Professional Documents
Culture Documents
தமிழ் உரை
தமிழ் உரை
சிறுபாணாற்றுப்படை
எளிய உரை – வைதேகி
பாடியவர் – இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
பாடப்பட்டோன் – ஓய்மான் நாட்டு நல்லியக்கோடன்
திணை – பாடாண்
துறை – ஆற்றுப்படை
பா வகை – அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள் – 269
நிலமகளின் தோற்றம்
இளைப்பாறும் பாணன்
அயில் உருப்பு அனைய ஆகி ஐது நடந்து
வெயில் உருப்புற்ற வெம்பரல் கிழிப்ப,
வேனில் நின்ற வெம்பத வழி நாள்,
காலை ஞாயிற்றுக் கதிர் கடா உறுப்ப, 10
பாலை நின்ற பாலை நெடு வழி,
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ, (7-12)
குறிப்பு: வேனில் நின்ற (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இளவேனிற் பருவம்
நிலைபெற்ற. வழிநாள் (9) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பின்னாகிய முதுவேனில்.
சொற்பொருள்: அயில் உருப்பு அனைய – இரும்பில் உள்ள வெப்பத்தைப் போன்ற, ஆகி – ஆகி,
ஐது நடந்து – மெல்ல நடந்து சென்று, வெயில் உருப்புற்ற வெம்பரல் – வெயிலின்
வெப்பத்தையுடைய சூடான பரல் கற்கள், கிழிப்ப – கிழிக்க, வேனில் நின்ற வெம்பத வழிநாள் –
வேனில் நிலைபெற்ற காலத்திற்கு பின் வந்த முதுவேனில் காலத்தின் வெப்பமான நாள், காலை
ஞாயிற்று – காலைக் கதிரவனின், கதிர் – கதிர்கள், கடா உறுப்ப – வெப்பத்தைச் செலுத்த, பாலை
நின்ற – பாலைத் தன்மையைக் கொண்ட, பாலை நெடு வழி – நீண்ட பாலை வழி, சுரன் முதல் –
பாலை நிலத்தில் (சுரன் – சுரம் என்பதன் போலி), மராஅத்த வரி நிழல் அசைஇ – கடம்ப மரத்தின்
வரிகளாக உள்ள நிழலில் தங்கி (மராஅத்த – அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது, அசைஇ –
அளபெடை)
விறலியரின் அழகு
சொற்பொருள்: ஐது வீழ் இகு பெயல் – மென்மையாக விழும் தாழப் பெய்யும் மழை, அழகு
கொண்டு அருளி – எழிலுடன் அருளி, நெய் கனிந்து இருளிய கதுப்பின் – எண்ணெய் தடவிய கரிய
கூந்தலையும், கதுப்பு என – கூந்தலைப் போன்ற, மணி வயின் கலாபம் பரப்பி – நீலமணி போலும்
கண்களையுடைய தோகைகளை விரித்து (மணி வயின் கலாபம்: மணி – நீலமணி, கலாபம் –
தோகை, வயின் – இடம்), பலவுடன் மயில் மயில் குளிக்கும் – பல தம் பெடைகளுக்குப் பின்
மறையும், சாயல் – மென்மை, சாஅய் உயங்கு நாய் – ஓடித் தளர்ந்த வருந்திய நாய் (சாஅய் –
அளபெடை), நாவின் – நாக்கைப் போன்று, நல் எழில் – நல்ல அழகு, அசைஇ – வருத்தி
(அளபெடை), வயங்கு இழை – ஒளியுடைய அணிகலன்கள், உலறிய – பொலிவு இழந்த, அடியின்
– அடியினையும், அடி தொடர்ந்து ஈர்ந்து நிலம் தோயும் – அடி தொடர்ந்து நிலத்தில் பொருந்திய,
இரும் பிடி – பெரிய பெண் யானை, கரிய பெண் யானை, தடக் கையின் – பெரிய தும்பிக்கையைப்
போல் (இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), சேர்ந்து உடன் செறிந்த
குறங்கின் – உடன் சேர்ந்த நெருங்கிய தொடைகளையும், குறங்கு என – தொடையைப் போல்
திரண்டு, மால் வரை – உயர்ந்த மலை, ஒழுகிய – ஒழுங்கான, வாழை (வாழ் ஐ) – அழிதல்
இல்லாத வாழ்தலையுடைய அழகிய, வாழைப்பூ என – வாழைப் பூவைப் போன்று, பொலிந்த ஓதி
– பொலிந்த கூந்தல் முடிச்சும்
குறிப்பு: அகநானூறு 274 – முல்லை சான்ற கற்பின், நற்றிணை 142 – முல்லை சான்ற கற்பின்,
பரிபாடல் 15 – முல்லை முறை, சிறுபாணாற்றுப்படை 30 – முல்லை சான்ற கற்பின்,
சிறுபாணாற்றுப்படை 169 – முல்லை சான்ற. கோங்க முகைப்போன்ற முலை: அகநானூறு
