You are on page 1of 21

TAKE HOME EXAMINATION

___________________________________________________________________________

SEMESTER JANUARI 2020


HBTL 3103
PENGAYAAN BAHASA TAMIL 1

_________________________________________________________________________

NO. MATRIKULASI : 870407055396001

NO. KAD PENGNEALAN : 870407055396

PROGRAM : BACHELOR OF TEACHING (PRIMARY


EDUCATION) WITH HONOURS

NO. TELEFON : 0103639687

E-MEL : nmekalah@yahoo.com.my

PUSAT PEMBELAJARAN : PPNS


BAHAGIAN : A
SOALAN : 1

அ)

தமிழ்மொழியில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே எழுத்து

உண்டாகியது. அந்த எழுத்துகளிலும் நாளடைவில் மாறுபாடுகள்

தோன்றலாயின. மொழி சொற்களால் ஆனது. சொல் எழுத்தால் ஆனது.

ஆகவே, எழுத்தே சொல்லுக்கு அடிப்படை ஆகும்.

தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து (letter) என்ற சொல்லானது

மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய

வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ”

என்ற எழுத்து ஒலி வடிவம் மற்றும் வரி வடிவம் இரண்டையும் குறித்து

நிற்கின்றது. தமிழில் முதல் எழுத்துகள் என்பது முப்பது ஆகும். இவை

அல்லாத மற்ற எழுத்துகளும் இந்த மூல எழுத்துகளைச் சார்ந்து உருவான

எழுத்துகளாகும்.

அவ்வகையில், முதல் எழுத்துகளான உயிர் எழுத்துகள் பன்னிரண்டும்

மெய் எழுத்துகள் பதினெட்டும் உள்ளன. உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும்

சேரும்போது இருநூற்று பதினாறு உயிர்மெய் எழுத்துகள் பிறக்கின்றன.

அதோடல்லாமல், தமிழில் சிறப்புடைய ஆய்த எழுத்து ஒன்றும் உள்ளது.

ஆகவே, ‘தமிழ் எழுத்துகள் மொத்தம் 247’ என்று ந.சுப்புரெட்டியார்

குறிப்பிட்டுள்ளார்.

1
உயிர் எழுத்துகள் மொத்தம் பன்னிரண்டு உள்ளன. அவை, அ, ஆ, இ,

ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகும். இதில், உயிர்குறில் மற்றும் உயிர்

நெடில் என்று பிரிக்கப்பட்டுள்ளது. உயிர்குறிலானது அ, இ, உ, எ, ஒ என்று

குறுகிய ஓசையைக் கொண்ட ஐந்து உயிர் எழுத்துகளாகும். இவை

உச்சரிக்கும்பொழுது ஒரு மாத்திரை அளைவைக் கொண்டது.

எடுத்துக்காட்டாக, உயிர்குறில் எழுத்துகளிலான சொற்கள் ‘அணிச்சல், எட்டு,

ஒன்பது, இட்டிலி’ போன்றவையாகும். மாறாக, உயிர் நெடிலானது ஆ, ஈ, ஊ,

ஏ, ஐ, ஓ, ஔ என்று நீண்ட ஓசையைக் கொண்ட ஏழு உயிர்

எழுத்துகளாகும். இவை உச்சரிக்கும்பொழுது இரண்டு மாத்திரை நேரம்

ஒலிப்பவையாகும். எடுத்துக்காட்டாக, உயிர் நெடில் எழுத்துகளிலான

சொற்கள் ‘ஆசான், ஏணி, ஓடம், ஔடதம்’ போன்றவையாகும்.

அடுத்ததாக, தமிழில் மொத்தம் பதினெட்டு மெய்யெழுத்துகள் மூன்று

வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை வல்லினம், மெல்லினம், மற்றும்

இடையினம் என்று ஒவ்வொரு வகையும் ஆறு எழுத்துகளைக்

கொண்டுள்ளன. வல்லின மெய்யெழுத்துகள் ‘க், ச், ட், த், ப், ற்’ ஆகும்,

மெல்லின மெய்யெழுத்துகள் ‘ங், ஞ், ண், ந், ம், ன்’ ஆகும். தொடர்ந்து, ‘ய், ர்,

ல், வ், ழ், ள்’ என்பது இடையின மெய்யெழுத்துகள் ஆகும்.

மேலே குறிபிடப்பட்டுள்ள உயிரும் மெய்யும் புணரும்போது 216

உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன. அவை உயிர்மெய்க்

குற்றெழுத்துகள் மற்றும் உயிர்மெய் நெட்டெழுத்துகள் என்று இரு

வகைப்படும். உயிர்மெய்க் குற்றெழுத்துகள் மொத்தம் தொண்ணூறு உள்ளன.

எடுத்துக்காட்டாக, (ந்+அ=ந) நன்றி, (ச்+ஒ=சொ) சொல், (வ்+இ=வி) விரயம்

2
ஆகும். உயிர்மெய் நெட்டெழுத்துகள் மொத்தம் நூற்று இருபத்து ஆறு

உள்ளன. எடுத்துக்காட்டாக, (ப்+ஆ=பா) பாதை, (ம்+ஈ=மீ ) மீ ன், (த்+ஓ=தோ)

தோடு ஆகும். அதுமட்டுமின்றி, உயிர்மெய்யெழுத்துகள் வல்லின

உயிர்மெய்யெழுத்துகள், மெல்லின உயிர்மெய்யெழுத்துகள், மற்றும்

இடையின உயிர்மெய்யெழுத்துகள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.

