Professional Documents
Culture Documents
சாகுபடி நுட்பங்கள்
பருவம்
தக்காளி பகல் வெப்பம் 28 டிகிரி செ.கி. நிலவும் சூழ்நிலையில் நன்கு வளர்ந்து பலன் தரும்.
வெப்பநிலை 35 டிகிரி செ.கி.க்கு கூடுதலாகவோ, இரவு வெப்பநிலை 15 டிகிரி செ.கி.க்கு
குறைவாகவோ இருக்குமானால் காய்ப்பிடிப்பு மிகவும் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும். குடிலுக்குள்
ஈரப்பதம் 90 சதத்திற்கு குறைவாக இருத்தல் அவசியம்.
நாற்றங்கால்
வீரிய ஒட்டு இரக தக்காளி நாற்றுகளை 98 அறைகளைக் கொண்ட பிளாஸ்டிக் தட்டுகளில்
வளர்த்து நடவு செய்ய வேண்டும். முதலில் பிளாஸ்டிக் 0.3 சதவீதம் காப்பர்
தட்டுகளை
ஆக்ஸிகுளோரைடு கரைசலில் நனைத்து நோய்க் கிருமிகளை அழிக்க வேண்டும். பின்பு, குப்பிகளில்1:1
என்ற விகிதத்தில் மணல்+மக்கிய தென்னை நார்க்கழிவு கலக்கப்பட்ட வளர்ச்சி ஊட்டத்தினை நிரப்ப
வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற அளவில் வரை நேர்தத ் ி செய்ய
வேண்டும். இவ்வாறு விதை நேர்தத ் ி செய்த விதைகளை குப்பிக்கு ஒரு விதை வீதம் ஊன்ற வேண்டும்.
பின்பு பிளாஸ்டிக் தட்டுகளின் மீது வைக்கோள் கொண்டு மூடிவிட வேண்டும். பூவாளி கொண்டு ஒரு
நாளைக்கு இருமுறை வீதம் விதை முளைக்கும் வரை தண்ணீர் தெளிக்க வேண்டும்.
வளர்ச்சி உடகம் தயாரித்தல்:
செம்மண்+மணல்+மக்கிய தென்னை நார்க்கழிவு 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து
தயாரிக்கப்பட்ட வளர்ச்சி ஊடகம் தக்காளி சாகுபடிக்கு மிகக் சிறந்ததாகும். இந்த வளர்ச்சி
ஊடகத்தினை பயன்படுத்தி, 1 மீட்டர் அகலம், 3.5 மீட்டர் நீளம் மற்றும் 15 செ.மீ. உயரம் கொண்ட
மேட்டுப்பாத்திகளை 50 செ.மீ. இடைவெளியில் பாலிதீன் குடிலுக்குள் அமைக்க வேண்டும். நோய்க்
கிருமிகளை அழிப்பதற்காக வளர்ச்சி ஊடகத்தினை பார்மலின் 4 சதம் கரைசலில் தெளித்து பின்பு
கருப்பு நிறப் பாலித்தீன்தாள் கொண்டு காற்று புகாதவாறு மூடிவிட வேண்டும்.
நிலப்போர்வை
நிலப்போர்வை அமைக்க 200 காஜ் தடிமனுள்ள கருப்பு பாலிதீன் தாளினைப் பயன்படுத்த
வேண்டும். நிலப்போர்வையில், நாற்று நடுவதற்காக பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் 5 செ.மீ. விட்டம்
அளவுள்ள துளையினை இடவேண்டும். பின்னர் பாலிதீன் தாளினைக் கொண்டு மேட்டுப்பாத்தியை மூட
வேண்டும்.
நாற்றுநடவு:
நாற்று நடுவதற்கு, 25 நாட்கள் வயதான, ஒரே அளவு வளர்ச்சியுள்ள நாற்றுகளைத் தேர்வு
செய்ய வேண்டும். மேட்டுப் பாத்தியின் இருபுறங்களிலும் 20 செ.மீ இடைவெளிவிட்டு, இரண்டு
வரிசையில் 60x45 செ.மீ. இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
நீரப் ்பாசனம்:
ஒரு மேட்டுபாத்திக்கு இரண்டு வரிசை சொட்டு நீர்க்குழாய்களை அமைக்க வேண்டும். 30
செ.மீ. இடைவெளியில் ஒரு மணி நேரத்திற்கு 2 லிட்டர் தண்ணீர் வெளியேறும்படியான துளைகளுடன்
கூடிய குழாய்களை பயன்படுத்தி தினமும் நீரப் ்பாசனம் செய்ய வேண்டும்.
உரநீர்ப்பாசனம்:
பயிரின் வளர்ச்சி நிலை மற்றும் கால நிலைக்கு ஏற்றாவாறு செடிக்கு அளிக்கப்படும் நீரின்
அளவும் மாறுபடும். செடிகளுக்கு தினமும் சொட்டு நீர் பாசன முறையில் ஒரு மணி நேரம் தண்ணீர்
பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர் உரப்பாசனத்திற்கு அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம் நைட்ரேட் மற்றும்
பாஸ்பாரிக் அமிலம் போன்றவைகளை தழை, மணி மற்றும் சாம்பல்சத்து மூலங்களாக எடுத்துக்
கொள்ளலாம். கால்சியம் பற்றாக்குறையினால் ஏற்படும் காய் அடிப்பகுதி அழுகல் நோயை
குணப்படுத்தலாம். செடிகளில் ஏற்படும் நுண்ணுட்ட பற்றாக்குறையை குணப்படுத்த மக்னீசியம் சல்பேட்,
துத்தநாக சல்பேட் போன்றவற்றை நீர் மூலம் செடிகளுக்கு அளிக்கலாம். நுண்ணுயிர் உரங்களை
செடிகளுக்கு தெளிப்பதன் மூலம் பூச்சிகளை மலரச் செய்து அதன் மூலம் அதிக மகசூல் பெறமுடியும்.