99 – மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு,
அகநானூறு 240 – கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து, குறுந்தொகை 254 – முலை ஏர்
மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர், கலித்தொகை 56 – முதிர் கோங்கின் முகை என
முகம் செய்த குரும்பை எனப் பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இள முலை, கலித்தொகை
117 – கோங்கின் முதிரா இள முகை ஒப்ப, புறநானூறு 336 – கோங்கின் முகை வனப்பு ஏந்திய
முற்றா இள முலை, திருமுருகாற்றுப்படை 34 – தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி
முகிழ் இளமுலை, சிறுபாணாற்றுப்படை 25-26 – யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் பூண்
அகத்து ஒடுங்கிய வெம்முலை. யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி
(தொல்காப்பியம், உரியியல் 83). பற்களைப் போன்ற அரும்பு: குறுந்தொகை 126 – முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறாக, குறுந்தொகை 162 – சிறு வெண்முகையின் முறுவல்
கொண்டனை, குறுந்தொகை 186 – முல்லை மென் கொடி எயிறு என முகையும், நற்றிணை 316 –
மௌவல் நலம்வரக் காட்டி கயல் ஏர் உண்கண் கனங்குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய்
தருவேம் என. நளி – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), நளி
என் கிளவி செறிவும் ஆகும், (தொல்காப்பியம், உரியியல் 24).
சொற்பொருள்: நளிச் சினை வேங்கை – அடர்ந்த கிளைகளையுடைய வேங்கை மரம், பெரிய
கிளைகளையுடைய வேங்கை மரம், நாள் மலர் நச்சி – அன்று மலர்ந்த மலர் என்று விரும்பி, களி
சுரும்பு அரற்றும் – தேனை உண்டு களித்த வண்டுகள் ஆரவாரிக்கும், சுணங்கின் – மஞ்சள்
தேமலையும், சுணங்கு – மஞ்சள் தேமல், பிதிர்ந்து – சிதறி, யாணர்க் கோங்கின் – புதிதாக மலர்ந்த
மலர்களையுடைய கோங்க மரம், அவிர் முகை – விளங்குகின்ற மொட்டுக்கள், எள்ளி – எள்ளி,
பூண் அகத்து ஒடுங்கிய – அணிகலன் கிடக்கின்ற, வெம்முலை – விருப்பம் தருகின்ற முலை,
முலை என – முலையைப் போன்று, வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் இன் சேறு – பெரிய
குலையையுடைய பெண்ணை வளர்த்த நுங்கில் உள்ள இனிய நீர், இகுதரும் – வடிகின்ற,
எயிற்றின் – தரும் பற்களையும், எயிறு என – பற்களைப் போன்று, குல்லை – கஞ்சங்குல்லை, அம்
புறவில் – அழகிய காட்டில், குவி முகை – குவிந்த மொட்டுக்கள், அவிழ்ந்த – மலர்ந்த, முல்லை
சான்ற கற்பின் – முல்லை மலர்களைச் சூடுதற்கு அமைந்த கற்புடைமையும், மெல் இயல் –
மென்மையான தன்மை, மட மான் நோக்கின் – மான் போன்ற நோக்கினுடைய, வாள் நுதல் –
ஒளியுடைய நெற்றி, விறலியர் – ஆடலிலும் பாடலிலும் சிறந்த பெண்கள்
குறிப்பு: அதாஅன்று (50) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – அது அன்று என்பன அதான்று
எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று என்றாயிற்று. அதாஅன்று
அஃதன்றியும் என்னும் பொருட்டு. அது என்னும் சுட்டு வஞ்சியைச் சுட்டி நின்றது. குட்டுவன்
(49) – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – குட்ட நாட்டை
உடையோன். வஞ்சி (50) – வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – வஞ்சி என்பது
சேரரின் தலை நகரம். திவாகரம் முதலிய நிகண்டுகளில் வஞ்சி என்பது கருவூர் எனக்
கூறப்பட்டுள்ளது. வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40).
