கூடும். அவ்வாறு அவனின் போராட்டத்திலும், பின்னர் அவனின்
வெற்றியிலும் அவனுடன் உறுதுணையாக நிற்க தமிழ் இதழ்கள் என்றுமே
தயங்கியது இல்லை எனலாம்.
சான்றாக :
படம் 1.0 : மக்கள் ஓசை நாளிதழ், 06.09.2022
இங்கே, 21 வயதே ஆன, தயாளினி குணரேகரன் என்பவரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவைப் பற்றி நாளிதழ் ஒன்று ஒரு முழுப்பக்கச் செய்தியை வெளியீடு செய்துள்ளது. செல்வி தயாளினி என்பவர் நாடறிந்த எழுத்தாளரோ, பெரிய அரசியல் தலைவரோ, செல்வந்தரோ கிடையாது. தமிழ் மீது பற்றுக் கொண்டு கவிதைகள் எழுதுவதில் திறமைமிக்கவர். அவரின் திறமையையும் ஆர்வத்தையும் மதித்து ஒரு முழுப்பக்கச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது, அவருக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் புதிய முயற்சியில் துணிவுடன் ஈடுபட தன்முனைப்பாகவும் உத்வேகமாகவும் அமையும் என்பது திண்ணம்.
2.3 இளையோரின் அறிவு வளர்ச்சிக்கு வித்திடும் தமிழ்மொழி இதழ்கள்
இன்றைய இளைஞர்களியே வாசிக்கும் வழக்கம் நாளுக்கு நாள் குறைந்து
கொண்டே வருகிறது என ஆய்வுகள் காட்டுகின்றன. இப்படியான ஒரு சூழலில், அடுத்தக்கட்ட சமூகமானது அறிவுசார் சமூகமாக நிலைத்து நீடித்திருப்பதை உறுதி செய்வது அனைவரின் கடமையாகும். அந்த வகையில், இதைக் கருத்தில் கொண்டு நம் நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் தமிழ்ப்பிரிவுகள், குறிப்பாக மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை மற்றும் சுல்தான் இத்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஆகியன சில ஆண்டுகளாக இளைஞர்களை இலக்காகக் கொண்டு ஆய்விதழ்களை வெளியிட்டு வருகின்றன.
சான்றாக :
படம் 2.0 : வளர்தமிழ் ஆய்விதழ், 18.08.2020
இந்த ஆய்விதழில், திருக்குறள் பரவலாக்கம், சங்க இலக்கியத்தில் கோள்கள், மலேசிய இந்தியர்களின் குண்டர் கும்பல் சிக்கல் எனப் பல்தரப்பட்ட தலைப்புகளைச் சேர்ந்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதனை இன்றைய இளையோர்கள் படிக்கும் போது, அவர்கள் தமிழ்மொழி வளத்தைத் தாண்டி சமூகவியல் சிந்தனையுடையவர்களாகவும் வளம் வருவார்கள்.