கவாத்து செய்தல்:
நாற்று நட்டு இருபது முதல் முப்பது நாட்கலில் துவங்கி, ஒரு செடிக்கு இரு கிளைகள்
இருக்குமாறு வார இடைவெளியில் செடி ஒன்றுக்கு 2-3 கிளைகள் உடையதாக கவாத்து செய்ய
வேண்டும். செடியின் அடிபகுதியில் வரும் சிறு கிளைகளையும் நீக்குதல் வேண்டும்.
அறுவடை:
நாற்று நட்டு 70-80 நாட்கள் கழித்து அறுவடை செய்ய வ்ணேடும். பழங்கள், பச்சை
நிறத்திலிருந்து லேசான சிவப்பு நிறத்திற்கு மாறும்போது, வாரத்திற்கு ஒரு முறை வீதம் 180 நாட்கள்
வரை அறுவடை செய்யலாம்.
மகசூல்:
ஹெக்டருக்கு 170 முதல் 180 டன் வரை (ஒரு செடிக்கு 5 முதல் 5.5 கிலோ வரை)
குடைமிளகாய்:
பாதுகாக்கப்பட்ட சூழலில் வளர்க்கப்படும் முக்கியமான காய்கறி குடைமிளகாய் ஆகும். இதில்
நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் முக்கியமாக வைட்டமின் ‘ஏ’, ‘சி’ மற்றும் தாது
உப்புகள் நிறைந்துள்ளது ஓர் சிறப்பாகும். இந்தியாவில் தற்பொழுது குடைமிளகாயின் பயன்பாடும்
தேவையும் அதிகரித்து வருகிறது. சாதாரண முறை சாகுபடியில் குறைந்த அளவு மகசூலே (20-40
டன்/ஹெக்டர்) கிடைக்கிறது. ஆனால் பாலிதீன் குடில் சாகுபடி மூலம் தரமும், ககசூலும் (100
டன்/ஹெக்டர்) பலமடங்கு அதிகரிக்கிறது. ஆதலால், எதிர்வரும், காலங்களில் பாலிதீன் குடிலில்
குடைமிளகாயினை சாகுபடி செய்வது விவசாயிகளுக்கு மிகவும் இலாபகரமனதாக அமையும்.
காலநிலை:
குடைமிளகாய் ஒரு குளிர்காலப் பயிர். செடியின் வளர்ச்சி மற்றும் மகசூலுக்கு பகல் வெப்பம் 30
டிகிரி செ.கி.க்கு குறைவாக இருத்தல் வேண்டும். பகல் வெப்பநிலை 35 டிகிரி செ.கி.க்கு அதிகமாக
இருந்தால் காய்ப்பிடிப்பு மிகவும் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும். குறைந்த அளாவும் இரவு வெப்ப
நிலை 20 டிகிரி செ.கி. பூப்பதற்கும், காய்பிடிப்பதற்கும் உகந்ததாக இருக்கும். கோடை காலத்தில்
பாலிதீன் குடிலுக்குள் வெப்பத்தை குறைக்க நிழல் அவசியமானது. குடிலுக்குள் 50-60 சதம் ஈரப்பதம்
இருத்தல் வேண்டும்.
நாற்றங்கால்:
நாற்றங்கால் அமைப்பதற்கு 98 அறைகள் கொண்ட பிளாஸ்டிக் தட்டுகளை காப்பர் ஆக்ஸி
குளோரைடு 0.3 சதவீத கரைசலில் நனைக்க வேண்டும். பின்னர், வளர் ஊடகத்தினை (மணல்+மக்கிய
தென்னை நார்க்கழிவு 1:1 என்ற விகிதத்தில்) குப்பிகளில் நிரப்பி, ஒரு குப்பிக்கு ஒரு விதை வீதம்
விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை ஊன்ற வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற
் ி செய்ய வேண்டும்.
அளவில் டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்தத
நிலப்போர்வை:
நிலப்போர்வை அமைப்பதற்கு 200 காஜ் தடிமன் கொண்ட கருப்பு பாலிதீன் தாள்களைப்
பயன்படுத்த வேண்டும். நாற்று நடுவதற்காக, பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் 5 செ.மீ.விட்டம்
அளவுள்ள துளைகளை இட வேண்டும்.
நாற்றுநடுதல்:
10 நாட்களுக்குப் பிறகு 40-45 நாட்கள் வயதுடைய,
மேட்டுப் பாத்திகளில் நனைத்து நன்கு
வளர்ச்சியடைந்த நாற்றுகளை, 60x30 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
நீரப் ்பாசனம்:
நடவு செய்த 10 நாட்களிலிருந்து தினசரி சொட்டு நீரப் ்பாசனம் செய்ய வேண்டும். ஒரு
நாளைக்கு செடிகளுக்கு ஒரு சதுர மீட்டருக்கு 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் கிடைக்க வேண்டும்.
உரநிர்வாகம்:
சொட்டுநீர் உரப்பாசனம் என்பது பாசன நீரோடு உரங்களையும் சீராக கலந்து பயிர்கலுக்கு
அளிப்பதாகும். உரம் மட்டுமின்றி இம்முறையில் நுண்ணுட்டச் சத்து பூச்சி, பூஞ்சாண மருந்துகள் மற்றும்
களைக்கொல்லி மருந்துகளையும் செலுத்த முடியும், சொட்டுநீர் உரப்பாசனம் முறையில் அதிக விளைச்சல்
கிடப்பதோடு தரமான விளைப்பொருளும் கிடைகிறது. இம்முறையில் களைகளின் பெருக்கம்
கட்டுப்படுத்துவதோடு மிகக் குறைந்த அளவே வேலை ஆட்கள் தேவைப்படுகின்றனர்.