இறுதியாக, தமிழ் எழுத்துகளில் ‘ஐ’ என்ற ஆய்த எழுத்து ஒன்று

உள்ளது. இவ்வெழுத்தை முப்புள்ளி, தனிநிலை என்றும் அழைப்பர். ஆய்தம்

தனக்கு முன்னே ஒரு குற்றெழுத்தையும் பின்னே ஒரு வல்லின உயிர்மெய்

எழுத்தையும் துணையாகக் கொண்டு வரும். எடுத்துக்காட்டாக, ‘அஃது, இஃது,

பஃறி, எஃகு, காஃசு’ முதலியனவாகும். ஆகவே, ந.சுப்புரெட்டியாரின்

கூற்றிற்கேற்ப தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 உள்ளன. கீ ழே உள்ள

அட்டவணை 1 ந.சுப்புரெட்டியாரின் கூற்றிற்கேற்ப தமிம் எழுத்துகளின்

வகைகளாகும்.

3
தமிழ் எழுத்துகளின் வகைகள்
உயிர் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ

எழுத்துகள் உயிர்குறில் = 5 (அ, இ, உ, எ, ஒ)

உயிர்நெடில் = 7 (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ) 12
மெய் வல்லினம் (க், ச், ட், த், ப், ற்) - 6

எழுத்துகள் மெல்லினம் (ங், ஞ், ண், ந், ம், ன்) - 6

இடையினம் (ய், ர், ல், வ், ழ், ள்) - 6 18


உயிர்மெய் 18 (மெய்யெழுத்துகள்) x 12 (உயிர் எழுத்துகள்)

எழுத்துகள்
க்+அ = க (வல்லின உயிர்மெய்யெழுத்து)

ச்+ஆ = சா (வல்லின உயிர்மெய்யெழுத்து)

ம்+இ = மி (மெல்லின உயிர்மெய்யெழுத்து)

ந்+உ = நு (மெல்லின உயிர்மெய்யெழுத்து)

ய்+ ஓ = யோ (இடையின உயிர்மெய்யெழுத்து)

உயிர்மெய்க் குற்றெழுத்துகள் (18 x 5) = 90

உயிர்மெய் நெட்டெழுத்துகள் (18 x 7) = 126 216


ஆய்த எழுத்து ஃ 1
மொத்தம் எழுத்துகள் 247

அட்டவணை 1

BAHAGIAN : A
SOALAN : 1

4
ஆ)

தமிழ்மொழியில் ஒத்த ஒலியுடைய எழுத்துகள் சில உள்ளன.

அவை ‘ல, ள, ழ; ன ,ந, ண; ர, ற’ எனும் எழுத்துகள் ஆகும்.

அவ்வெழுத்துகள் கொண்ட சொற்களை ஒலிக்கும்போது, நாம் மிகவும்

கவனமுடன் ஒலித்திடல் அவசியம். இல்லையென்றால், அவற்றின்

பொருள் மற்றும் கருத்து மாறுபட்டுவிடும். அவ்வகையில், ஒத்த

ஒலியுடைய ‘ல, ள, ழ’ எனும் எழுத்துகள் உச்சரிப்பதில் நுண்ணிய

வேறுபாடுகளே இருக்கின்றன.

அவ்வெழுத்துகளை உச்சரிக்க நாம் நம் உடலில் உள்ள சில ஒலி

உறுப்புகள் பயன்படுத்தப்படுத்துகின்றோம். அவை மூக்கு, நாக்கு, வாய்,

பல், மற்றும் இதழ் ஆகும். மேலும், அவ்வுறுப்புகளுடன் சேர்ந்து

வாயறையும் மூக்கறையும் செயல்படுகின்றன. கீ ழ்த்திண்டை,

மேற்தொண்டை, மூச்சுக்குழாய், குரல்வளை, கீ ழண்ணம், மேலண்ணம்

போன்றவையும் ஒத்த ஒலியுடைய ‘ல, ள, ழ’ எனும் எழுத்துகள்

உச்சரிப்பதில் பெரிதும் துணைபுரிகின்றன. ‘ல்’ என்ற எழுத்தை நுனிநா

அண்பல் ஒலி உறுப்பும் ‘ள், ழ்’ என்ற எழுத்துகளை நாவளை ஒலி

உறுப்பும் ஒலி எழுப்புகின்றன.

தமிழ்மொழியில் ஒத்த ஓசையுடைய “ல்” எனும் எழுத்து

பிறப்பதற்குச் சில ஒலி உறுப்புகள் உதவுகின்றன. நாவோரமானது

தடித்து, மேல்வாய்ப்பல்லின் அடிப்பாகத்தைப் பொருந்துவதால் ‘’ல்’’ என்ற

5
எழுத்துப் பிறக்கிறது. அதாவது, ‘’ல்’’ என்ற ஒத்த ஒலியுடைய எழுத்துப்

பிறக்கும்போது அண்பல்லும் முன் நாவும் பொருந்தி குரல்வளை மடல்

அதிரும். உதாரணத்திற்கு, ‘அலகு, பலர், தலம், நிலவு, கொல்லன்,

நல்லவன், கலன்’ போன்றவையாகும்.

