Professional Documents
Culture Documents
எழுதுக.
அவைதாம்
ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
உரையும் பாடையும் விரவியும் வருமே
(தண்டியலங்காரம்-11)
ஒரே வகை யாப்பில் (செய்யுளில்) அமைவது கம்பராமாயணம். அது விருத்தத்தால் அமைந்தது. பல
வகை யாப்பில் அமைவது சிலப்பதிகாரம். உரைநடை விரவி வருவதற்கும் அதுவே சான்றாகிறது.
காப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்று. பொருளால் தொடர்ந்து வரும் செய்யுள்
இலக்கியத்தைப் பெருங்காப்பியன் எனவும் சிறு காப்பியம் எனவும் பிரிப்பர். வாழ்த்து, வணக்கம்,
வருபொருள் என்ற மூன்று மங்கள வகைகளில் ஒன்றைக் கொண்டு அறம், பொருள்,இன்பம், வீடு
என்ற நான்குவகை உறுதிப்பொருள்களை உணர்த்தும் இயல்பினையுடையது பெருங்காப்பியம்.
தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தும்
பெருங்காப்பியம் எனப் படுகின்றன. இவற்றை ஐம்பெருங்காப்பியங்கள் எனக் குறிப்பிடுவர்.
இவற்றுள் சிலப்பதிகாரம் மணிமேகலை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்பர். இவை
காலத்தால் முந்தியவை.அகவற்பாவால் இயன்ற காப்பியங்கள்.
சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான்
நந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா
வளையா பதிதருவான் வாசகனுக்கு ஈந்தான்
திளையாத குண்டலகே சிக்கும்
என்று ஐம்பெருங்காப்பியங்களை எண்ணிச் சொல்கிறார்.
அறமுதல் நான்கினும் குறைபாடு உடையது
காப்பியம் என்று கருதப் படுமே
(தண்டியலங்காரம்-10)
சிறு காப்பியம் என்பது தண்டியலங்காரத்தில் கூறப்படும் இலக்கணத்தில் ஏதேனும் ஒன்று
குறைந்து வருவதாகவோ அல்லது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினுள் ஏதேனும்
ஒன்று குறைந்து வருவதாகவோ கவிஞர்களால் இயற்றப் பெறுவது. வாய்மொழி இலக்கியம்,
தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று இது விரிந்து வளர்கிறது. நான்கு
பொருள்களையும் பயக்காமல் சில பொருள்கள் மட்டும் பயக்கும் கதைநூல் சிறுகாப்பியம்.
பிற்காலத்தில் இக்காப்பியங்கள் தொடர்நிலைச் செய்யுளின் வகையைச் சார்ந்தது என்றும்
தொடர்நிலைச் செய்யுளிலும் பொருள் தொடர்நிலையைச் சார்ந்தது என்றும் அறிஞர்கள்
கருதினர்.உதயணகுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி, நாககுமார காவியம்
ஆகியவை சிறுகாப்பியங்களாகும்.
காப்பியம் அறம், பொருள்,இன்பம் வீடு ஆகிய நாற்பொருளை வலியுறுத்துவன. சமுதாய
சிந்தனைகளும்,சமய மேன்மைகளையும்,பெண்ணின் பெருமைகளையும்,இல்லற சிறப்புகளையும்
விளம்புகின்றன இக்காப்பியங்கள்.