பயிரின் வளர்ச்சி நிலை மற்றும் காலநிலைக்கு ஏற்றவாறு செடிக்கு அளிக்கப்படும் நீரின் அளவும்
மாறுபடும், செடிகளுக்கு தினமும் சொட்டுநீர் பாசன முறையில் ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச
வேண்டும். சொட்டு நீர் உரப்பாசனத்திற்கு அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம் நைட்ரேட் மற்றும்
பாஸ்பாரிக் அமிலம் போன்றவைகளை தழை, மணி மற்றும் சாம்பல்சத்து மூலங்களாக எடுத்துக்
கொள்ளலாம். கால்சியம் பற்றாக்குறையினால் ஏற்படும் காய் அடிப்பகுதி அழுகல் நோயை
குணப்படுத்தலாம். செடிகளில் ஏற்படும் நுண்ணுட்ட பற்றாக் குறையை குணப்படுத்த மக்னீசியம் சல்பேட்
மற்றும் துத்தநாகம் சல்பேட் போன்றவற்றை சொட்டு நீர் மூலம் செடிகளுக்கு அளிக்கலாம். நுண்ணுயிர்
உரங்களை செடிகளுக்கு தெளிப்பதன் மூலம் பூக்களை மலரச் செய்து அதன் மூலம் அதக மகசூல் பெற
முடியும்.
கவாத்து செய்தல்:
செடிகளில் நான்கு பெரும் கிளைகள் மட்டும் வைத்துக் கொண்டு மற்ற கிளைகளை கவாத்து
செய்தல் வேண்டும். நடவு செய்த 15 முதல் 20 நாட்களிலிருந்து வாரம் ஒரு முறை கவாத்து செய்ய
வேண்டும். ஒவ்வொரு கனுக்களிலிருந்து கிளைகள் தோன்றி இரண்டாக பிரிந்து ஒரு சக்தியுள்ள மற்றும்
சக்தியற்ற கிளைகள் உருவாகிறது. சக்தியுள்ள கிளைகளை வைத்துக் கொண்டு சக்தியில்லாத
கிளைகளை கவாத்து செய்தல் அவசியம்.
செடியின் வளர்ச்சியை முறைபடுத்துதல்:
நடவு செய்து ஆறாவது வாரத்திற்கு பின் செடிகளை பிளாஸ்டிக் கயிறு கொண்டு கட்ட
வேண்டும். இருபது நாட்கள் இடைவெளியில் செடியின் வளர்ச்சிகேற்ப கிளைகளை சணல் கொண்டு
பிளாஸ்டிக் கயிறுடன் இணைத்துக் கட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் செடிகள் உடைவது
தடுக்கப்படுகிறது.
ஆறுவடை:
நடவு செய்தல் 60 நாட்களிலிருந்து 180 நாட்கள் வரை, வார இடைவெளிகளில்
குடைமிளகாயினை அறுவடை செய்ய வேண்டும். முதிர்நத
் , கரும் பச்சை நிறத்திலுள்ள , 150-200
கிராம் எடையுள்ள காய்களை அறுவடை செய்ய வேண்டும். அறுவடையின்போது காய்களை
மேற்புறமாகத் தூக்கி சிறுகாம்புடன் பறிக்க வேண்டும்.
மகசூல்:
நடவு செய்த ஆறு மாத காலத்தில் ஒரு ஹெக்டருக்கு 100 டன் மகசூல் கிடைக்கும்.
சராசரியாக ஒரு காயின் எடை 160 முதல் 180 கிராம் வரை இருக்கும்.
3.வெள்ளரி:
காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாம் இடத்தை அடைந்திருந்தாலும்,
பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நம்மால் உற்பத்தி செய்ய முடியவில்லை. உலக சுகாதாரர்
நிறுவனத்தின் இந்திய மருத்துவக் கழகத்தின் பரிந்துரையாக ஒரு நாளைக்கு ஒருவர் 300 கிராம்
காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் 210 கிராம் காய்கறிகளை மட்டுமே
உணவாக உண்கிறோம். காய்கறி சாகுபடியில் அதிகமாக தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய்
போன்றவைகளையே பெரும்பாலான உழவர்கள் சாகுபடி செய்கின்றனர். இவ்வாறு பெரும்பான்மையான்
உழவர்கள் இவ்வகை காய்கறிகளை பயிறிடுவதால் ஒரு சில காலங்களில் உற்பத்தி அதிகமாகி
விலைவீழ்ச்சி ஏர்படுகிறது. இவ்வாறு ஒரே வகை காய்கறிகளை ஒரு குறிப்பிட்ட காலத்தில் பயிரிடாமல்
பலவகை காய்கறிகளை வருடம் முழுவதும் பயிரிட்டால் சீரான வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு வருடம் முழுவதும் பயிர் செய்வது என்பதும் திறந்த வெளியில் இயலாத ஒன்றாகும்.
ஏனென்றால் பயிற்களுக்கு தேவையான சீதோஷன நிலை வருடம் முழுவதும் ஒரே மாதிரியாக
கிடைப்பதில்லை.