தொடர்ந்து, ‘’ள்’’ என்ற ஒத்த ஒலியுடைய எழுத்துப் பிறக்கும்போது

நம் உடலில் உள்ள ஒலித்தல் உறுப்புகளில் மேல் நாவோரத்தைத்

தடித்து, மேல்வாயைத் தடவும்போது பிறக்கின்றது. அதாவது, “ள்” என்ற

எழுத்தை உச்சரிக்கும்போது நமது அண்ணத்தை நாமுனை மடிந்து

பொருந்தி குரல்வளை மடல் அதிர்வு ஏற்படும். உதாரணத்திற்கு, ‘அளவு,

வளம், குளம், பள்ளம், உள்ளம், வெள்ளம், களம், தாளம்’ ஆகியனவாகும்.

மேலும், “ழ்” என்ற ஒத்த ஓசையுடைய எழுத்துப் பிறப்பதற்கும்

நம்மிடையே உள்ள சில ஒலி உறுப்புகள் சேவையாற்றுகின்றன. “ழ்”

என்ற எழுத்தானது நமது மேல்வாயை அதாவது முன் அண்ணத்தை

வளைத்த நாவின் நுனி தடவுவதால் பிறக்கின்றது. அண்பல்லை

நாமுனை மடிந்து பொருந்தும் நிலையில் குரல்வளை மடலில் அதிர்வு

ஏற்பட்டு “ழ்” என்ற எழுத்துப் பிறக்கிறது. உதாரணத்திற்கு, ‘கிழவி, அழகு,

உழவன், பழம், கழகம், வேழம், வழப்பம்’ முதலியனவாகும்.

மேற்கண்ட ஒத்த ஒலியுடைய எடுத்துக்காட்டு சொற்களை

ஒலிக்கும்போது நமது உடலில் உள்ள எந்தெந்த ஒலி உறுப்புகள்

இயங்குகின்றன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அவற்றைச்

சரியாக உச்சரிக்காவிட்டால் பொருள் மயக்கம் ஏற்படும். ஆகவே, இனி

தமிழ்மொழியில் உள்ள ஒத்த ஒலியுடைய எழுத்துகளான ‘ல, ழ, ள’

6
ஆகியவற்றைச் சரியாகவும் தெளிவாகவும் மேலும், அவற்றின்

பிறப்பறிந்து உச்சரிக்க வேண்டும்.

7
BAHAGIAN : A
SOALAN : 3

கலைச்சொல்லாக்கம் எனப்படுவது வேற்றுமொழி கருத்தையோ

அல்லது அதனைச் சார்ந்த சிந்தனையையோ சொந்த மொழியில்

சொல்வதற்காகப் புதிய சொற்களை உருவாக்கியும் அல்லது பழைய

சொற்களைப் புதுப்பித்தும் பயன்பாட்டில் அமல்படுத்துவது ஆகும்.

அறிஞர் பா.வே.மாணிக்கநாயகர் தூயத் தமிழ்க் கலைச்சொற்களை

உருவாக்க முயற்சித்தவர்களுள் ஒருவர் ஆவார். அவரால்

உருவாக்கப்பட்ட கலைச்சொற்கள் இன்றும் வழக்கில் பயன்படுத்தப்பட்டு

வருகிறது.

அவ்வகையில், சொற்பிறப்பியல் துறை வல்லுநரான தமிழ் அறிஞர்

தேவநேயப் பாவாணர் பிறமொழிச் சொற்கலப்பற்ற தமிழின்

தனித்தன்மையைப் போற்றுதற்குரிய வழிமுறைகளை

எடுத்துரைத்துள்ளார்.

அவர் வழக்கற்ற தமிழ்ச் சொற்களை வழக்காறுபடுத்துவதும், இக்கால

நடைமுறைக்குத் தேவையான புதுமையான சொற்களைப் புனைந்து

கொள்வதும் ஆகிய இரு வழிகளையும் கையாளுவதன்வழி, தமிழ்

தனித்து இயங்கும் என்றும் குறிப்பிடுகிறார். அவர் மேலும், புதுச்

சொற்களைப் புனைவதற்கான ஐந்து வழிமுறைகளை

வரையறுத்துள்ளார். அவை விகுதிவழி ஆக்கம், நேர்ச் சொல் காணல்,

8
மொழிபெயர்ப்புவழி ஆக்கம், வேர்ப்பொருள் சொற்காணல் மற்றும்

சிறப்பியற் சொல் காணல் ஆகும்.

தமிழ் அறிஞர் தேவநேயப் பாவாணர் வரையறுத்த முதல்

வழிமுறையானது, விகுதிவழி ஆக்கம் ஆகும். விகுதிவழி ஆக்கம்

எனப்படுவது பொருள் மாறுபாட்டிற்கு ஏற்ப சொற்களைத் திரித்து, ஒரே

சொல்லிலிருந்து பல சொற்களை உருவாக்குவதில் தமிழில் பல விதிகள்

இருக்கின்றன. தமிழில் அம், அல், கை, கு, ஐ, கி, ளி, உள், காடு, பாடு,

ஆல், அவை, அனம், இனம், அடம், இடம் முதலிய முப்பதுக்கும்

மேற்பட்ட பெயர் ஈறுகள் இருக்கின்றன.

