Professional Documents
Culture Documents
BT Assigment hbtl3303
BT Assigment hbtl3303
HBTL 3303
TATABAHASA BAHASA TAMIL III
கேள்வி 1 அ
இன்று நமக்குக் கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய தமிழ்
இலக்கண நூலாகிய தொல்காப்பியம் அதன் பொருளதிகாரத்தில்
அகத்திணை, புறத்திணை பற்றி விரிவாக விளக்குகின்றது.
1. கைக்கிளை
2. குறிஞ்சித் திணை
3. பாலைத் திணை
4. முல்லைத் திணை
5. மருதத் திணை
6. நெய்தல் திணை
7. பெருந்திணை
முல்லைத் திணை
கருப்பொருள்கள்
1. தெய்வம் - மாயோன்
2. உணவு - வரகு, சாமை
3. விலங்கு - மான், முயல்ம்
4. மரம் - தோன்றி, காயா, பிடவம், குருந்தம்
5. பறவை - காட்டுக்கோழி, சேவல்
6. பறை - ஏறுகோட் பறை
7. தொழில் - ஆநிரை மேய்த்தல், ஏறு தழுவல்
8. யாழ் - முல்லை யாழ்
9. பண் - குறிஞ்சிப் பண்
10. ஊர் - பாடி, சேரி
11. நீர் - குறுஞ்சுனை, கான்யாறு
12. மலர் - முல்லை , குல்லை , தோன்றி, பிடவம்
உரிப்பொருள்
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.
குறிஞ்சி திணை
மருதம் திணை
நெய்தல் திணை
பாலைத் திணை
குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ்
நிலப்பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல்,
மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப
மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும்.
பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர்.
பாலை நில மக்கள் மறவர் மற்றும் எயினர் எனப்பட்டனர்.
"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து
நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்"
- சிலப்பதிகாரம்
பொழுது - அ) பெரும்பொழுது - வேனிற் காலம், பின்பனிக் காலம்,
ஆ) சிறுபொழுது - நண்பகல்
கருப்பொருள்கள்
1. தெய்வம் – கொற்றவை
2. உணவு - வழிப்போக்கரிடம் திருடிய உணவு
3. விலங்கு - யானை, புலி, செந்நாய்
4. மரம் - இருப்பை, உழிஞை
5. பறவை - கழுகு, பருந்து, புறா
6. பறை - சூறை கோட் பறை
7. தொழில் - வழிப்பறி, சூறையாடல்
8. யாழ் - பாலை யாழ்
9. பண் - பாலைப் பண
10. ஊர் - பறந்தலை
11. நீர் - கூவல் (கிணறு, குழி)
12. மலர் - மரா, குரா
உரிப்பொருள்
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.
* மதியுடம் படுதல்
* குறை நயத்தல்
* ஆற்றுவித்தல்
* அறத்தொடு நிற்றல்
மதியுடம் படுதல்
குறை நயத்தல்
தலைவனது தகுதியைத் தோழி ஆராய்ந்து அறிகின்றாள். அவன்
தலைவிக்கு ஏற்றவன் என்பதை அறிந்து அவன் தலைவியை நெருங்க
அனுமதிக்கிறாள். தலைவியைக் கூடுவதற்குத் தோழியின் உதவியை
வேண்டுகிறான். தலைவனுக்காகத் தோழி சென்று தலைவியை
வேண்டுகிறாள். தலைவி, எளிதில் இடங்கொடுக்காமல் மறுக்கிறாள்.
ஆற்றுவித்தல்
அறத்தொடு நிற்றல்
கேள்வி 2 அ, ஆ
செம்மை,சிறுமை,சேய்மை,தீமை,வெம்மை,புதுமை,மென்மை,மேன்மை,திண்மை,உ
ண்மை,நுண்மை,வெண்மை,கருமை,பொன்மை,பசுமை,பெருமை,அணிமை,நன்மை,
தண்மை,பழமை,வன்மை,கீ ழ்மை,நொய்மை,இன்மை,பருமை இவை போன்ற
சொற்களில் உள்ள ஈற்றெழுத்து கெடுதலும்,சிறு,பெரு போன்ற சொற்களில்
இடையில் அமைந்த இடை உகரம் ஆனது இ என மாறுவதும்,நிலைமொழியில்
முதலெழுத்துக் குறில் நெடிலாவதும்,முதலெழுத்தில் அமைந்த அ என்ற எழுத்து
ஐ என மாறுவதும், தன் ஒற்றெழுத்தே தோன்றுவதும்,வருமொழிக்கு முன் நின்ற
மெல்லினமே வேறு ஒரு மெல்லினமாக மாறுவதும்,வல்லினத்துக்கு இனமான
ங்,ஞ்,ந்,ண்,ம்,ன் ஆகிய எழுத்துக்கள் தோன்றுவதும்,சில வகை யில் ஓர் எழுத்து
கெடுதலும் பண்பு பெயர்ப் புணர்ச்சிக்கு இயல்பாகும்.
பொருளின் தன்மை எத்தகையது என்று கூறும் பெயர்கள்
பண்புப்பெயர்கள் ஆகும். பண்பானது நிறம், சுவை, அளவு, வடிவம்,
குணம் அல்லது பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிறக்கும்.