நிலத்தை பண்படுத்துதல்:
நல்ல வடிகால் வசதியுடன் கூடிய வண்டல் கலந்த மண் இதற்கு உகந்தது. மண்ணின் கார
அமிலத்தன்மை 6.5 லிருந்து 7.5 க்குள் இருக்க வேண்டும். பாலித்தீன் குடிலில் வளர்ப்பதற்கு முதலில்
நிலத்தை நன்கு பவர் டிரில்லர் கொண்டு உழ வேண்டும். பின்பு நன்கு மட்கிய தொழுஉரம் ஹெக்டருக்கு 25
டன்கள் என்ற அளவில் இட்டு மேலும் ஒரு முறை உழ வேண்டும்.
மேலும் அடியுரமாக ஹெக்டருக்கு 350 கிலோ கிராம சூப்பர் பாஸ்பேட் என்ற உரத்தை இட்டு
நிலத்தை பண்படுத்திக் கொள்ள வேண்டும். இத்துடன் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியா
என்ற நுண்ணுயிர் உரங்களை ஹெக்டருக்கு 2 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழு உரம் மற்றும் 100
கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றுடன் கலந்து இட வேண்டும். பிறகு 4 அடி அகலத்தில் 1 அடி
இடைவெளி விட்டு மேட்டுப் பாத்திகள் சொட்டு நீர் பாசனத்திற்கு தகுந்தவாறு அமைக்க வேண்டும்.
சொட்டு நீர் பக்கக் குழாயை மோட்டுப் பாத்திக்குள் நடுவில் நீளவாக்கில் நீட்டிவிட வேண்டும். சொட்டு நீர்
பாசனத்தின் பக்கக் குழாய்கள் 5 அடி இடைவெளியிலும் பக்கக் குழாயில் நீர் சொட்டும் பகுதிகள் 60
செ.மீ இடைவெளியிலும் அமைக்கப் பெற்றிருக்க வேண்டும்.
விதைப்பு:
சாதாரண இரக வெள்ளரி சாகுபடி செய்ய ஒரு ஹெக்டருக்கு 2 கிலோ என்ற அளவிற்கு
விதைகள் தேவைப்படும். இதுவே வீரிய ஒட்டு இரகமானால் ஒரு ஹெக்டருக்கு 500 கிராம் அளவே
தேவைப்படும் விதைகளை விதைக்கும் முன்பு ஒரு கிலோ விதைக்கு 5000 இராம் அசோஸ்பைரில்லம்
என்ற நுண்ணுயிர் உரத்தை கலந்து நிழலில் உலர வைத்து பின்பு விதைக்க வேண்டும். விதைப்பதற்கு
முன்பு மேட்டு பாத்திகளை 8-12 மணி நேரத்திற்கு சொட்டு நீர் பாசத்தின் மூலம் நீர் விட வேண்டும்.
பின்னர் விதைகளை 60 செ.மீ இடைவெளியில் பாத்தியின் மையப் பகுதியில் விதை ஒரு குழிக்கு
ஒன்றாக ஊன்ற வேண்டும். மேலும் 2 சதவீத விதைகளை வளர் ஊடகம் நிரப்பட்ட பைக்கு ஒன்றாக
பாலிதீன் பைகளில் பாடுவாசிக்காக அன்றே விதை ஊன்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
் ி:
பின்செய்நேர்தத
விதைகள் விதைத்தப்பின் 5-7 நாட்களில் முளைக்கத் தொடங்கும். விதைத்த 30 நாட்களில்
முதல்களையை எடுத்து பாத்திகளை நன்கு கொத்திவிட வேண்டும். களையின் அளவைப் பொறுத்து,
இரண்டு அல்லது மூன்று முறை பதினைந்து நாட்கள் இடைவெளியில் களை எடுக்க வேண்டும்.
அறுவடை:
விதைத்த 45 நாட்கள் கழித்து வெள்ளரி முதல் அறுவடைக்கு வரும். சிறிய பிஞ்சு காய்களை
பூத்த 8 முதல் 10 நாட்கள் கழித்து அறுவடை செய்ய வேண்டும். 5-7 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை
செய்யலாம். இவ்வாறு 8-10 அறுவடைகள் வெள்ளரியில் செய்யலாம். மொத்த மகசூலாக ஒரு
ஹெக்டருக்கு 8-10 டன்கள் கிடைக்கும்.
நாற்றழுகல் நோய்:
தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றங்காலில் இந்நோய் பரவலாக காணப்படுகின்றது . நோயின்
தாக்குதல் முதலில் விதை முளைக்கும் நிலையில் தோன்றி பின்னர் வித்திலை, தண்டின் அடிப்பகுதி
மற்றும் முதன்மை வேர்களுக்கும் பரவுகின்றது. நோயின் தாக்கம் முதலில் திட்டு, திட்டாக தோன்றி,
பின்னர் தக்கப்பட்ட இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் நாற்றங்கால் முழுவதிலும் பரவி
அழித்துவிடும்.
முன்கருகல் நோய்:
இந்த நோய் தக்காளியின் இலைகளை தாக்கி, இலைப்புள்ளி மற்றும் இலை கருகல் நோயை
உண்டுபண்ணுகிறது. வளர்நத
் செடிகளின் முதிர்நத
் இலைகளில் வளையங்களை ஒன்றினுள் ஒன்று
அடுகியது போன்ற புள்ளிகள் ஒழுங்கற்ற வடிவில் அடர் பழுப்பு நிறத்தில் காணப்பகும். பின்னர்,
இப்புளிகள் ஒன்றிணைந்து பெரிய வடுக்களாக மாறி செடி முழுவதையும் அழித்துவிடும்.
வீசும்.