அதுமட்டுமின்றி, வினை முதலீறுகள், செயப்படுப்பொருள் ஈறுகள்

போன்ற ஈற்று வகைகளையும் பெருமைப் பொருள் மற்றும் குறுமைப்

பொருள் முதலியன பற்றியும் முன் பின் ஒட்டுகளையும் பயன்படுத்திப்

பல வகையான சொல்லாக்கத்தை உருவாக்கலாம் என்று பாவாணர்

குறிப்பிட்டுள்ளார். உதாரணத்திற்கு, ‘bacteria’ எனும் சொல். இந்தச்

சொல்லானது சிறு குச்சுப் போல் தோன்றும் ஒரு புழுவின் பெயராகும்.

ஒட்டுவழிச் சொல்லாக்கத்தைப் பயன்படுத்தி இதனைக் குறிக்கும்

வகையில் தமிழில் ‘குச்சில்’ எனும் சொல்லைத் தமிழ்ச் சொல்லாக

உருவாக்கலாம் என்று கூறியுள்ளார் தேவநேயப் பாவாணர்.

தொடர்ந்து, புதுச் சொல் புனைவதற்கான இரண்டாவது

வழிமுறையானது நேர்ச் சொல் காணல் ஆகும். நேர்ச் சொல் காணல்

என்பது ஆங்கிலச் சொல்லை எந்தப் பொருள் மற்றும் கருத்து

அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதோ அதே பொருள் அல்லது

9
கருத்தினையை மூலமாகக்.கொண்டு தமிழ்ச் சொல்லை உருவாக்குதல்

ஆகும். உதாரணத்திற்கு, ‘mail’ என்ற ஆங்கிலச் சொல்லானது ‘பை’ என்ற

பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பிறகு, அச்சொல்லானது

பைக்குள் இருக்கும் கடிதங்களையும் அவற்றைக் கொண்டு செல்லும்

புகை வண்டியையும் குறித்த்தாகும். ஆகவே, ‘mail’ எனும் சொல்லை

அஞ்சல் என்று கூறலாம் என்கிறார் தமிழ் அறிஞர் தேவநேயப்

பாவாணர்.

மூன்றாவதாக, தேவநேயப் பாவாணர் வரையறுத்தள்ள புதுச்

சொற்களைப் புனைவதற்கான வழிமுறையானது மொழிபெயர்ப்புவழி

ஆக்கம் ஆகும். மொழிபெயர்ப்புவழி ஆக்கம் என்பது ஆங்கலச் சொல்லை

எந்த மாற்றமும் இன்றி உள்ளவாறு அப்படியே மொழிபெயர்த்தல் ஆகும்.

இது சொல்லாக்கத்திற்கு மிகவும் துணை செய்யும். உதாரணத்திற்கு,

‘duodenum’ எனும் சொல்லானது பன்னிரண்டு எனும் இலத்தின் எனும்

எண்ணுப்பெயராகும். அஃது, ஆங்கிலத்தில் பன்னிரு அங்குலம் அளவுள்ள

சிறு குடற்பகுதியைக் காட்டுகின்றது. ஆகவே, அச்சொல்லைப் ‘பன்ன ீரம்’

என்று தமிழில் உருவாக்கலாம் என்கிறார்.

அடுத்ததாக, தேவநேயப் பாவாணர் வரையறுத்தள்ள புதுச்

சொற்களைப் புனைவதற்கான வழிமுறையானது வேர்ப்பொருள் சொல்

காணல் ஆகும். வேர்ப்பொருள் சொல் காணல் எனப்படுவது, பிறமொழிச்

சொல்லின் மூலத்தினை அறிந்து அதற்கேற்றவாறு தமிழில்

சொல்லாக்கம் செய்வதை இவ்வகையில் அடக்கலாம் என்று கூறுகிறார்

அறிஞர். உதாரணத்திற்கு, ‘pen’

10
என்ற ஆங்கலச் சொல்லானது ’feather’ (தூவி) எனப் பொருள்படும். இது ‘penna’

எனும் இலத்தின் மொழியில் சொல் திரிபு ஆகும். ஆகவே, ‘pen’ என்ற

ஆங்கிலச் சொல்லுக்கும் ‘தூவல்’ என்று தமிழில் சொல்லாக்கம்

செய்யலாம் என்று வரையறுக்கிறார் பாவாணர்.

மேலும், சிறப்பியற் சொல் காணல் என்பது புதுச் சொற்களைப்

புனைவதற்காக அறிஞர் குறிப்பிட்டுள்ள ஐந்தாவது வழிமுறையாகும்.

இம்முறையில், ஒரு பொருளின் சிறப்பியல்பைக் கருத்தில் கொண்டு

பெயரிடும் தன்மையானது தமிழ் மரபில் இருக்கிறது என்று பாவாணர்

கூறுகிறார். ‘வாழை’ எனும் சொல்லானது நம் முன்னோர்களால்

பெயரிடப்பட்டது. வாழையானது ‘அடி வழ வழ’ என்றிருக்கும் சிறப்புத்

தன்மையைப் பெற்றிருப்பதால் அப்பெயர் சூடப்பட்டது. அம்மரபின்

வழியாகச் சொல்லாகத்தினையை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக,

‘train’ என்பதனைப் புகைவண்டி என்றும் ’cycle’ என்பதனை மிதிவண்டி என்றும்

இவ்வகையிலேயே அமையப்பெற்றன.

