகசூல் தரவல்லது. ஆனால் வீரிய ஒட்டு இரகங்களோ 90-100 டன் வரை மகசூல்
தருகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து கோடிஎச் 1 என்ற வீரிய ஒட்டுத் தக்காளி இரகம் வெளியிடப்பட்டுள்ளது. சராசரியாக இந்த
இரகத்தில் இருந்து 90-96 டன் வரை மகசூல் பெறலாம். எனினும் கோடைக்காலத்திற்கு இந்த இரகங்கள் உகந்தது அல்ல. எனவே கோடையில் பயிர் செய்யக்கூடாது.
சிறப்பியல்புகள்
விதையும் விதைப்பும்
விதை நேர்த்தி : ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திரம் அல்லது 4 கிராம் ட்ரைக்கோடெர்மா என்ற பூசணம் விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு
முன்பே கலந்து வைக்கவேண்டும். விதைப்பதற்கு சற்று முன்பாக 150 கிராம் விதைக்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம் கலந்து விதைக்கவேண்டும்.
நாற்றாங்கால் : தொழு உரம், மணல், செம்மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து மேட்டுப்பாத்திகளை நிழலான பகுதியில் அமைக்கவேண்டும். இப்பாத்திகளில் 10
செ.மீ இடைவெளியில் கோடுகள் கிழித்து அதில் ஒவ்வொரு விதையாக விதைக்கவேண்டும். அல்லது சிறிய பிளாஸ்டிக் கோப்பைகளில் மண் கலவையை நிரப்பி
அதில் ஒரு கோப்பைக்கு ஒரு விதை வீதம் விதைக்கவேண்டும். நாற்றழுகல் நோயைக் கட்டுப்படுத்த தாமிர ஆக்சி குளோரைடு என்ற மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு
2.5 கிராம் என்ற விகிதத்தில் கலந்து விதைகளை முளைத்துவரும் பொழுதும், பின்பு 7 நாட்கள் கழித்தும் ஊற்றவேண்டும். விதைக்கும் பொழுதும், பின்பு 7 நாட்கள்
கழித்தும் ஊற்றவேண்டும். விதைக்கும் போது சதுர மீட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் கார்போஃபியான் குருணை மருந்தினை இடவேண்டும்.
நிலம் தயாரித்தல்
60 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும். பார்களின் இடையே நீர்பப் ாசனம் செய்து 25 நாள் வயதுள்ள நாற்றுக்களை வேர்களைச் சுற்றியுள்ள மண்ணுடன்
தோண்டி எடுத்து பார்களின் ஒரு புறம் 45 செ.மீ இடைவெளியிவ் நடவு செய்யவேண்டும்.
நீர் நிர்வாகம்
நடவு செய்து 3 ம் நாளும் அதன் பின்பு வாரம் ஒரு முறையும் நீர்பப் ாய்ச்சவேண்டும்.
களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி
நடவு செய்த 30 ம் நாள் 1 மீட்டர் உயரமுள்ள மெல்லிய மூங்கில் குச்சிகளை செடிகளின் அருகில் நட்டு செடிகள் தரையில் சாய்ந்து விடாதவாறு கட்டவேண்டும்.
நடுத்தண்டில் தரையிலிருந்து 20 செ.மீ வரையில் முளைத்து வரும் கிளைகளை அகற்றிவிடவேண்டும்.
அடியுழவின் போது எக்டருக்கு 26 டன் தொழு உரமிடவேண்டும். நடவு செய்யும் முன்பு எக்டருக்கு 2 கிலோ (10 பாக்கெட்) அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கலவையை
20 கிலோ நன்கு மக்ிகய தொழு உரத்துடன் கலந்து பார்களின் பக்கத்தில் இடவேண்டும். பின்பு எக்டருக்கு 100 கிலோ தழைச்சத்து, 250 கிலோ மணிச்சத்து, 250
கிலோ சாம்பல்சத்து என்ற விகிதத்தில் உரங்களை இடவேண்டும். 10 கிலோ போராக்ஸ் மற்றும் 50 கிலோ துத்தநாக சல்பேட் ஆகியவற்றையும் அடியுரமாக
இடவேண்டும்.
மேலுரம்
1. நடவு செய்த செய்த 30 ம் நாள் எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து இட்டு மண் அனைத்து நீர் பாய்ச்சவும்.
2. நடவு செய்த 60 ம் நாள் மீண்டும் எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து இட்டு, மண் அணைத்து நிர்் பாய்ச்சவும்.
உரப்பாசனம்
கலப்பு இரகங்களுக்கு ஊட்டச்சத்தின் அளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 200:250:250 கிகிஆகும். இதில் 75% மணிச்சத்தை (187.5 கிகி
மணிச்சத்து 1172 கிகி சூப்பர் பாஸ்பேட்டில் உள்ளது) அடியுரமாக அளிக்க வேண்டும். மீதமுள்ள தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 200:62.5:250 கிகி உரப்பாசனமாக
அளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் நீர்ப்பாய்சச ் வேண்டும். அதனுடன் கரையும் உரப்பாசனம் அளிக்க வேண்டும். அளவைப் பிரித்து பயிரின் ஆயுட்காலம்
முழுவதும் 3 நாட்களுக்கு ஒரு முறை உரப்பாசனமாக அளிக்க வேண்டும். அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் தேவைப்படும் அளவு ஒரு எக்டருக்கு 19:19:19 க்கு 132 கிகி, 12:61:0 க்கு 62 கிகி, 13:0:45 க்கு 500 கிகி மற்றும் யூரியா 223 கிகி.
ஒருங்கிணைந்து பயிர் பாதுகாப்பு
1. நடவு செய்த 7 நாட்கள் கழித்து கார்போஃபியூரான் குருணையை எக்டருக்கு 7 கிலோ என்ற அளவில் இட்டு சாறு உறிஞ்சம் பூச்சிகளைக்
கட்டுப்படுத்தவேண்டும்.
2. மிதைல் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபாஸ் எக்டருக்கு 500 மில்லி மருந்து தெளித்து, இலைப்பேன் மற்றும் வெள்ளை ஈக்களைக்
கட்டுப்படுத்தலாம்.
3. இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த எக்டருக்கு 1 கிலோ ஜீனாப் அல்லது மேன்கோசெப் மருந்து தெளிக்கவேண்டும்.
4. காய்த்துளைப்பானைக் கட்டுப்படுத்த எக்டருக்கு 1.25 லிட்டர் எண்டோசல்ஃபான் மருந்து அல்லது 1.25 கிலோ கார்பரில் நனையும் தூள் இதில் ஒன்றைத்
தெளிக்கவெண்டும்.
அறுவடை