You are on page 1of 16

UJIAN BERTULIS

OGOS 2 Jam

ARAHAN :

1. Buka kertas soalan ini apabila diberitahu.

2. Tulis nama dan angka giliran anda pada ruang yang


disediakan.

3. Jawapan anda hendaklah ditulis pada ruang jawapan yang


disediakan dalam kertas soalan ini.

4. Kertas soalan ini hendaklah diserahkan kepada pengawas


peperiksaan pada akhir peperiksaan.

பிரிவு புள்ளி பெற்ற புள்ளி


அ 20

ஆ 35

இ 15

ஈ 30

மொத்தம் 100
NAMA : ………………………………………………………..…

ANGKAGILIRAN:

1
பாகம் : 1
[ 1 மணி 15 நிமிடம் ]
பிரிவு அ : இலக்கணமும் மொழியணியும்
( 20 புள்ளி )

1 தாயார் கயல்விழியை உலையில் இருக்கும் சாம்பாரை இறக்கி வைக்கச் சொன்னார்.

மேலே உள்ள வாக்கியத்தில் இருக்கும் ஆகு பெயரை எடுத்து எழுதுக.

_________________________________________________________________________________
________
( 1 புள்ளி )

2 பிரித்து எழுதுக.

பன்னிரண்டு = _____________________________________
( 1 புள்ளி )

3 (அ) கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களிலுள்ள பிழைகளை அடையாளங்கண்டு


அவற்றுக்கு வட்டமிட்டுக் காட்டுக.

i) தைப்பூசத்தன்று பக்தர்கள் பாற்க்குடம் ஏந்திச் சென்றனர்.

ii) பேச்சு போட்டியில் முதல் பரிசு வென்ற அறிவுமதிக்கு நண்பர்கள் வாழ்த்து


தெரிவித்தனர்.

iii) ஆசிரியர் வகுப்புத் தலைவனிடம் மறுநாள் தமிழ் வகுப்பு நடைபெறாது என்று மற்ற
மாணவர்களிடம் தெரிவிக்கும்படிக் கூறினார்.

( 3 புள்ளி )

(ஆ) கீழ்க்காண்பனவற்றுள் எது வினையெச்சம் கொண்ட வாக்கியம் ?

A கவிஞர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.


B பாட்டி சொன்ன கதை மிக அருமையாக இருந்தது.
C மாணவர்கள் சிலப்பதிகாரக் கதையைப் படித்து முடித்தனர்.
( 2 புள்ளி )

(இ) நேர்க்கூற்று வாக்கியம் ஒன்றனை எழுதுக.

_________________________________________________________________________________
________
( 3 புள்ளி )

2
4 (அ) விடுபட்ட காலி இடங்களைச் சரியான மொழியணிகளைக் கொண்டு நிறைவு
செய்க.

(i) _______________________________ நிறைந்த பாலன், தன் பக்கத்துக்


கடைக்காரரின் முன்னேற்றத்தைத் தடுக்கப் பல சதி வேலைகளைச் செய்தான்.

(ii) தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாத ஐயர், சங்ககாலத் தமிழ் ஓலைச்சுவடிகளை


_______________________________ இல்லாமல் ஊர் ஊராகத் தேடி அலைந்தார்.

(iii) மலேசியக் கிண்ணக் காற்பந்தாட்ட இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவிய


கவலையில் இருந்த பினாங்கு குழு, எப்.ஏ. கிண்ணப் போட்டியிலும் தோற்றது
_______________________________ போலாயிற்று.

(iv) பி.தி.3 தேர்வில் 10 ஏக்கள் பெற்ற கார்த்திகேயன் எஸ்.பி.எம். தேர்விலும் சிறந்த


தேர்ச்சியினைப் பெற _______________________________.