மாடித் தோட்டம்
காய்கறிகள் நம் உணவில் இன்றியமையாத ஒன்றாகும். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு
காய்கறிகள் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவாக இருக்கிறது. சரிவிகித உணவின்
அடிப்படையில் வயது வந்தோருக்கு 85 கிராம் பழங்களையும், 300 கிராம் காய்கறிகளையும், நமது
உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உணவு வல்லுநர்களின் கூற்று. ஆனால், நாம்
120 கிராம் காய்கறிகளை தான் எடுத்துக் கொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு
பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. காய்கறிகள் பயிரிடுவதற்கான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி
மருந்துகளின் விலை உயர்ந்து வருவது மற்றும் இடைதரகர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றால்
காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நடுத்தர வர்க்க மக்களால் காய்கறிகளை
உணவில் சேர்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு நமக்கு தேவையான காய்கறிகளை நாமே பயிரிட்டு கொள்ள வீட்டு
தோட்டம் அமைத்து காய்கறிகளின் உற்பத்தியை பெருக்குவது அவசியமாகிறது. நகர்புறங்களில் வாழும்
மக்களுக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தால் வீட்டின் பின்புறம் தோட்டம் அமைப்பது முடியாத
காரியமாகும்.
எனவே இதற்கு மாற்றாக மாடித்தோட்டம் அமைத்து காய், கனி, மருந்து வகை செடிகள்,
பூச்செடிகள் மற்றும் அலங்காரத்தாவரங்கள் ஆகியவற்றை வளர்த்து பயன் பெறலாம்.
வளர்க்கும் காலம்:
காய்கறி செடிகளை எல்லா காலங்களிலும் பயிர் செய்யலாம். ஆனால், ஏபரல் மற்றும் மே
மாதங்களில் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்த இரண்டு மாதங்களை தவிர்ப்பது
நல்லது.
உரமிடுதல்:
கொள்கலன்களில் வளர்க்கும் செடிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை இயற்கை உரமிட்டால் அதன்
வேரகள் நன்றாக வளரும். இயற்கை முறையில் உள்ள உரங்கள் தவிர நீரில் எளிதில் கரையக் கூடிய
செயற்கை செயற்கை உரங்களை ஒரு தேக்கரண்டி வீதம் இளம் பருவத்திலும். இரண்டு தேக்கரண்டி
வீதம் பூக்கள் பூக்கும் தருணத்திலும், பழங்கள் பெருக்கம் அடையும் நேரத்திலும் தேங்காய்நார் கழிவு
கலவை மீது போட வேண்டும். இதனால், செடிகள் நன்கு செழிப்பாக இருக்கும்.
பூச்சிகளை கட்டுப்படுத்துதல்:
சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, மாவுப்பூச்சி, தத்துப்பூச்சி, இலைப்பேன் ஆகியவை
செடிகளின் ஆரம்ப வளர்ச்சியை அதிகமாக பாதிக்கிறது. இதனை கட்டுப்படுத்த பூண்டு, இஞ்சி
மற்றும் பஞ்சை மிளகாய் கரைசல் கொண்டு செடிகளின் மீது வாரத்திற்கு ஒருமுறை தெளித்து
கட்டுப்படுத்தலாம்.
நோய்கள்:
பூஞ்சாண நோய்களான வேர் அழுகல், செடி கருகுதல் மற்றும் வைரஸ் நோய்களின் தாக்கம்
மழைக்காலங்களில் சற்று அதிகமாக இருக்கும்.
இதனை தவிர்க்க டிரைகோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் போன்ற நுண்ணுயிர்
கொல்லிகளை பயிர் செய்வதற்கான கலவையை தயார் செய்யும் போதே சேர்த்து கலக்க வேண்டும்.
ஒரு பைக்கு 100 கிராம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் 10% மாட்டு கோமியத்தை செடிகளின்
மீது தெளித்தல் போன்றவை இயற்கை முறையில் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறையாகும்.
வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகளில் மஞ்சள் நிற திட்டுக்கள் காணப்படும்.
அவற்றை உடனடியாக வேருடன் நீக்க வேண்டும்.
அருவடை செய்தல்:
நான் உண்பதற்கு ஏற்றவாறு உள்ள நிலையை அடையும் போது காய்கறிகளை அறுவடை செய்ய
வேண்டும். உதாரணமாக தக்காளியை நன்கு பழுத்த நிலையிலும், கிழக்கு வகைகளை நன்கு முதிர்ச்சி
அடைந்தபிறகும், கீரைகளை இளம் தளிராக இருக்கும் போதும், செடி அவரை/
வெண்டை/கொத்தவரை/கத்தரி போன்றவற்றை இளம்பிஞ்சுகளாக இருக்கும் போதும் பறிக்க வேண்டும்.
அப்போது தான் காய்கறியின் சத்துக்களும், மணமும் மாறாமல் பசுமையாக இருக்கும்.
ஆடிப்பட்ட காய்கறிகளில் உற்பத்தியைப் பெருக்க
உயிர் தொழில்நுட்ப உத்திகள்
சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா காய்கறிகளை அதிக பரப்பளவில் சாகுபடி செய்கின்றது.
வருமானத்தை பெருக்கலாம்.
பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வீரிய இரகம்
கோடிஎச்-1, கோடிஎச்-2, கோடிஎச்-3, சிவம், லட்சுமி, அர்கா ரக்சக்.
