You are on page 1of 6

BAHAGIAN A (1-a)

வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என்றால் என்ன?


ஒரு சொற்றொடரில் வேற்றுமைப் பொருளில் சொற்கள் புணர்வதை வேற்றுமைப்
புணர்ச்சி என்பர்.
(எ.டு)
கம்பன் பாடினான்.
கம்பனைப் பாடினான்.
கம்பனோடு பாடினான்.
முதல்சொற்றொடரில் கம்பன் என்னும் பெயர் எழுவாயாக உள்ளது. இரண்டாம்
சொற்றொடரில் அப்பெயர் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு ஏற்றதால்
செயப்படுபொருளாக மாறிவிட்டது; மூன்றாம் சொற்றொடரில் ‘ஓடு’ என்னும் உருபு
சேர்ந்ததால் உடன்நிகழ்ச்சிப் பொருளாக அப்பெயர் மாறியது. இவ்வாறு ஒரு பெயர்
பல்வேறு பொருளைத் தருவதாக மாறுவதற்குக் காரணம் அப்பெயருடன் சேரும் ஐ,
ஓடு முதலிய உருபுகள் ஆகும். இவ்வுருபுகள் பெயரை வேறுபடுத்துவதால்
‘வேற்றுமை உருபுகள்’ எனப்படுகின்றன. வேற்றுமை உருபுகள் ஆறு ஆகும்.
வேற்றுமை உருபுகள் :-
**************************************************
வேற்றுமை உருபுகள் பெயர்களையும் அவற்றின் உருபுகளையும் இனிக் காணலாம்.
1) இரண்டாம் வேற்றுமை - ஐ
2) மூன்றாம் வேற்றுமை - ஆல், ஆன், ஒடு, ஓடு
3) நான்காம் வேற்றுமை - கு
4) ஐந்தாம் வேற்றுமை - இன், இல்
5) ஆறாம் வேற்றுமை - அது, ஆது
6) ஏழாம் வேற்றுமை - கண்
வேற்றுமை உருபுகள் வெளிப்படையாகவும் வரும்; மறைந்தும் வரும். எவ்வாறு
வந்தாலும் அவ்வேற்றுமைப் பொருளை அப்பெயருக்குத் தரும்.
(எ.டு):-
------------------------------------------------
பாடம் படித்தான்
பாடத்தைப் படித்தான்.
முதல் சொற்றொடரும் இரண்டாம் சொற்றொடரும் ஒரே பொருள் தருவதைக்
காணலாம். முதல் சொற்றொடரில் பாடம் என்னும் பெயரில் 'ஐ' உருபு மறைந்து
வந்துள்ளது. அதனால் அச்சொற்றொடரை இரண்டாம் வேற்றுமைத்தொகை
நிலைத்தொடர் என்பர். இரண்டாம் சொற்றொடரில் பாடம் என்னும் அப்பெயரில்,
'ஐ' என்னும் வேற்றுமை உருபு, வெளிப்படையாக வந்துள்ளது. இதனை இரண்டாம்
வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் அல்லது வேற்றுமை விரி என்பர்.
வேற்றுமைத் தொடர் தழுவு தொடராயும் தழாத் தொடராயும் வரும்.
(எ.டு):--
-----------------------------------------------
பால் குடம் (பாலை உடைய குடம்)
பால் குடித்தான் (பாலைக் குடித்தான்)
முதல் தொடராகிய ‘பால் குடம்’ என்பதற்கு என்ன பொருள்? ‘இக்குடம் பாலை
உடையது’ என்பதே பொருள். பால் என்பது குடத்தைத் தழுவாமல் ‘உடைய’
என்பதைத் தழுவி உள்ளதை இத்தொடர் காட்டுகிறது. எனவே இத்தொடர் தழாத்
தொடர் ஆகும். இரண்டாம் தொடராகிய ‘பால் குடித்தான்’ என்பதில் பால் என்பது
குடிக்கப்படும் பொருள். எனவே இத் தொடரில் உள்ள வினைமுற்றான ‘குடித்தான்’
என்பதைப் ‘பால்’ தழுவி வந்துள்ளது. எனவே இத்தொடர் தழுவு தொடர் ஆகும்.
அல்வழிப் புணர்ச்சி :-
**************************************************

ஒரு சொற்றொடரில் வேற்றுமை அல்லாத பொருளில் சொற்கள் புணர்வது


அல்வழிப் புணர்ச்சி எனப்படும்.
(எ.டு.)
ஓடி விழுந்தான்
இச்சொற்றொடரில் வேற்றுமை உருபு எதுவும் மறைந்தோ வெளிப்பட்டோ
வரவில்லை. அதனால் இது வேற்றுமை அல்லாத சொற்றொடர் ஆயிற்று.
வேற்றுமை அல்லாத புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி ஆகும். அவை பதினான்கு
வகைப்படும்.
அல்வழிப்புணர்ச்சியின் வகைகள்:-
**************************************************
1) வினைத்தொகை - கொல்யானை
2) பண்புத்தொகை - செந்தமிழ்
3) உவமைத்தொகை - தாமரைமுகம்
4) உம்மைத்தொகை - இராப்பகல்
5) அன்மொழித்தொகை - பொற்றொடி (வந்தாள்)
6) எழுவாய்த்தொடர் - ஆசிரியர் வந்தார்
7) விளித்தொடர் - நண்பா வா
8) பெயரெச்சத்தொடர் - வந்த மனிதர்
9) வினையெச்சத்தொடர் - வந்து சேர்ந்தார்
10) தெரிநிலை வினைமுற்றுத்தொடர் - உறவினர் வந்தனர்
11) குறிப்பு வினைமுற்றுத் தொடர் - நண்பர் நல்லவர்
12) இடைச்சொற்றொடர் - மற்றொன்று
13) உரிச்சொற்றொடர் - மாநகர்
14) அடுக்குத்தொடர் - உண்மை உண்மை
அல்வழித்தொடர்கள் தழுவு தொடராகவும் தழாத் தொடராகவும் வரும்.
........... ......... ........அல்வழி
தொழில்பண்பு உவமை உம்மை அன்மொழி
எழுவாய் விளிஈர் எச்சம்முற்று இடைஉரி
தழுவு தொடர்அடுக்கு எனஈர் ஏழே (நன்னூல் : 152)

BAHAGIAN A (1-b)

புணர்ச்சி இரண்டு வகைப்படும்.