(v) _______________________________ என்பதற்கேற்ப பல கொலை கொள்ளைகளில்


ஈடுபட்டு வந்த சுகியார்த்தோ காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

விடைகள் :

i ____________________________________________________

ii ____________________________________________________

iii ____________________________________________________

iv ____________________________________________________

v ____________________________________________________

i. நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல


ii. கள்ளங்கபடு
iii. அண்டை அயலார்
iv. ஆணித்தரம்
v. கங்கணம் கட்டுதல்
vi. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
vii. பதறாத காரியம் சிதறாது
viii. ஊண் உறக்கம்
ix. கையாலாகாதவன்
x. அடாது செய்பவன் படாது படுவான்

( 5 புள்ளி )

3
(ஆ) கீழ்க்காணும் திருக்குறளை நிறைவு செய்க.

சொல்லுதல் வல்லார்ப் பெறின்

_______________________________________________________________________________________
__
( 2 புள்ளி )

(இ) i) கீழ்க்காணும் செய்யுளில் விடுபட்ட அடியை எழுதுக.

விறகில் தியினன் பாலில் படுநெய்போல்

____________________________________

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

_________________________________________________________________________________
________
( 2 புள்ளி )

ii) மேற்காணும் செய்யுளில் தடிப்பாக்கப்பட்ட சொற்றொடரின் பொருளை எழுது.

_________________________________________________________________________________
________
( 1 புள்ளி )

4
பிரிவு ஆ : கருத்துணர்தல்

(35 புள்ளி)

5 கீழ்க்காணும் கவிதையை வாசித்துத் தொடர்ந்துவரும் வினாவுக்கு எழுதுக.

வன்செயல் கும்பலின் நட்பு உறவால்

வம்பும் வழக்கும் பெருகும் – நல்ல

அன்பு நிறைந்தவன் நட்பும் உறவில்

ஆயிரம் நன்மைகள் சிறக்கும்

- ஜெங்கா அப்துல் ரஹீம்

மேற்காணும் கவிதைக் கண்ணி உணர்த்தும் கருத்து யாது ?

_________________________________________________________________________________

_________________________________________________________________________________
(2 புள்ளி)

6 கீழ்க்காணும் அறிவிப்பை வாசித்துத் தொடர்ந்துவரும் வினாவுக்கு விடை எழுதுக.

முக்கிய அறிவிப்பு !
இதன் மூலம் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் பல உலக நாடுகளில் சக்கைப்போடு
போட்டுக் கொண்டிருக்கும் பாகுபலி திரைப்படத்தின் கள்ளக் குறுந்தட்டு விநியோகிப்பது,
விற்பனை செய்வது, பார்ப்பது, வாங்குவது தடை செய்யப்படுகிறது. இந்தச் சட்டவிரோதச்
செயலில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவர்.

மேற்கண்ட அறிவிப்பின் நோக்கம் யாது ?

_________________________________________________________________________________

5
_________________________________________________________________________________
(3 புள்ளி)

7 கீழ்க்காணும் படத்தைக் கூர்ந்து கவனித்துத் தொடர்ந்துவரும் வினாவுக்கு விடை எழுதுக.

இப்படம் உணர்த்தும் கருத்து யாது ?

_________________________________________________________________________________

_________________________________________________________________________________
(2 புள்ளி)

8 கீழ்க்காணும் கூற்றை வாசித்துத் தொடர்ந்துவரும் வினாவுக்கு விடை எழுதுக.

இக்கூற்றின் வழி நீ அறிவது யாது ?

_________________________________________________________________________________

6
_________________________________________________________________________________
(2 புள்ளி)

9 கீழ்க்காணும் பனுவலை வாசித்துத் தொடர்ந்துவரும் வினாவுக்கு விடை எழுதுக.

தமிழர் அனைவரும் ஒரு நாளில் ஒன்றுபட வேண்டுமென்று


எண்ணியவர் கோ.சாரங்கபாணி. தமிழர் திருநாளை
அறிமுகப்படுத்தினார். சிங்கப்பூரில் தமிழை ஆட்சி மொழிகளில்
ஒன்றாக்கியது அவர் கொட்டிய உழைப்பாகும். மலாயாப்
பல்கலைக்கழகத்தில் இந்திய மொழித்துறை அமையும்
வாய்ப்பேற்பட்டது. இந்திய அரசின் நிகராளி நீலகண்ட சாத்திரி
சமற்கிருதத்தைப் பரிந்துரைத்தார். வெகுண்டெழுந்த கோ.சா. அங்குத்
தமிழ்த்துறை அமைக்க வெற்றி கண்டார். 16.3.1974 ஆம் நாள்
71 ஆம் அகவையில் கோ.சாரங்கபாணி மீளாத் துயில் கொண்டார்.