உருவாக்கி பின்பு நிலத்தில் தகுந்த இடைவெளி கொண்டு நடவு செய்ய வேண்டும். நட்ட 7 ம் நாள்
கார்போஃப்யூரன் என்ற குருணை மருந்து இட வேண்டும். எக்டேருக்கு 7 கிலோ என்ற அளவில் இட்டு சாறு
வளர்ச்சி மிகுந்த இரகங்களை வீரிய ஒட்டு இரகங்களை பயிர் செய்யும் போது அதற்கு
ஆதாரமாக மூங்கில் குச்சியினை செடி அருகே நட்டு செடியினை சணல் அல்லது வாழை நார் கொண்டு
கட்ட வேண்டும். இதனால் செடிகள் கீழே சாயாமலும், பழங்கள் மண்ணில் பட்டு அழுகாமலும் பார்த்துக்
கொள்ள முடியும்.
மேலும், வீரிய ஒட்டு இரகங்களை பயிர் செய்யும் பொழுது 2-3 உறுதியான அடிக்கிளைகளை
மட்டும் அனுமதித்து ஏனைய பக்கக் கிளைகளை நீக்கிவிட வேண்டும். இதனால் அதிக பூக்களும்,
இலை சுருட்டு நச்சுயிரி தக்காளியை தாக்கும் முதன்மை நோயாகும். இந்த நச்சுயிரி வெள்ளை
குருணையை இட வேண்டும்.
குளோரைடு 2 கிராம் என்ற அளவில் கரைத்து தெளிக்க வேண்டும். போரான் குறைப்பாட்டை, போராக்ஸ்
அறுவடை:
செய்து உள்ளூர் சந்தை மற்றும் குறுகிய தொலைவில் உள்ள சந்தைகளுக்கு அனுப்ப முடியும். நீண்ட
தொலைவில் உள்ள சந்தைகளுக்கு நன்கு முற்றிய பச்சை நிறக் காய்களை அறுவடை செய்ய வேண்டும்.
கோ.பி.எச்-2.
வளர்ச்சி ஊக்கிகள்:
நடவு செய்த 15-20 நாட்களில் கத்தரிச் செடிகளின் நுனித் தண்டுகள் இலைகளுடன் காய்ந்து
இவ்வகைப் புழுக்கள், காய்கள் பிஞ்சாக இருந்து வளர்ந்து வரும் சமயத்தில் காய்களை சாப்பிட்டு
சேதப்படுத்தும்.
இதனைக் கட்டுப்படுத்த கார்பரில் 50 சதத் தூளை ஒரு லிட்டருக்கு 2-4 கிராம் என்ற அளவில்
கலந்து தெளிக்க வேண்டும். காய்களைத் தாக்கும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை
குயினில்பாஸ் 25 இசி 2 மில்லி மற்றும் 2 மில்லி வேப்பெண்ணெயினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து
தெளிக்க வேண்டும் அல்லது வேப்பங்கொட்டைச் சாறு 50 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க
வேண்டும்.
அறுவடை:
நடவு செய்த 55-60 நாட்களில் முதல் அறுவடை ஆரம்பிக்கும், காய்கள் பிஞ்சாக விதைகள்
முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்ய வேண்டும். காய்களை சுமார் 4 முதல் 5 நாட்கள் இடைவெளியில்
மிளகாய்: (இரகங்கள்)
கோ-1, கோ-2, கோ-3, கோ-4, கோ-5, எம்.டி.யூ-1, கோ-1 மற்றும் கே-2.
கோ-2 மற்றும் கோ-3 பச்சைமிளகாய் மற்றும் வற்றல்.
கோ-5 காய்கறி மிளகாய்.
பி.எல்.ஆர்.-1 பச்சைமிளகாய்.
கே-1 மற்றும் கே-2 காய்ந்த வற்றல்.
எம்.டி.யூ-1 காய்ந்த வற்றல்.
பி.எம்.கே-1 மானாவாரி சாகுபடி.
கடற்கரையோர வடகிழக்கு மாவட்டங்களுக்கு பயிரிட ஏற்ற வகை: பி.எல்.ஆர்-1
இதைத்தவிர, சாத்தூர் சம்பா இராமநாதபுரம் குண்டு, நம்பியூர் குண்டு ஆகிய நாட்டு வகைகளும் அந்தந்த
பகுதிகளில் பயிர் செய்யப்படுகின்றன.
இலைப்பேன்:
இவைகள் துளிர் இலைகளின் சாறை உறிஞ்சுவதால் இலைகள் மேல் நோக்கிச் சுருண்டு பழுப்பு
டைமித்தோயேட் 30 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி
ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க
வேண்டும்.
1 கிலோ அல்லது தாமிர ஆக்சி குளோரைடு 1.25 கிலோ இவற்றை 500 லிட்டர் நீரில் கலந்து 15
நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
அறுவடை:
ஒட்டு கட்டுதல்:
நீளவாக்கில் ஒரு சிறு பிளவு ஏற்படுத்த வேண்டும். பின்னர் அதே பருமனுள்ள இளந்தளிர் குச்சியின்
வேரை நீக்கி விட்டு தண்டின் இலைகளை இரு நுனியிலைகள் மட்டும் விட்டு இதர இலைகளை
நீக்கிவிட்டு ‘ஏ’ வடிவத்தில் இரு புறமும் சீவி வேர்க்குச்சியின் பிளவுபட்ட பகுதியில் நுழைத்து பிளாஸ்டிக்
இணைப்பான் கொண்டு இணைக்கலாம் அல்லது ஒரு செ.மீ அகலமான சிறு பாலிதீன் தாளைக்
கொண்டு இருக்கமாக சுற்றி கட்டிவிடலாம். பின்னர் ஒட்டுக்கட்டிய செடிகளை ஒரு சிறு பாலிதீன்
உறையக் கொண்டு நுனியை மூடி நிழல் வலைக்கூடத்தினுள் சுமார் 70-80 சதவிகிதம் ஈரப்பதம்
இருக்குமாறு எட்டு நாள்கள் வைக்க வேண்டும். பிறகு உறையை எடுத்து விட்டு 10-15 நாள்கள் நிழல்
வலைக்குடிலில் வைக்க வேண்டும். ஒட்டு இணைந்த பிறகு 10 நாள்கள் வெளி சூழலில் வைத்து ஒட்டு
நடவு :
தயார் செய்த நடவு வயலில் ஒரு மீட்டர் இடைவெளியில் ஒரு கன அடி அளவுள்ள சிறு குழிகளை
எடுக்க வேண்டும். நன்கு ஒட்டு பிடித்த ஒட்டுக்கத்திரிகளை இக்குழிகளில் வரிசையாக இட வேண்டும்.