REPORT THIS AD
சொற்பொருள்: மகாஅர் அன்ன – பிள்ளைகளைப் போல (மகாஅர் – அளபெடை), மந்தி – பெண்
குரங்கு, மடவோர் நகாஅர் அன்ன – மடப்பத்தையுடைய மகளிரின் பற்களை ஒத்த (நகாஅர் –
அளபெடை), நளி நீர் முத்தம் – செறிந்த நீர்மையுடைய முத்து, செறிந்த நீரின் முத்து, செறிந்த
அழகான, வாள் வாய் – வாளின் வாய், எருந்தின் – கிளிஞ்சலின், வயிற்றகத்து அடக்கி – உள்ளே
அடக்கி, தோற்புறம் மறைக்கும் – பின்புறத்தை மறைக்கும், நல்கூர் நுசுப்பின் – நுண்ணிய
இடையையுடைய, உளர் இயல் ஐம்பால் – அசைகின்ற ஐந்து பகுதியாகப் பிரிக்கப்பட்ட கூந்தல்,
உமட்டியர் – உப்பு வணிகரின் மனைவி, ஈன்ற – பெற்ற, கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் –
விளங்குகின்ற அணிகலன்களை அணிந்த புதல்வர்களுடன் கிலுகிலுப்பை விளையாடும்
குறிப்பு: வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40). குறிப்பு: வறிது –
வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40). தாங்குஅருமரபின் (66) – பொ. வே.
சோமசுந்தரனார் உரை – பொறுத்தற்கரிய முறைமையினை உடைய, வை. மு.
கோபாலகிருஷ்ணமாசாரியார் உரை – தாங்குதற்கு முடியாத நிலைமையினை உடைய.
குறிப்பு: துணை ஆர் கோதை (69) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கடம்பின் பூ புனைந்த
மாலை போறலின், துணை ஆர் கோதை என்றார். நச்சினார்க்கினியர் உரை – கோதை போல
பூத்தலிற் கோதை என்றார்.
பொருளுரை: எழுகின்ற முலையை ஒத்த பெரிய அரும்பு நெகிழ்ந்து அழகிய முகம் போல
மலர்ந்த தெய்வத் தன்மையுடைய தாமரை, குற்றமில்லாத உள்ளங்கையில் அரக்கைத்
தோய்த்தாற்போல் உள்ள சிவந்த இதழ்கள் சூழ்ந்த, செம்பொன்னால் செய்தாற்போல் உள்ள
நடுப்பகுதியின் மீது, தன்னுடைய இன்பமான இனிய துணையைத் தழுவி, சிறகை அசைத்து
விருப்பமுடைய ஆண் தும்பிகள் சீகாமரப் பண்ணை இசைக்கும்.
