You are on page 1of 2

மாடி தோட்டம் கட்டுரை – Maadi Thottam Essay in Tamil :- உணவே

மருந்தாக உண்டு வந்த காலம் சென்று உணவே நஞ்சாக மாறிவிட்ட


காலத்தில் வாழ்ந்து வருகிறோம் ,இயற்கை விவசாய காய்கனிகள்
என்று விற்கப்படும் காய்கறிகளின் உண்மை தன்மை சாமானிய
மக்களுக்கு விளங்குவதில்லை.

அன்றாட செயற்கை உரமிட்ட விளைபொருட்களை இயற்கை விவசாய


உணவு என்று விற்கும் ஒரு கூட்டமே இங்கு உண்டு ,இவற்றை ஈடு
செய்து நல்ல உணவை உண்பதற்கு வீட்டு தோட்டமே ஒரே வழியாக
மாறிப்போனாலும் ,இன்றைய நாகரிக உலகில் வீட்டு தோட்டமிடும்
வசதியும் இடமும் அனைவருக்கும் அமைவதில்லை ,எனவே தான்
இந்த மாடித்தோட்டம் என்ற செயல்முறை பரவலாக எல்லோரராலும்
ஏற்று கொல்லப்பட்டு தங்களது சொந்த பயன்பற்றிக்கு மாடி விவசாயம்
என்று தொடங்கி இன்று மாடி தோட்ட விவசாய விளைபொருக்கள்
சந்தைகளில் கூட விற்குமளவுக்கு உயர்ந்துள்ளது

நன்மைகலை பற்றி நாம் இந்த கட்டுரையில் காணலாம்

உணவே நஞ்சு
இன்றைய நாகரிக வாழ்வில் விவசாய நிலங்களும் விவசாயிகளும்
குறைந்து வருகின்றனர் ,இதன் காரணமாக குறைந்த இடத்தில அதிக
மகசூல் கொடுக்கும் முறைகளை கையாள வேண்டிய நிர்பந்தத்திற்கு
உள்ளாகி உள்ளனர்.இதன் காரணமாக அதிக மகசூல் முறைகளான
செயற்கை உரமிடுதல் ,செயற்கை பூச்சி கொல்லிமருந்துகள்
பயன்படுத்துவது சாதாரணமாக ஆகிவிட்டது.செயற்கை ரசாயனங்கள்
தங்கள் வேலைகளை செய்வதோடு உணவு விளைபொருள்களிலும்
இணைந்து நம்மை வந்தடைகிறது.

வீட்டு தோட்டம்
பண்டைய விவசாய வாழ்கை முறைகளில் தோட்டம் மற்றும் விவசாய
நிலங்களில் விவசாயம் நடந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு
தோட்டம் பராமரிக்க பட்டு வந்தது ,சமையலுக்கு அத்யாவிசய
தேவைகளான மிளகாய் ,கருவேப்பில்லை ,கொத்தமல்லி போன்றவை
வீட்டின் முன்புறத்திலேயே நடவு செய்யப்பட்டு வந்தது நாம்
அனைவரும் அறிந்ததே

You might also like