(அ) வேற்றுமைப் புணர்ச்சி (ஆ)அல்வழிப் புணர்ச்சி

தமிழில்வேற்றுமைகள் எட்டு. இவற்றுள் முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமை


என்று கூறப்படும்.

எட்டாம் வேற்றுமை விளி வேற்றுமை என்று கூறப்படும். இவ்விரு


வேற்றுமைகளுக்கு என்று தனி வேற்றுமை உருபு கிடையாது.

ஏனைய இரண்டு முதல் ஏழு வரையிலான ஆறு


வேற்றுமைகள் ஒவ்வொன்றனுக்கும் தனித்தனி உருபுகள் உண்டு.

அவை பின்வருமாறு:

வேற்றுமை உருபு

இரண்டாம் வேற்றுமை ஐ

மூன்றாம் வேற்றுமை ஆல்

நான்காம் வேற்றுமை கு

ஐந்தாம் வேற்றுமை இன்


ஆறாம் வேற்றுமை அது

ஏழாம் வேற்றுமை கண்


இவ்வுருபுகள் பெயர்ச்சொல்லோடு சேர்ந்து வந்து, அப்பெயர்ச் சொல்லின்
பொருளை வேறுபடுத்துவதால் வேற்றுமை எனப்பட்டன.

சான்று:

இராமன் பார்த்தான்

இராமனைப் பார்த்தான்

இராமனால் பார்த்தான்.

அல்வழிப் புணர்ச்சி

வேற்றுமைப் பொருள் அல்லாத வழியில் நிலைமொழியும் வருமொழியும் புணரும்


புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி எனப்படும். உயர்திணை அல்லாத திணையை
அஃறிணை (அல்+திணை= அஃறிணை) என்று கூறுவதைப் போன்று, வேற்றுமைப்
பொருள் அல்லாத வழி என்பதை அல்வழி என்று தமிழ் இலக்கண
நூலார் கூறினர்.

அல்வழிப் புணர்ச்சியில்,

1. தொகைநிலைப் புணர்ச்சி

2. தொகாநிலைப் புணர்ச்சி என இரு வகைகள் உள்ளன.

தொகைநிலைப் புணர்ச்சி

ஐந்து வகைப்படும்.

1. வினைத் தொகை - ஊறுகாய் (ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காய்)

2. பண்புத் தொகை - செந்தாமரை (செம்மை ஆகிய தாமரை)

3. உவமைத் தொகை - தாமரை முகம் (தாமரை போன்ற முகம்)

4. உம்மைத் தொகை - இராப்பகல் (இரவும் பகலும்)

5. அன்மொழித் தொகை - பொற்றொடி (பொன்னாலாகிய வளையலை


உடையாள்)

இத்தொகைகளில் வினைத் தொகையில் மூன்று கால இடைநிலைகளும்,

பண்புத் தொகையில் ஆகிய என்ற பண்பு உருபும்,

உவமைத் தொகையில் போன்ற என்ற உவமை உருபும்,


உம்மைத் தொகையில் உம் என்ற உம்மை உருபும்,

அன்மொழித் தொகையில் அல்லாத மொழியாகிய (சொல்லாகிய) உடையாள்


என்பதும் தொக்கு வந்தன.

இவை தொகை எனப்பட்டன.

தொகாநிலைப் புணர்ச்சி அல்வழியில் மற்றொரு வகைப்


புணர்ச்சியான தொகாநிலைப் புணர்ச்சி ஒன்பது வகைப்படும்.

1. எழுவாய்த் தொடர் - இராமன் வந்தான்

2. விளித்தொடர் - இராமா வா

3. பெயரெச்சத் தொடர் - வந்த இராமன்

4. வினையெச்சத் தொடர் - வந்து போனான்

5. தெரிநிலை வினைமுற்றுத் தொடர் - வந்தான் இராமன்

6. குறிப்பு வினைமுற்றுத் தொடர் - நல்லன் இராமன்

7. இடைச்சொல் தொடர் - மற்றொன்று

8. உரிச்சொல் தொடர் - நனி நன்று (மிகவும் நன்று)

9. அடுக்குத் தொடர் - பாம்பு பாம்பு

இத்தொடர்களில் இருசொற்களுக்கு இடையே


எந்த உருபும் மறைந்திருக்கவில்லை. எனவே இவை தொகாநிலைத்
தொடர்கள்.

வேற்றுமை ஐம்முதல் ஆறாம், அல்வழி

தொழில், பண்பு, உவமை, உம்மை, அன்மொழி,

எழுவாய், விளி, ஈர் எச்சம், முற்று, இடை,உரி

தழுவுதொடர் அடுக்கு, என ஈர் ஏழே. - நன்னூல் நூற்பா - 152

தொழில் - வினைத்தொகை

ஈர் எச்சம் - பெயரெச்சம் வினையெச்சம்

முற்று - ஈர் முற்று - தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று


ஈர்ஏழு = பதினான்கு.

You might also like