எனவே, கண்டுபிடித்தவரின் பெயரால் அல்லது இடப்பெயரால்

அமைந்துள்ள பொருள்கள் அல்லது கலைமுறைகளை உள்ளவாறே

ஒலிபெயர்த்துச் சொல்லாக்கம் செய்ய வேண்டும் என்று தமிழறிஞர்

பாவாணர் தமது புதுச் சொல் புனைவதற்கான வழிமுறைகளில் தெள்ளத்

தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இது, புதிய கலைச்சொல்லாக்க

முயற்சியில் ஈடுபடும் ஒரு கல்வி ஆய்வாளரான எனக்கு தேவநேயப்

பாவாணர் வரையறுத்தள்ள வழிமுறைகள் பெரிதும் துணைபுரிகின்றன.

11
BAHAGIAN : B
SOALAN : 1

சிறுகதை என்பது அரை மணி முதல் 2 மணி நேரத்திற்குள் படித்து

முடிக்கும் அளவில் எழுதிட வேண்டும் என்று எட்கார் என்பவர் கூறியுள்ளார்.

தமிழ் நாட்டுப் பேராசிரியர்களுள் சிலர் தாளில் 5 அல்லது 6 பக்கத்தில்

எழுதுவது சிறுகதை என்கிறார்கள். மேலும், சிலர் இரண்டாயிரத்திலிருந்து

மூவாயிரம் சொற்களுக்குள் சிறுகதை இருத்தல் வேண்டும் என்கிறார்கள்.

அவ்வகையில், புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர்களில், ஆசிரியர்

ஜெயகாந்தனும் ஒருவராவார். எழுத்தாளர் புதுமைப்பித்தனுக்குப் பிறகு,

சமுதாயத்தின் நலிந்த பகுதிகளை அப்படியே சிறுகதைகளாக

எழுதியவர்களில் ஆசிரியர் ஜெயகாந்தனும் ஒருவர் என்பது

குறிப்பிட்டத்தக்கது. அவரின் படைப்புகளெல்லாம் தம் சமுதாயத்தினரின்

உணர்ச்சிகள், நலிவுகள் மற்றும் இலட்சியங்கள் போன்றவற்றை

உள்ளடங்கியவைகளாகவே அமையப்பெற்றுள்ளன. அவற்றுள் அவர் எழுதிய

‘அக்கினி பிரவேசம்’ எனும் சிறுகதையானது பல சமுதாயச் சிந்தனைகளைக்

கொண்டுள்ளது.

12
‘அக்கினி பிரவேசம்’ எனும் சிறுகதையில் ஒரு பள்ளி (ஹைஸ்கூல்)

மாணவி பள்ளி முடிந்து பேருந்துக்காகக் காத்திருக்கிறாள். அப்பொழுது,

கனத்த மழையும் பெய்துகொண்டிருக்கின்றது. நெடுநேரம் ஆகியும் அவள்

வடு
ீ செல்ல வேண்டிய பேருந்து வரவில்லை. அப்பொழுது, அவ்வழியே ஓர்

இளைஞன் மகிழுந்தில் வந்து, அவளை வட்டில்


ீ கொண்டுவிடுவதாகச் சொலி

அழைக்கிறான். அவளும் சற்றுச் தயங்கி பின் அவனுடன் செல்கிறாள். பிறகு,

மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த இளைஞன் அம்மாணவியிடம்

தவறான நோக்கத்தில் நெருங்குகிறான். அவளும் விரக தாபத்திற்கு

இரையாகித் தன்னை இழக்கிறாள். இச்சூழலில் எழுத்தாளர், முன் பின்

தெரியாத அல்லது அறிமுகமில்லாத நபர்கள் அழைத்தாலோ அல்லது

தாமாகவே உதவ முன்வந்தாலோ அதனை ஏற்றுக்கொண்டால் சில

சமயங்களில் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை

சமுதாயத்திற்கு எடுத்துரைத்துள்ளார். அம்மாணவி, முன் பின் தெரியாத

இளைஞனின் அழைப்பை ஏற்றுச் சென்றமையால் அவனது போலியான

அன்புக்கு இரையாகித் தன்னையை இழந்த துயரச் சம்பவம்வழி, அறிமுகம்

இல்லாதவர்களுடன் செல்லாக்கூடாது என்பதை விவரிக்கின்றது.