சான்று:
வெண்சங்கு - வெண்மை + சங்கு -நிறப்பண்பைக் குறித்த பண்புப்பெயர்.
புளிக்குழம்பு - புளிப்பு + குழம்பு - சுவைப்பண்பைக் குறித்த
பண்புப்பெயர்.
சதுரக்காகிதம் - சதுரம் + காகிதம் -வடிவப் பண்பைக் குறித்த
பண்புப்பெயர்.
நீள்வானம் - நீளம் + வானம் - அளவுப் பண்பைக் குறித்த பண்புப்பெயர்.
இன்சொல் - இனிமை + சொல் - குணப் பண்பைக் குறித்த
பண்புப்பெயர்.
எடுத்துக்காட்டுகள்
சிறுமை+அர் = சிறியர்
பெருமை+அர் = பெரியர்
பசுமை+கிளி = பைங்கிளி
வெறுமை+இலை=வெற்றிலை
செம்மை+கடல் = செங்கடல்
பாசி = பசுமை + இ
விதி எடுத்துக்காட்டு
உடலும் உயிரும்:
இதற்குரிய விதி,
1. “ஈறுபோதல்” - விளக்கம்:
செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை,
மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நுண்மை, வெண்மை,
கருமை, பொன்மை, பசுமை, பெருமை, அணிமை, நன்மை,
தண்மை, பழமை, வன்மை, கீ ழ்மை, நொய்மை, இன்மை, பருமை
இவை போன்ற சொற்களில் உள்ள ஈற்றெழுத்து (மை)கெடுதலை
(மறைதலை) ஈறுபோதல் என்ற அடி விளக்குகின்றது.
எடுத்துக்காட்டுகள்
செம்மை + மலர் = செம்மலர்
வெண்மை + பட்டு = வெண்பட்டு
வெண்மை + குடை = வெண்குடை
எழுதும் முறை:
பைந்தமிழ் = பசுமை + தமிழ்
முதலில் “ஈறு போதல்” என்ற விதிப்படி மையை நீக்கியவுடன்
பசு + தமிழ் என்று இருக்கும்.
எழுதும் முறை:
பைந்தமிழ் = பசுமை + தமிழ்
“ஈறுபோதல்”
பசு + தமிழ்
“அடி அகரம் ஐ ஆதல்”
பைசு + தமிழ்
“இனையவும்”
பைசு + தமிழ்
பை தமிழ்
“இனம் மிகல்”
பைந் தமிழ்
பைந்தமிழ் என்று ஆனது. சுலபமாக உள்ளதா?
5. இனி “இன எழுத்துகள்” எவை என்பதனைக் காணலாம்.
சில எடுத்துக்காட்டுகள்:
1. பைங்கொடி
2. பைந்தார்
அடுத்ததாக நாம் காண இருப்பது
“தன் ஒற்று இரட்டல்” என்பது.
• இந்த விதியை நாம் ஏற்கனவே “தனிக்குறில் முன் ஒற்று உயிர் வர
இரட்டும்” என்ற நூற்பாவில் விளக்கமாகக் கண்டுள்ளோம்.
• பண்புத் தொகையில் அவை எவ்வாறு அமைகின்றது என்பதை இனி
விளக்கமாகக் காணலாம்.
எடுத்துக்காட்டு:
சிற்றூர் = சிறுமை + ஊர்
“தன்னொற்றிரட்டல்”
சிற் + ற்+ ஊர் (ற்+ஊ= றூ)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” சிற்றூர். என மாற்றம்
அடைந்தது.
சில எடுத்துக்காட்டுகள்:
1. வெற்றிலை
2. வெந்நீர்
3. வெவ்வேல்
விளக்கம்
எடுத்துக்காட்டு:
செங்கோல் = செம்மை + கோல்
• முதல் விதி “ஈறுபோதல்” என்ற அடிப்படையில் மையை நீக்குதல்
செம்மை + கோல்
செம் + கோல் என்று இருக்கும்
• அடுத்து “முன்னின்ற மெய் திரிதல்” என்ற விதிப்படி,
செம் + கோல் என்பதில் உள்ள ம் என்ற மெய் எழுத்து வருமொழி (க் +
ஓ கோ) அதாவது க் என்ற மெய் எழுத்திற்கு இனமான ங் என்ற மெய்
எழுத்தாகத் திரிந்தது(மாறியது)
தேர்வில் எழுதும் முறை:
செங்கோல் = செம்மை + கோல்
“ஈறுபோதல்”
செம்மை + கோல்
செம் + கோல்
“முன்னின்ற மெய் திரிதல்”
செம் கோல்
செங் கோல்
செங்கோல் என்று மாறியது.
மேற்கோள் நூல்கள்
1. HBTL3303 TATABAHASA TAMIL III _vApr20
2. https://ta.wikipedia.org/wiki/
3. http://www.tamilvu.org/courses/degree/d011/d0112/html/d01123l1.htm
4. http://www.shanlaxjournals.in/pdf/TS/V1N1/TS_V1_N1_010.pdf