ஒட்டுச் செடிகளை ஜூன்-ஜூலை, டிசம்பர்-ஜனவரி மாதங்களில் நடலாம்.
நீரப் ்பாசனம்:
ஒட்டுச் செடியை நடவு செய்த உடனே தண்ணீர் பாச்ச வேண்டும். அதன் பின்னர் 7-10
நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
களை நிர்வாகம்:
களாய்கள் முளைக்கும் முன் அவற்றை கட்டுப்படுத்த புளுகுளோரலின் என்னும் களை
கொல்லியினை ஒரு எக்டருக்கு ஒரு லிட்டர் மருந்தை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரே சீராக
தெளிக்க வேண்டும். களைக் கொல்லியைத் தெளிக்கும் போது மண் ஈரமாக இருக்க வேண்டும். பிறகு
ஒட்டு கத்தரி செடி நட்டவுடன் மெதுவாக வளரும் களைகளை அவ்வப்போது எடுக்க வேண்டும்.
மேல் உரமிடல்:
நட்ட ஒரு மாதம் கழித்து மீதமுள்ள தழைச்சத்தான 100 கிலோவை இட்டு மண்ணை
அணைக்க வேண்டும்.
தாங்கு குச்சி:
தோட்டத்தில் நட்ட பிறகு தாங்கு குச்சியைக் கொண்டு முட்டு கொடுக்க வேண்டும். இதனால்
செடிகள் நேராகவும் காற்றில் சாயாமலும் இருக்கும்.
அறுவடை:
நடவு செய்த 35-40 நாட்களில் முதல் அறுவடை ஆரம்பிக்கும். காய்கள் பிஞ்சாக விதைகள்
முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்ய வேண்டும். கத்தரி காய்களை சுமார் 3-4 நாட்கள்
இடைவெளியில் அறுவடை செய்யலாம். ஒரு செடிக்கு சுமார் 10 கிலோ வரை ஆறு மாதங்கள்
கிடைக்கும்.
மறுதாம்பு முறை:
ஒட்டுச் செடியை ஆறு அல்லது எட்டு மாதங்கள் கழித்து மறுதம்பு செய்ய வேண்டும்.
ஒட்டுச்செடியின் அனைத்து கிளைகளையும் தரையிலிருந்து 15-20 செ.மீ உயரத்தில் வெட்டி,
வெட்டுப்பகுதியை காப்பர் ஆக்ஸிகுளோரைடு பசையக் கொண்டு தடவி விட வேண்டும். பிறகு செடிக்கு
மண்ணை அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும். இதிலிருந்து பல புதிய தளிர்கள் துளிர்விட ஆரம்பிக்கும்.
இவற்றிலிருந்து வளமான 6-8 கிளைகளை மட்டும் வளரச் செய்து மற்றவைகளை நீக்கி விட வேண்டும்.
பிறகு பூக்கள் பிடித்து காய்கள் வர ஆரம்பிக்கும். இதன் மூலம் ஒட்டுச் செடியை மேலும் நான்கு
மாதங்கள் வரை வளர்தது ் அதிகை விளைச்சலைப் பெறலாம். இந்த மறுதாம்பு முறைக்கு முதலில்
கொடுத்த உர அளவை இங்கேயும் 3 நாட்கள் இடைவெளியில் கொடுக்க வேண்டும். இவ்வாறு
தேவைப்பட்டால் மற்றமொரு மறுதாம்பும் விட்டு கத்தரி செடியை வளர்க்கலாம்.
விளைச்சல்:
ஒட்டுகட்டும் முறைகளின் மூலம் உருவாக்கப்பட்ட கத்தரி செடியில் ஒரு செடிக்கு சராசரியாக
12-15 கிலோ வரையிலும் ஹெக்டேருக்கு அதிக அளவாக 125 டன்கள் வரை விளைச்சலாக 15
மாதங்களில் பெறலாம்.
இந்த ஒட்டுச் செடி நூற்புழு, வேரின் மூலமாக பரவும் வாடல் நோக்கு எதிர்ப்புத்திறன் உள்ளது.
நிலம் தயாரிப்பு:
நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண், இருபொறை மண் போன்றவை வெங்காய சாகுபடிக்கு
ஏற்றவை. கார அமிலத்தன்மை 6.5-7.0 க்குள் இருத்தல் நல்லது. நிலத்தை இரண்டு அல்லது மூன்று
முறை நன்கு உழுதல் வேண்டும். கடைசி உழவின் போது ஹெக்டேருக்கு 25 டன் மக்கிய தொழு உரம்
இட்டு நிலத்தை சமபடுத்த வேண்டும். பின்னர் 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
சொட்டு நீர்ப் பாசன முறையில் நடவு செய்ய ஒரு மீட்டர் அகல மேட்டுப் பாத்திகள் அமைத்து 15x10
செ.மீ இடைவெளியில் நட வேண்டும்.