கோ. சாரங்கபாணியிடம் இருக்கும் பண்புகளுள் இரண்டனை எழுதுக.

_________________________________________________________________________________

_________________________________________________________________________________
(2 புள்ளி)

10 கீழ்க்காணும் பனுவலை வாசித்துத் தொடர்ந்துவரும் வினாவுக்கு விடை எழுதுக.

1989 கோலாலம்பூர் சீ விளையாடுப் போட்டி ஜி.சாந்தியின் முதல்


அனைத்துலக போட்டியாகும். அதில் 4X100 மீட்டர் தொடர்
ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் மட்டுமே வென்றார். பல ஆண்டுகள்
போட்டியில் கலந்து கொள்ளாமல் அவருக்குப் பின்னடைவு
ஏற்பட்டது. அவரின் 30 ஆவது வயதில் 1997 ஆம் ஆண்டில்
ஜகார்த்தா சீ போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்போட்டியில்
தங்கப்பதக்கம் வென்றார். இப்போட்டியில் ஒரு குழந்தைக்குத் தாயான
பிறகு வெற்றி பெற்றுப் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். வலி
இல்லாமல் வெற்றி இல்லை, வெற்றி இலக்கு அடையும் வரை சோர்வு
இல்லை என்பது இவரின் வாழ்க்கைப் பிடிப்புகளாகும்

7
ஜி.சாந்தியின் வெற்றிக்கு இரண்டு காரணங்களை எழுதுக.

_________________________________________________________________________________

_________________________________________________________________________________
(2 புள்ளி)
11 கீழ்க்காணும் உரைநடைப்பகுதியை வாசித்துத் தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

21 சனவரி 2008 ஆம் நாளில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் மேரி ஸ்மித் ஜோன்ஸ்
என்ற பெண்மணி இறந்து விட்டார். அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது. மேரி
ஸ்மித் இறக்கும்போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம்,
அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளுள் ஒன்றான ‘ஏயக்’ மொழியைப் பேசத் தெரிந்த உலகின்
கடைசி மனிதராக அவர் மட்டுமே இருந்தார்.

‘ஏயக்’ மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான


மொழிகளின் நிலைமையும் இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை உலகில் ஏதோ ஒரு மூலையில்
ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு மொழி அழிகின்ற பொழுது ஓர் இனத்தின் பண்பாடும் வரலாறும் அழிகின்றன; ஏன் ஓர்
இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளுள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான
மொழிகளும் அடங்கும். ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது
அந்த மொழியைப் பேச வேண்டும் என்பது வல்லுநர்களின் கருத்து. பல மொழிகள் அழிந்துவரும்
நிலையில் தொன்மைமையான தமிழ்மொழி இன்றும் நிலைத்து இருப்பதற்குத் தமிழர்களான நாம்
பெருமைப்பட வேண்டும்.

அ) மேரி ஸ்மித் ஜோன்ஸ் என்பவர் யார் ?

__________________________________________________________________________

__________________________________________________________________________
(3 புள்ளி))

ஆ) ஒரு மொழி அழியும் போது ஏற்படும் இரண்டு பாதிப்புகளை எழுதுக.

__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________
(4 புள்ளி)

இ) தமிழ்மொழி இன்றுவரை நிலைத்து இருப்பதற்குக் காரணங்கள் யாவை ?

8
__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________
(4 புள்ளி)

12 கீழ்க்காணும் சிறுகதையை வாசித்துத் தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுது.

“ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது ?” கோகுலன் தீபனிடம் சலித்துக்


கொண்டான்.

