Professional Documents
Culture Documents
1/16
மேலும் முஹத்திஸ் அவர்கள் அலி நாயகத்தை அலி அலைஹிஸ்ஸலாம் என்று
ஆரம்பிப்பதாகவும் கூறுகிறார். முஹத்திஸாக இருக்கிற இவர்களுக்கு எதுவும்
தெரியாதா? எல்லாம் தெரிந்த அவர்களே இப்படிக் கூறியிருக்கும் போது நாங்கள் ஒரு
பாஸிக்கை ரழியல்லாஹு அன்ஹு என்று கூற வேண்டுமா? அவ்வாறு கூறுவது
முனாபிக்தனம் என்கிறார். முஆவியா ஸஹாபிதான். ஆனால் நிஃபாக் கொண்ட
நயவஞ்சக ஸஹாபி என்றும் கூறுகிறார்.
ஸஹாபாக்களின் சிறப்புகள்:
َتْج ِر ي َتْح َتَه ا َو الَّس اِبُقوَن اَأْلَّو ُلوَن ِم َن اْلُمَه اِج ِر يَن َو اَأْلنَص اِر َو اَّلِذ يَن اَّتَبُعوُه م ِبِإْح َس اٍن َّر ِض َي اُهَّلل َع ْنُه ْم َوَر ُض وا َع ْنُه َو َأَع َّد َلُه ْم َج َّنَٰذاٍت
اْلَفْو ُز اْلَعِظ يُم اَأْلْنَه اُر َخ اِلِد يَن ِفيَه ا َأَبًد ا ۚ ِلَك
2/16
நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்…
3/16
கி.பி 656ல் நடைபெற்ற இஸ்லாத்தின் மூன்றாம் கலீபா ஹழ்ரத் உதுமான் ரழியல்லாஹு
அன்ஹு அவர்களின் படுகொலையை தொடர்ந்து, நான்காம் கலீபா ஹழ்ரத் அலீ
ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையை ஏற்க மறுத்தார்கள்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற சிப்பீன் போரின் முடிவில், கலீபா கலீபா ஹழ்ரத் அலீ
ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.
இதன்படிதான் தொடர்ந்து சிரியாவின் ஆளுனராக இருப்பதோடு, ஹழ்ரத் அலீ
ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையை ஏற்பதாகவும் உறுதியளித்தார்கள்.
இதன் பிறகு 661ல் நடைபெற்ற நான்காம் கலீபா ஹழ்ரத் அலி நாயகம் ரழியல்லாஹு
அன்ஹு அவர்களின் ஷஹீதுக்குப் பின் அன்னாரின் மகனார் இமாம் ஹழ்ரத் ஹஸன்
ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் (ஹழ்ரத் முஆவியா ரழியல்லாஹு அன்ஹுவின்
மறைவுக்குப் பின் தானோ அல்லது தனது சகோதரனோ மட்டுமே அடுத்த கலீபாவாக
வேண்டும் என்ற ஹழ்ரத் ஹசனின் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் நிபந்தனை)
நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலுடன் கலீபாவாக பொறுப்பேற்றார்கள்.
4/16
(இந்நிலையில்) அவர் நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்களிடம்,
‘அல்லாஹ்வின் தூதரே! மூன்று கோரிக்கைகளை எனக்கு (நிறைவேற்றி)த் தாருங்கள்’ என்று
கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள் ‘ஆ(கட்டு)ம்’
என்றார்கள். அபூசுஃப்யான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள், ‘என்னிடம்
அரபியரிலேயே மிகவும் அழகான இலட்சணமான பெண் இருக்கிறார். அவர்தான் (என்
மகள்) உம்மு ஹபீபா பின்த் அபீசுஃப்யான். அவரைத் தங்களுக்கு நான் மணமுடித்துத்
தருகிறேன்’ என்றார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள்
‘ஆ(கட்டு)ம்’ என்றார்கள்.
5/16
3. ஷாம் (ஸிரியா, லெபனான்) பகுதியில் மழையின்றி வறட்சி ஏற்பட்டபோது
முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரழியல்லாஹு
அன்ஹு) அவர்களைக் கொண்டு பிராத்தித்து மழைத் தேடினார்கள். துஆவின் போது:
‘இறைவா! எங்களின் மேன்மைக்குரியவரைக் கொண்டு வஸீலா தேடுகிறோம் என்று
பிரார்த்தித்து விட்டுஇ யஸீதே! உங்கள் கையை உயர்த்தி எங்களுக்காகப் பிரார்த்தியும்
என்றார்கள். உடனே யஸீதும், அவருடன் இருந்தவர்களும் தத்தம் கரங்களை ஏந்தி
மன்றாடினர். பிறகு மழை பெய்தது.