தொடர்ந்து, பள்ளி மாணவி மழையில் நனைந்துகொண்டே வடு


திரும்புகிறாள். மகளின் அலங்கோல நிலையைக் கண்ட அவளின் விதவைத்

தாய் நடந்ததை அறிந்துகொள்கிறாள். கோபத்தில் தன் மகளை திட்டி

அடிக்கிறாள்; வேதனையில் துடிக்கிறாள். இதுபோன்ற சூழல்கள்

ஏற்படும்போது பல தாய்மார்கள் என்ன செய்வதென்று அறியாது அழுது

புலம்புவர். ஆனால், இச்சிறுகதையில் அப்பெண்ணின் தாய் சாமர்த்தியமாகத்

13
தன் மகளுக்கு நடந்த அசம்பாவிதத்தை விசாரிக்க வந்தப் பக்கத்துவட்டு

மாமியிடம் மறைத்துச் சமாளிக்கிறாள். அந்த மாமி சென்றவுடன்,

அப்பெண்ணின் தாய் ஆர்ப்பாட்டத்தைக் குறைத்துகொண்டு வட்டைத்


தாழிடுகிறாள். அதன் பின், தன் மகளின் தலையில் குடம் குடமாய் நீரை

ஊற்றிக்கொண்டே அந்த இளைஞனைப் பற்றி விசாரிக்கிறாள். அறியாப்

பருவத்தில் தன்னையே இழந்த மகள் தன் அம்மாவிடம் நடந்ததை

மறைக்காமல் கூறுகிறாள். அத்தாயும் விஷயம் அறிந்து, மகளுக்கு ஆறுதல்

கூறுகிறாள். ஒரு தாயிற்குத்தான் தெரியும் அவள் மகளின் மனம். தன்

மகளின் மனதில் அழுக்கு இல்லை என்பதை ஒரு தாய் அறிந்துகொண்டது

போல் இவ்வுலகம் அறியாது. அதனால், நடந்த அசம்பாவிதத்தை யாரிடமும்

சொல்லக்கூடாதென்று தன் மகளைச் சத்தியம் செய்ய வைக்கிறாள்.

அவளும் அதற்கு இசைந்து, நிதானமாக இப்பொழுது கல்லூரிக்குப் போய்க்

கொண்டிருக்கிறாள். இவ்வாறு, ஒரு தாய் செய்யாமால் மாறாக, நடந்ததை

எப்பொழுதும் கூறிக்கொண்டே இருந்திருந்தால் அப்பெண் மனதளவில்

நிலைகுழைந்திருப்பாள். எழுத்தாளர் இச்சூழலின்வழி, நாம் நம்

வாழ்க்கையில் நடந்த துயரச் சம்பவங்களையே எண்ணி வாழ்க்கை

முடிந்துவிட்டது என மனம் வருந்தாமல் மாறாகத், தொடர்ந்து

வாழ்க்கையில் பீடு நடைபோட வேண்டும் என்பதை இந்தச் சமுதாயத்திற்கு

மிகச் சிறப்பாக உணர்த்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அவ்விதவைத் தாய் தனது அறியாப் பருவத்தில்

தன்னையே இழந்த மகளின் தலையில் குடம் குடமாய் நீரை ஊற்றுகிறாள்.

தனது மகள் உள்ளத்தால் மாசு படியவில்லை; உடலால்தான்

14
மாசுப்பட்டுள்ளாள் என்பதால் குடம் குடமாய் ஊற்றும் இந்த நீர் நெருப்புக்குச்

சமம் என்கிறாள். இந்த நெருப்பானது தன் மகளின் மேல் படிந்திருக்கும்

கறையை அகற்றி, அவளைப் பரிசுத்தப்படுத்திவிட்டதாகக் கூறுகிறாள். இந்தச்

சூழலில் ஒரு தாயே தன் மகளுக்கு நேர்ந்த அசம்பாவிதத்தைத்

துடைத்தொழிந்து, அவளைப் புனிதப்படுத்தும் சம்பவம்வழி எழுத்தாளர்

சமுதாயச் சிந்தனையை வெளிபடுத்தியுள்ளார். அதாவது, நம்

வாழ்க்கையிலும் வட்டிலும்
ீ நடக்கும் பிரச்சனைகளுக்கு நாமாகவேதான்

தீர்க்க முன்வர வேண்டும். பிறர் எண்ண சொல்வார்கள், ஊர் என்ன பேசும்,

இந்த உலகம் என்ன கூறும் என்று எண்ணாமல் உள்ளத்தாலன்றி உடலால்

மாசுபடுவது கற்பை இழந்ததாகவே எடுத்துக் கொள்ளமுடியாது என

இக்கதையில் எழுத்தாளர் இவ்வாறு நியாயப்படுத்துகிறார்.

தொடர்ந்து, இச்சிறுகதையின் முடிவானது நம் தமிழினத்தவர்

புனிதமாகக் கருதும் பெண்ணின் கற்புக்கு மாசு படிந்தாலும் அறிவுப்

பூர்வமாக ஆராய்ந்து பார்க்கையில், அவள் வாழத் தகுதியுடையவள்

என்பதை அப்பெண்ணின் தாயின் மூலம் இச்சமுதாயத்திற்கு உணர்த்துவதாக

அமையப்பெற்றுள்ளது. முன்பெல்லாம், கணவன்மார்களை இழந்தப் பெண்கள்

தாங்கள் பரிசுத்தமானவர்கள் என்பதை நிரூபிப்பதற்கு உடன்கட்டை ஏறினர்.

அதுபோன்று, இன்று சந்தர்ப்ப சூழ்நிலையில் சிக்கித் தங்களின் கற்பை

இழக்கும் பெண்கள், தண்ண ீரை அக்கினியாகக் கருதி தலைமுழுகி

தங்களைப் புனிதப்படுத்திக்கொள்கிறார்கள். மேலும், நடந்த சம்பவத்தை

யாரிடமும் கூறாமலும் அதனால் தங்களின் எதிர்காலமே அழிந்துவிட்டது

என்று எண்ணாத மனப்பக்குவம் இருக்கவேண்டும். அதோடல்லாது, சந்தர்ப்ப

15
சூழ்நிலையால் கற்பைப் பறிகொடுத்த தன் மகளைத் தாயே

புனிதப்படுத்தவதாக இக்கதையின் முடிவு அமையப்பெற்றுள்ளது.