“இப்ப என்ன நடந்திருச்சினு இப்படி நொந்துக்குற ?”

“நொந்துக்காம….! காலைல என்ன நடந்துச்சுனு உனக்குத் தெரியுமா? அதை


அனுபவிச்சவன் நான். எனக்குத்தானே தெரியும் அதோட வேதனை.”

“சரி, எனக்கு எப்படித் தெரியும்? சொன்னாதானடா தெரியும்!”

“உனக்குத்தான் தெரியுமே ஐயாவோட ஸ்டாண்டட்டு! எனக்கு இந்தப் பஸ்ல இடிச்சுக்கிட்டுப்


புடிச்சுக்கிட்டுக் கூட்டத்தோட வர்றதே பிடிக்காதுன்னு. அதனாலதானே ஒத்தக்காலுல நின்னு
அடம்புடிச்சு எங்கப்பா முடியாதுன்னு சொல்லியும் இந்தச் சைக்கிளை வாங்கினேன். இப்பப்பாரு,
இன்னிக்கும் அதோட சங்கிலி அறுந்துபோயி…நம்ம கிளாஸ் மாணவிங்க முன்னாடி…. என்
மானத்தையே வாங்கிறிச்சு. போன வாரம் பிரேக் அறுந்துச்சு. இப்ப சங்கிலி….! இப்படி ஒன்னு
ஒன்னா….! ஏன்தான் என் வாழ்க்கையில் மட்டும் இதெல்லாம் நடக்குது?”

“அப்புறம் எப்படித்தான் வந்தே?”

“அப்புறமென்ன அந்த ஓட்ட பஸ்தான். ஆடுமாடுங்க மாதிரி அடச்சுக்கிட்டு…எது என்


வாழ்க்கையிலே நடக்கக் கூடாதுன்னு நினைக்கிறேனோ அதுதான் நடக்கும். இந்த வாரமே ரெண்டு
முறை டீச்சர் எனக்கு டிமேரிட் கொடுத்துட்டாங்க.”

“சரி விட்டுத்தள்ளு…..!

நேத்து வரைக்கும் நல்லாதான் இருந்துச்சு. இன்னிக்கு இப்படிக் கால வாரி விடும்முன்னு


நெனைக்கவேயில்லடா.”

சரி அதையே நினைச்சுக்கிட்டு இருக்காதே. முதல்ல உன் சைக்கிளைப் பழுது பார்க்குற வழியைப்
பாரு. இப்ப பஸ்ல போயிட்டு, சைக்கிளைச் செஞ்சி எடுத்துக்கிட்டுப் போயிடலாம்.”

சற்று முன்னர் வரை எதிரேயிருந்த பேருந்து நிலையத்தில் பெரிய கும்பலாக நின்றிருந்த


மாணவியர் கூட்டம் இப்பொழுது பெருமளவு குறைந்திருந்தது. அப்பொழுது அங்கொன்றும்
இங்கொன்றுமாய்த் தென்பட்டவர்களில் ஓர் ஆரம்பப்பள்ளி மாணவன் இருந்தான். அந்த மாணவனின்
நிலை கோகுலனின் கவனத்தை ஈர்த்தது. முதுகில் புத்தகப்பையைச் சுமந்தபடி தனது இரு கைகளையும்
கால்களாக ஊன்றிக் கொண்டு அசையாத தன் இரண்டு சின்னஞ்சிறிய கால்களைத் தரையோடு
தரையாக இழுத்தபடி தள்ளாடித் தள்ளாடி வந்து காலி இடம் தேடி கொண்டிருந்தது அந்தச் சிறிய உடல்.

அந்தச் சூழலிலும் அச்சிறுவனிடம் எந்தவித ஏமாற்றமோ சலனமோ இல்லை. புன்னகை தவழ்ந்த


முகம். அச்சிறுவனின் நிலைமை கோகுலனை என்னவோ செய்தது. கோகுலன் மனசாட்சி அவனை
ஏளனமாகப் பார்த்தது.