ஒரு முறை ஹஜ் காலம் ஒன்றின் போது முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்
(மதீனாவுக்கு வந்து வந்து) மிம்பரில் ஏறி (மதீனாவின் அமீருடைய) மகனின் கையிலிருந்த
சில முடிகளைத் தனது கையில் எடுத்தவராக ‘மதீனா வாசிகளே உங்கள் அறிஞர்கள் எங்கே!
‘பனூஇஸ்ரவேலர்கள் அழிந்தது இதை அவர்களின் பெண்கள் எடுத்த போதுதான்’ என்று
கூறியவர்களாக நபியவர்கள் இதை தடைசெய்வதை நான் கேட்டுள்ளேன். என்று
கூறினார்கள்.
6/16
அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு ஆமிர் அல் யஹ்ஸபி ரழியல்லாஹு அன்ஹு. ஆதாரம்
: முஸ்லிம் 2436
7/16
மலக்குமார்களிடம் உங்களைப் பற்றிப் பொருமையாகப் பேசுவதாக ஜிப்ரீல் (அலை
ஹிஸ்ஸலாம்) என்னிடம் கூறினார்’. என்று நபியவர்கள் சொன்னதாக முஆவியா
(ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்.
8/16
இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உம்மு ஹராம் பின்த்து
மில்ஹான்(ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள்.
அப்போதெல்லாம் அவர் நபி(ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்களுக்கு உணவு
தருவது வழக்கம். உம்மு ஹராம்(ரழியல்லாஹு அன்ஹா)இ உபாதா இப்னு
ஸாமித்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே
ஒருமுறை) நபி(ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள் உம்மு
ஹராம்(ரழியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் சென்றார்கள். அவர்
நபி(ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு
அவர்களின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கினார்கள். அப்படியே
நபி(ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு, சிரித்துக்
கொண்டே கண் விழித்தார்கள். உம்மு ஹராம்(ரழியல்லாஹு அன்ஹா), ‘இறைத்தூதர்
அவர்களே! ஏன் (இப்படிச்) சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு
நபி(ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள், ‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள்
சிலர், இறைவழியில் அறப்போர் வீரர்களாக எனக்கு (கனவில்) எடுத்துக்
காட்டப்பட்டார்கள். அவர்கள் இந்தக் கடலின் முதுகில் கட்டில்களில் (சாய்ந்து)
அமர்ந்திருக்கும் மன்னர்களாக அல்லது கட்டில்களில் அமர்ந்திருக்கும் மன்னர்களைப்
போல்… ஏறிச் செல்கிறார்கள்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு உம்மு
ஹராம்(ரழியல்லாஹு அன்ஹா), ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக
என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள். எனவே,
இறைத்தூதர் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, தம் தலையை(த்
தலையணையில்) வைத்(து உறங்க ஆரம்பித்)தார்கள்; பிறகு, சிரித்தபடியே
விழித்தெழுந்தார்கள். அப்போது உம்மு ஹராம்(ரழியல்லாஹு அன்ஹா), ‘இறைத்தூதர்
அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்’ என்று கேட்டார்கள். நபி(ஸல்லல்லாஹுஅலைஹி
வஸல்லம்) அவர்கள், ‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர்
புரிபவர்களாக எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர்..’ என்று முன்பு போன்றே கூறினார்கள்.
உம்மு ஹராம்(ரழியல்லாஹு அன்ஹா), ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக
என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள்.
நபி(ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள், ‘நீங்கள் (அறப்போருக்காகக் கடலில்)
முதன்முதலாகப் பயணிப்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்’ என்று கூறினார்கள்.
அவ்வாறே, முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின்
(ஆட்சிக்) காலத்தில் (சைப்ரஸ் தீவின் மீது அறப்போர் புரியச் சென்றவர்களுடன் உம்மு
ஹராம்(ரழியல்லாஹு அன்ஹா) அவர்களும் கடல் பயணம் செய்து கடலிலிருந்து (தீவின்
ஒரு பகுதிக்குப்) புறப்பட்டபோது தம் வாகனத்திலிருந்து விழுந்து மரணமடைந்தார்கள்.
ஆதாரம் : புகாரி (2788)
9/16
– மேற்கண்ட ஹதீஸ் முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்தே மற்றோர்
அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.. ஆதாரம் : முஸ்லிம்(631)
என் கணவர் அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல்முஃகீரா அவர்கள், அய்யாஷ் பின்
அபீரபீஆ மூலம் எனக்குத் தலாக் சொல்லி அனுப்பினார். அவருடன் ஐந்து ‘ஸாஉ’
பேரீச்சம் பழமும் ஐந்து ‘ஸாஉ’ தொலி நீக்கப்படாத கோதுமையும் கொடுத்தனுப்பினார்.