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அறிந்தும் அறியாமலும் செய்யும்

காரியங்களினால் பல சோதனைகளையும் சிக்கல்களை எதிர்நோக்குவர்.

அவ்வகையில், இச்சிறுகதையில் வரும் பள்ளி மாணவி தமது அறியாப்

பருவத்தில் ஓர் இளைஞனின் போலியான அனுதாப அழைப்பை ஏற்றுத் தன்

கற்பை இழந்துவிடுகிறாள். இதுபோன்ற, சூழ்நிலைகளை ஒரு விபத்தாகக்

கருதி ஆர்ப்பாட்டமின்றி அமைதியான முறையில் நன்கு சிந்தித்துச்

செயல்பட வேண்டும். இதுவே, அப்பெண்ணின் தாய் நடந்த சம்பவத்தை

ஆர்ப்பாட்டப்படுத்தி, விசாரிக்க வந்தப் பக்கத்து வட்டு


ீ மாமியிடம்

கூறியிருந்தால், அவள் அந்த அசம்பாவிதத்தைக் காட்டுத் தீப்போல் பரவச்

செய்திருப்பாள். ஆனால், அந்தப் பெண்ணின் தாய் அவ்வாறு செய்யாது

மாறாக, தன் மகளின் மானமும் குடும்ப மானமும் காக்கப்பட வேண்டும்

என்று கருதி மகளின் தலையில் நீரை ஊற்றிப் புனிதமடையச் செய்கிறாள்;

அவள் வாழத் தகுதியுடையவள் என்பதையும் தாயின்வழி இக்கதையில்

வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கதையின் முடிவு எதிர்பாராத திருப்பதை

அமையப்பெற்றுள்ளது என்பதைவிட ஏற்புடைய யதார்த்தமான முடிவைக்

கொண்டுள்ளது.

ஆகவே, மனித வாழ்வில் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் ஏற்படும் சில

தவறுகளைப் பெரிதுப்படுத்தாமல் அதலிருந்து மீ ண்டு வந்து வாழ்க்கையில்

பிரகாசிக்க வேண்டும்.

16
BAHAGIAN : B
SOALAN : 2

மாணவர்களுக்குப் பாடங்களைப் போதிப்பவர்களை ஆசிரியர் என்போம்.

ஆசிரியர் எனும் சொல்லை (ஆசு+இரியர்) என்று பதம் பிரிப்போம். ‘ஆசு;

என்றால் குற்றம் மற்றும் ‘இரியர்’ என்றால் அதை அகற்றுபவர்.

மாணவனுக்குப் பாடங்களில் ஏற்படும் ஐயங்களைத் தீர்த்து, அவனைத்

தெளிவடையச் செய்பவரே ஆசிரியர் ஆவார்.

அத்தகைய ஆசிரியர் பணி அறப்பணி என்றும் அதற்கே உன்னை

அர்ப்பணி என்றும் கூறுகிறார்கள். ஆசிரியர் இல்லையென்றால் இவ்வுலகில்

மனித வாழ்வு என்பதே கிடையாது எனலாம். மாணாக்கர்களின் கல்வியில்

முக்கியமான இடம் வகிப்பர்கள் ஆசிரியர்கள்தாம். ஆனால், இன்றைய

கல்வி முறையில் தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றிவரும் பெரும்பாலான

ஆசிரியர்கள் மாணாக்கர்களின் மனதைத் தொடும் வண்ணம் போதிப்பது

கிடையாது.

பாட வேளையில், ஒரு மாணவனின் மனதை ஈர்த்துப் பாடத்தின்பால்

கவனமும் ஈர்ப்பும் வருவதற்க்கு ஆசிரியர்களுக்கு நகைச்சுவை உனர்வு

17
என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆனால், இன்றைய காலக்கட்டங்களில்

தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான தமிழாசிரியர்கள்

நகைச்சுவை உணர்வு இல்லாத நிலையிலேயே கற்றல் கற்பித்தலை

மேற்கொள்கின்றனர்.

“வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்கிறார்கள். ஆனால்,

இன்றைய 2020 தூர நோக்கில் ஆசிரியர்களின் பணிசுமை அதிகமாகின்றது.

பாட வேளையில் போதிப்பதைத் தவிர்த்துப், பல அலுவல்களைச்

செய்கின்றனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆசிரியர்கள்

பெரும்பாலும் பாட வேளையில் மாணவர்களுக்கு நகைச்சுவை உணர்வுடன்

போதிக்காமல், அவர்களின்மீ து கோபம் கொள்கிறார்கள்; திட்டுகிறார்கள்.

இதனால், மாணவர்கள் ஆசிரியர்களை நெருங்கி பாடங்களில் ஏற்படும்

குழப்பங்களைக் கேட்க பயப்படுகிறார்கள். நாளடைவில், இதுவே

மாணவர்கள் கல்வியில் பின் தங்க காரணமாக அமைந்துவிடுகிறது.