9
- சு.கமலா
உங்கள் குரல்
[எடுத்தாளப்பட்டது]

அ) i) கோகுலன் சலித்துக் கொண்டதற்குக் காரணமென்ன ?

__________________________________________________________________________________

__________________________________________________________________________________
(2 புள்ளி)

ii) கோகுலன் எத்தகைய பண்பு கொண்டவன் ?

__________________________________________________________________________________

__________________________________________________________________________________
(2 புள்ளி)

ஆ) i) சிறுவனின் நிலை கோகுலனுக்கு எவ்வாறான எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கலாம் ?

__________________________________________________________________________________

__________________________________________________________________________________
(3 புள்ளி)

ii) இக்கதையின் வழி நீ பெற்ற படிப்பினை யாது ?

__________________________________________________________________________________

__________________________________________________________________________________

10
(2 புள்ளி)

இ) கால வாரி விடும்முன்னு எனும் சொற்றொடரின் சூழலுக்கு ஏற்ற பொருள் யாது ?

__________________________________________________________________________________
(2 புள்ளி)

13 கீழ்க்காணும் படத்தைக் கூர்ந்து கவனித்துத் தொடர்ந்துவரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

BERHENTI

அ) இப்படத்தின் சாரம் என்ன ?

__________________________________________________________________________________
(2 புள்ளி)
11
ஆ) இச்சாரத்தினால் ஏற்படும் மூன்று நன்மைகள் யாவை ?

__________________________________________________________________________
________

__________________________________________________________________________________

__________________________________________________________________________________
(3 புள்ளி)

இ) இந்தச் சாரம் தொடர்பாக உமது கருத்துரையை 30 சொற்களில் எழுதுக.

__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________

__________________________________________________________________________
(10 புள்ளி)

பாகம் 2
[45 நிமிடம்]
பிரிவு ஈ : படைப்பாக்கம்
(30 புள்ளிகள்)

14 கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுள் ஏதேனும் ஒன்றனைப் பற்றி 150 சொற்களில் ஓர்


எழுத்துப்படிவத்தை எழுதுக.

(i) மாணவர் கட்டொழுங்கு

(ii) ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் பி.ஓ.எல் தமிழ் வகுப்பிற்கு உன்


நண்பன் அடிக்கடி மட்டம் போடுவதை நீ அறிகிறாய். வெளியூரில் இருக்கும் அவனுக்குத் தமிழ்
வகுப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த ஒரு கடிதம் எழுதுக.

12
(iii) “நீ சோர்ந்து போய்விடாதே தமிழ். வெற்றிக்கனியை அடைய உனக்குப் போதுமான நிறைய
நாள்கள் உள்ளன.” தன் நண்பன் தமிழரசனுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டிருந்தான்
தென்னரசு.

எனத் தொடங்கும் சிறுகதை ஒன்றனை எழுதுக

KERTAS SOALAN TAMAT

UJIAN BERTULIS
OGOS 2 Jam

13
PANDUAN
PENSKORAN

விடைப்பட்டி
வினா விடை புள்ளிப்
எண் பங்கீடு

1 சாம்பாரை / சாம்பார் 1

2 பத்து + இரண்டு 1

3அ i. பாற்க்குடம் (பாற்குடம்) 1
ii. பேச்சு (பேச்சுப்) 1
iii. தெரிவிக்கும்படிக் (தெரிவிக்கும்படி) 1

3ஆ C 2

3இ காட்டு
“நான் என் வீட்டை விற்கப் போகிறேன்,” என்று தென்னவன் கூறினான். 3

(பொருத்தமான நிறுத்தற்குறிகள் இடவில்லையென்றால் ஏற்ற புள்ளிகள்

14
கழிக்கலாம்)

4அ i. கள்ளங்கபடு 1
ii. ஊண் உறக்கம் 1
iii. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல 1
1
iv. கங்கணம் கட்டுதல்
1
v. அடாது செய்பவன் படாது படுவான்

(பிற விடைகள் ஏற்றுக்கொள்ளப்படா.)