உரமிடுதல்:
மேட்டுப் பாத்திகளில் நடும் பொழுது அடியுரமாக ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து, 60
கிலோ மணிச் சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய இயசாயன உரங்களை நிலம்
தயாரிக்கும் போது இட வேண்டும். பின் நட்ட அல்லது விதைத்த 30 நாட்கள் கழித்து 30 கிலோ
தழைச்சத்தை மேலுரமாக இட வேண்டும். சொட்டு நீர் பாசனத்தில் நடும்பொழுது 45 கிலோ மணிச்
சத்தை தரக்குடிய 297 இலோ சூப்பர் பாஸ்பேட்டை அடியுரமாக இட்டு பின்பு 60 கிலோ தழைச்சத்து, 15
கிலோ மணிச்சத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து தரவல்ல நீரில் கரையும் உரங்களை நட்டதிலிருந்து
வாரம் இருமுறை அளிக்க வேண்டும்.
இரகங்கள்:
காய் மூலம் நடவு செய்ய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட
கோ-4 இரகமும், விதை மூலம் சாகுபடி செய்ய கோ. ஆன்.5 இரகமும் சிறந்தது. ஹெக்டேருக்கு 1000
கிலோ வெங்காயம் (கோ-4) அல்லது விதை மூலம் நாற்று விட்டு நடவு செய்ய 2.5 கிலோ (கோ.ஆன்.5)
வெங்காய விதை தேவைப்படும்
நாற்றங்கால் தயாரிப்பு:
விதை மூலம் நடவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதையை ஒரு மீடட
் ர் அகலமுள்ள
மேட்டுப் பாத்திகளில் விதைக்க வேன்டும். விதைப்பதற்கு முன் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம்
சூடோமோனாஸ் அல்லது 4 கிராம் டிரியக்கோ டெர்மா விரிடி போன்ற எதிர் உயிர் நுண்ணுயிர்
கலவைகளைக் கலந்து விதை நேர்த்தி செய்து 24 மணி நேரம் கழித்து விதைக்கலாம். இதனால் விதை
மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
நன்கு மக்கிய தொழு உரத்தை மேட்டுப்பாத்திகளில் கலந்து நாற்றங்கால் தயார் செய்ய
வேண்டும். பிறகு பாத்திகளின் குறுக்கே 10-12 செ.மீ இடைவெளியில் கோடுகள் இட்டு கோடுளில்
விதைகளைப் பரவலாகத் தூவி மெல்லிய மணல் கொண்டு விதைகளை மூடிவிட வேன்டும். பின்னர்
வைக்கோல் கொண்டு மேட்டுப் பாத்திகளை மூடி விட்டு பூவாளியின் மூலம் தினமும் காலை, மாலை
இருமுறையும் நீர் தெளிக்க வேண்டும். விதை விதைத்த 7-8 நாட்களில் முளைக்கத் தொடங்கி விடும்.
அதன் பின்னர் வைக்கோலை நீக்கி விடலாம். விதை மூலம் பயிர் செய்ய சித்திரை மாதத்தில் விதை
விதைத்து வைகாசி மாதத்தில் சுமார் 40-45 வயதுடைய நாற்றுகளை நடவு வயலில் நடலாம். இதற்கு
அடுத்து தை மாதத்திலும் நாற்று விட்டு நடவு செய்யலாம்.
விதைப்பு/நடவு:
40-45 நாள் வயதுடைய நாற்றுகளை நடவு வயலில் பார்களின் இராண்டு பக்கமும் சரிவில் 10
செ.மீ இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். சொட்டு நீர்ப் பாசன முறையில் நடவு ஸ்யெய ஒரு
மீட்டர் அகல மேட்டுப்பாத்திகளில் 15x10 செ.மீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேன்டும். காய்
வெங்காயம் மூலம் பயிர் செய்யும் போது வெங்காயத்தை பார்களின் சரிவில் இருபுறமும் அல்லது சொட்டு
நீரப் ் பாசன முறையில் நடவு செய்ய மேட்டுப்பாத்திகளில் 15x10 செ.மீ என்ற இடைவெளியில் ஊன்ற
வேண்டும்.
களை நிர்வாகம்:
வெங்காயத்தில் களை நிர்வாகம் மிக முக்கியமானது இல்லையெனில் விளைச்சல்
பாதிக்கப்படும். நட்ட (அ) விதைத்த 48 மணி நேரத்திற்குள் ஆக்ஸிஃபுளோர் ஃபென் (கோல்) ஒரு
லிட்டருக்கு 1.5-2 மி.லி. அல்லது பெண்டிமெத்திலின்
4 மி.லி என்ற அளவில் நீரில் கலந்து கைத்
தெளிப்பான் கொண்டு தெளிப்பதன் மூலம் நடவு செய்த 30 நாட்கள் வரை களைகள் முளைக்காதவாறு
கட்டுப்படுத்த இயலும். பின்னர், 30 நாட்களுக்குப் பிறகு ஒரு கைகளை எடுப்பதன் மூலம் சிறந்த
முறையில் களை நிர்வாகம் செய்து விளைச்சலை அதிகரிக்கலாம்.
நீர் நிர்வாகம்:
நாற்றுகளை நட்ட அல்லது காய் ஊன்றிய மூன்றாவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
5 நாட்களுக்கு ஒரு முறை மண்ணின் தன்மியக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும். வெங்காயம் பருமன்
பின்பு
அடையும் சமயத்தில் அதாவது நட்ட (அ) விதைத்த 40 நாட்களிலிருந்து மண்ணின் ஈரப்பதம்
குறைத்தால் வெங்காயம் பருமனடைவது பெருமளவில் பாதிக்கப்படும்.