நான் அவரிடம், ‘எனக்கு இதைத் தவிர வேறெதுவும் ஜீவனாம்சம் இல்லையா? நான்
உங்கள் வீட்டில் ‘இத்தா’ இருக்கமாட்டேன்’ என்று சொன்னேன். அதற்கு அய்யாஷ்
அவர்கள், ‘இல்லை (வேறெதுவும் ஜீவனாம்சம் கிடையாது)’ என்று சொல்லிவிட்டார்.
உடனே நான் எனது ஆடையை எடுத்து அணிந்துகொண்டு, அல்லாஹ்வின் தூதர்
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சென்றேன்.
10/16
இவ்விருவருக்குமிடையிலான முரண்பாட்டை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திய ரோம
நாட்டு அரசன் முஆவியா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது எல்லையில் வந்து
படைகளைக் குவித்த நிலையில் முஆவியா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு தூது
அனுப்பி அலி(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்க
உதவுவதாகக் கூறினான். அப்போதுகடும் சினம்கொண்ட முஆவியா(ரழியல்லாஹு
அன்ஹு) அவர்கள் ‘நீ உனது படைகள் எடுத்துக் கொண்டு உனது நாட்டுக்குத் திரும்பிப்
போகாவிட்டால்
நான் எனது சகோதரர் அலியுடன் உனக்கு எதிராக சமாதானம் செய்து கொண்டு உன்னை
உனது சகல பிரதேசங்களில் இருந்தும் வெளியேற்றுவேன். அப்போது உனக்கு முன்னால்
விரிந்துள்ள இப்பூமியை உனக்கு நான் சுருக்கிப் போடுவேன்.’ என்றார்கள்.
அதன் மொழியாக்கம்:
பதில்:
11/16
இமாம் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு மற்றும் அஹ்லுபைத் குடும்பத்தினர்களுடன்
அவன் (மர்வான்) மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டான். அவர்கள் மீது அவன் துவேசம்
கொண்டிருந்தான். இக்காரணங்களால் அந்த ஷைத்தானை மிகவும் வெறுக்க வேண்டும்.
12/16
அவர்களின் பெயர் வருகிறதோ அங்கெல்லாம் ரலியல்லாஹூ அன்ஹு என்று
கூறப்பட்டுள்ளது.
விமர்சித்து பழி சுமத்தும் இந்த கூட்டத்தை விட்டு அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர்
தள்ளி இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
13/16
அலைஹிஸ்ஸலாம் யாருக்கு சொல்ல வேண்டும்?
கிதாபின் பிரதி
மேலும் இதோ மேலே காணப்படக்கூடிய இந்த கிதாபின் பெயர் தத்ஹீருல் ஜினானி வல்
லிஸான் …..இந்த கிதாபை இமாம் இப்னு ஹஜர் மக்கி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
கோர்வை செய்து இருக்கிறார்கள்.
14/16
கிதாபில் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது .அந்த மன்னரின்
காலத்தில் வாழ்ந்தவர்களில் சில குழப்பவாதிகள் முஆவியா
ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு சஹாபியாக
இருக்கக்கூடிய நிலையில் அவர்களை ஏசி பேசுகிறார்கள்.
இவ்வாறு செய்வது குறித்து நமது கொள்கை என்ன என்பதை
பற்றி விளக்கமாக எழுதி தரவேண்டும் என்று ஹூமாயூன்
மன்னர் கேட்டுக்கொண்டதற்காக
15/16
மேலும், பாருங்கள்! எந்த அஹ்லுஸ் ஸுன்னா இமாமும், அறிஞர்களும் சொல்லாத புதிய
வார்த்தை ஒன்றை இவர் சொல்கிறார். முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
ஸஹாபிதான். ஆனால் நிஃபாக் ஸஹாபி என்கிறார். இது அவர் எந்த கிதாபிலிருந்து, எந்த
அறிஞர் பெருமக்களிடமிருந்து எடுத்துச்சொன்னார் என்று தெரியவில்லை. நபிகளார்
காலத்தில் நயவஞ்சகர்கள் – முனாபிக்குகள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இவர் சொன்ன
மாதிரியான புதுவிளக்கமுள்ள நிஃபாக் ஸஹாபி?? அஸ்தஃபிருல்லாஹ்! இந்த கேடுகெட்ட
கொள்கைக் கொண்டவரிடமிருந்தும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!
முடிவு:
வல்ல நாயன் இந்தப் போலி வேசம் போடும் கள்ள ஷெய்குமார்களை விட்டும், வழிகெட்ட
கொள்கை கொண்ட ஷியா, காரிஜிய்யாக்களை விட்டும் நம் அனைவர்களையும்
பாதுகாப்பானாக. பி ஹக்கி செய்யிதினா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
16/16