4ஆ விரைந்து தொழில்கேட்டும் ஞாலம் நிரந்தினிது 2

4இ i மறைய நின்றுளன் மாமணிச் சோதியன் 2

4இ ii இறையருள் வெளிப்படும் 1

5 தீய நண்பர்களுடன் பழகினால் வாழ்க்கை சீரழியும். 2


நல்ல நண்பர்களுடன் நட்பு கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 2

(ஏற்புடைய பிற விடைகள்)


6 திரைக்குப் புதியதாக வந்திருக்கும் திரைப்படங்களைக் கள்ளக் குறுந்தட்டில்
பார்ப்பது சட்டப்படி குற்றமாகும். 3

(ஏற்புடைய பிற விடைகள்)


7 உடல் ஊனமாக இருந்தாலும் உழைத்து வாழ வேண்டும். 2
உழைத்து வாழ்வதற்கு உடல் ஊனம் தடையல்ல 2
ஊனம் உடலில் இருக்கலாம் ஆனால் உள்ளத்தில் இருக்கக்கூடாது. 2
(ஏற்புடைய பிற விடைகள்)
8 அதிகமாக நூல்கள் வாசிப்பவர்கள் அறிவாளியாக திகழ்வார்கள் 2

(ஏற்புடைய பிற விடைகள்)

வினா விடை புள்ளிப்


எண் பங்கீடு
9 தமிழ்மொழி மீது அதிகம் பற்றுடையவர். 1
தமிழ்ச் சமுதாயத்தின் பால் அக்கறையுடையவர். 1
தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். 1

(ஏற்புடைய பிற விடைகள்) 2X1=2


10 வெற்றியடையும் வரை தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். 1
கடுமையாக உழைத்தால் வெற்றியடையலாம். 1

(ஏற்புடைய பிற விடைகள்) 2X1=2


11 அ ஏயக் மொழி பேசத் தெரிந்த கடைசி மனிதர் 3
ஏயக் மொழி பேசியவர் 1
11 ஆ ஓர் இனத்தின் பண்பாடு அழியும் 2
ஓர் இனத்தின் வரலாறு அழியும் 2
ஓர் இனமே அழியும் 2
2X2=4

15
11 இ தமிழர்கள் தமிழைத் தொடர்ந்து கற்று வருவதால் 2
தமிழ் மீது உள்ள பற்று நிலைத்து இருப்பதால் 2
தமிழர்களிடையே தமிழ்மொழி தினமும் பயன்பாட்டில் இருப்பதால் 2
தமிழர்களுக்குத் தமிழ் வாழ்க்கை மொழியாக இருப்பதால் 2

(ஏற்புடைய பிற விடைகள்) 2X2=4


12 அ i கோகுலனின் மிதிவண்டி அடிக்கடி பழுதடைவதால் 2

12 அ ii பகட்டாக வாழ விருப்புபவன் 2

12 ஆ i தம்மைக் காட்டிலும் துன்பப்படுவோர் இந்த உலகத்தில் ஏராளமானோர் 3


உண்டு

12 ஆ ii நம்மிடம் இருப்பதை வைத்து நிம்மதியடைய வேண்டும் 2

12 இ சிரமத்தைக் கொடுத்துவிட்டது 2

13 அ சாலை விதிகள்/சாலை விதிமுறைகள் 2

13 ஆ சாலை விபத்துகள் குறைக்கலாம் 1


சாலை நெரிசல் ஏற்படாது 1
வாகனங்கள் முறையாகச் செல்லும் 1
வாகனமோட்டிகளை ஒழுங்குப்படுத்துவதற்கு 1

(ஏற்புடைய பிற பதில்கள்) 3X1=3


13 இ சாலை விதிகள் சாலைப் பயன்படுத்துபவர்களின் நன்மைக்காக 10
உருவாக்கப்படுள்ளன.
சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்
சாலை விதிகள் பின்பற்றவில்லைவென்றால் விபத்துகள் ஏற்படும்
சாலை விதிகளைச் சேதப்படுத்தக்கூடாது

(ஏற்புடைய பிற பதில்கள்)


PANDUAN PENSKORAN TAMAT

16

You might also like