ஆகவே, அத்தகைய தமிழாசிரியரகளுக்குப் பாட போதனையின்போது

நகைச்சுவை உணர்வு மேலோங்க சில வழிமுறைகள் உள்ளன. பாட

வேளையில் போத்திக்கும் தமிழாசிரியர்கள் மாணாக்கர்களுக்குப் பசி உணர்வு

ஏற்படாதவாறு அவர்களின் நகைச்சுவை உணர்வு ஆட்கொண்டிருத்தல்

வேண்டும். ஆசிரியர்களிடையே நகைச்சுவை உணர்வு மேலோங்க, அவர்கள்

நகைச்சுவைகளை நிறைய வாசிக்கவும் கேட்கவும் பார்க்கவும் வேண்டும்.

இவ்வாறான, நகைச்சுவைகளைத் தினமும் வாசித்தும், கேட்டும் பார்த்தும்

வருவதால் அவர்களின் மன அழுத்தம் குறையும். ஆசிரியர்களும்

18
அந்நகைச்சுவை உத்திகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பாட

வேளையில் போதிக்கலாம்.

தொடர்ந்து, தமிழாசிரியர்களிடையே நகைச்சுவை உணர்வை

மேலோங்க செய்ய அதன் தொடர்பான சில கருத்தரங்கு, பணிமனை

போன்றவற்றில் கலந்துகொள்ளலாம். அவற்றில் கலந்துகொள்வதனால் பாட

வேளையில் எவ்வாறான நகைச்சுவை உணர்வு உத்திகளை ஓர் ஆசிரிய

கையாளலாம் எனும் அறிவு கிடைக்கப்பெறுகின்றது. அதனைக் கொண்டு

ஆசிரியர்கள் தங்களின் போதனா முறையை நகைச்சுவை கலந்து

போதிக்கலாம். இதனால், மாணவர்களும் ஆசிரியர்களுடன் நட்பாய் பழகுவர்.

ஆசிரியர்களை நாடி பாட ஐயங்களைக் களைவார்கள். மாணவர்களுக்கும்

ஆசிரியர்களைப் பிடிக்கும். ஓர் ஆசிரியரைப் பிடிக்கும்போது, அவர்

போதிக்கும் பாடத்தின்மீ தும் அக்கறையும் நாட்டமும் அதிகமாகும்.

அப்பாடத்தைச் சிறப்புர கற்று சிறந்த தேர்ச்சி பெற வழிவகுக்கும்.

அதுமட்டுமின்றி, ஓர் ஆசிரியர் தம்மிடமுள்ள நகைச்சுவை உணர்வை

மேலோங்க செய்ய அவர் அன்றாட வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான

உணவு, உடற்பயிற்சி, தியானம், யோகா போன்ற நெறிகளைக் கையாளலாம்.

சரியான உணவும் முறையும் முறையான உடற்பயிற்சியும் அவரது

உடலைப் பல நோய்களிலிருந்தும் ஆட்கொண்டு மன அமைதியைக்

கொடுக்கின்றன. அவ்வாறு, மன அமைதியுடன் வகுப்பிற்கு நுழையும் ஓர்

ஆசிரியர் மாணவர்களுடன் சகஜமாகப் பேசி போதிக்க வழிவகுக்கும்.

தொடர்ந்து, பாட போதனையின் முறையான கற்றல் கற்பித்தல்

நடவடிக்கைகளை முன்கூட்டியே முறையாகத் திட்டமிட்டும் அவற்றில்

19
விளையாட்டு முறை, நகைச்சுவை அங்கமும் கலந்து போதிக்கும் போது

ஆசானுக்கும் மாணக்கர்களுக்கும் இடையே உள்ள உறவு வலுவடைகின்றது.

மேலும், பள்ளியில் சக ஊழியர்களுடன் நல்ல உறவும் மகிழ்ச்சியான

சூழலும் அந்த ஆசான் நகைச்சுவை உணர்வுடன் போதிக்க துணைபுரிகின்றது.

ஆகவே, ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோரிடம் மகிழ்ச்சியான சூழல்

காணப்பட்டால், இன்னும் நல்ல ஆரோக்கியமான விளைவுகளைக்

காணமுடியும். அந்த மகிழ்ச்சியான சூழலை உருவாக்க சிரிப்பும் நகைச்சுவை

உணர்வும் இன்றியமையாததாகும். பாட வேளையில் ஆசிரியரின்

நகைச்சுவை உணர்வுமிக்க போதனா முறை மாணவர்களை வாய்விட்டுச்

சிரிக்க தூண்டுகின்றது. அவ்வாறு, வாய்விட்டுச் சிரிக்கும் மாணாக்கர்களின்

கவலைகள், ஐயங்கள் மறந்து போகின்றன. அவர்களின் மூளை

நிதானமடைகின்றது; நரம்பு மண்டலங்கள் செயல்பட ஆரம்பிக்கின்றன.

சிரித்தபின் மாணவர்கள் சிந்திப்பர். சிந்தித்தப்பின் விவேகமாகச்

செயல்பட்டுக் கல்வியில் சிறந்து விளங்குவர். இத்தகைய நன்மைகளை

அளிக்கும் நகைச்சுவை உணர்வை ஒவ்வோர் ஆசிரியரும் பாட

போதனையில் கடைப்பிடிப்பது சிறப்பாகும்.

20

You might also like