சொற்பொருள்: தண் பணை தழீஇய தளரா இருக்கை குண புலம் – மருத நிலம் தழுவிய (சூழ்ந்த),
(தழீஇய – அளபெடை), நிலையான குடியிருப்பையுடைய கிழக்கின்கண் உள்ள நிலம், காவலர்
மருமான் – மன்னர் குடியில் பிறந்தவன், ஒன்னார் ஓங்கு எயில் கதவம் உருமு சுவல் சொறியும் –
ஓங்கி உயர்ந்த பகைவரின் கோட்டைக் கதவில் தன் கழுத்தைத் தேய்க்கும் இடி, தூங்கு எயில்
எறிந்த – தொங்கும் கோட்டையை அழித்த, தொடி விளங்கு தடக்கை – ஒளியுடைய கடகம்
அணிந்த பெரிய கைகள், நல்லிசை நாடா – தான் தேடாது அடைந்த நல்ல புகழ், நற்றேர்ச்
செம்பியன் – நல்ல தேர்களையுடைய சோழன், ஓடாப் புட்கை – ஓடாமைக்குக் காரணமான
வலிமை, உறந்தையும் – உறந்தையும், வறிதே – சிறிதே, அதாஅன்று – அது மட்டும் அல்ல (அது
அன்று என்பன அதான்று எனப்புணர்ந்து வருமொழி முதல் அளபெடுத்து அதாஅன்று
என்றாயிற்று. அதாஅன்று அஃதன்றியும் என்னும் பொருட்டு, அளபெடை)
பேகன்
வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும் (84-87)
பொருளுரை: மழை பொய்க்காமல் பெய்ததால் செழிப்பாக உள்ள மலைப் பக்கத்தில் குளிரால்
அது வருந்துகிறது என்று எண்ணி, ஒரு காட்டு மயிலுக்குத் தன் போர்வையைக் கொடுத்த,
பெறுவதற்கு அரிதான வலிமையையும் அழகையுமுடைய, ஆவியர் குடியில் பிறந்த அண்ணலும்,
பெரிய மலையின் தலைவனுமான பேகனும்,
பாரி
……………சுரும்பு உண
நறு வீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறு வீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல் 90
பறம்பின் கோமான் பாரியும் (87 – 91)
குறிப்பு: பாரி, வேள் பாரி, வேளிர் குடும்பத்தில் பிறந்தவன், குறுநில மன்னன், பறம்பு மலையை
உடையவன், பறம்பு மலை – இன்றைய பிரான் மலை, மதுரைக்கு அருகில் உள்ளது.
சொற்பொருள்: சுரும்பு உண – வண்டுகள் உண்ணுவதற்காக (உண உண்ண என்பதன் விகாரம்),
நறு வீ – நறுமணமான மலர்கள், உறைக்கும் – சொட்டும், கொட்டும், தழைக்கும், நாக – நாக
மரங்கள், (சுரபுன்னை மரங்கள்), நெடுவழி – நீண்ட பாதை, சிறு வீ முல்லைக்கு – சிறிய
மலர்களையுடைய முல்லைக் கொடிக்கு, பெருந்தேர் – பெரிய தேர், நல்கிய – கொடுத்த, பிறங்கு –
நிறைந்த, ஒளியுடைய, ஒலிக்கும், வெள்ளருவி – வெள்ளை அருவி, வீழும் – விழும், சாரல் –
மலைச் சரிவு, பறம்பின் கோமான் பாரியும் – பறம்பு மலையின் மன்னனான பாரியும்,
காரி
……………………… கறங்கு மணி
வால் உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல் மொழி இரவலர்க்கு ஈந்த,
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல் தொடித் தடக் கை காரியும் (91-95)
பொருளுரை: ஒலிக்கும் மணிகளையும் வெள்ளைப் பிடரி மயிரினையுமுடைய
குதிரைகளுடன், உலகத்தோர் வியக்கும்படி, அன்பான நல்ல சொற்களைப் பொருள் வேண்டி
வருபவர்களுக்கு அளிப்பவனும், சினம் மிகுந்த, சிறப்புடைய, இமைக்கும், அச்சத்தை உண்டாக்கும்
பெரிய வேலினை உடையவனும், சுழல இட்ட கடிகைகளையுடைய (வளையல்களையுடைய)
பெரிய கைகளையுடைய காரியும்,
ஆய் அண்டிரன்
…………… நிழல் திகழ்
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்து புலர் திணிதோள்
ஆர்வ நன் மொழி ஆயும் (95-99)
அதிகன்
……………………….. மால் வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி 100
அமிழ்து விளை தீம் கனி ஒளவைக்கு ஈந்த,
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும் (99-103)
பொருளுரை: உயர்ந்த மலையின் கமழும் பூக்களையுடைய மலைச் சரிவில் உள்ள அழகான
அமிர்தமாகிய, விளைந்த இனிய நெல்லிக்கனியை, ஒளவைக்குக் கொடுத்தவனும், வலிமை
உடைய சினம் நின்று எரியும் பெரிய வேலையும், ஒலிக்கும் கடலைப் போன்ற படையை
உடையவனுமாகிய அதிகனும்,
குறிப்பு: அதிகன், அதியமான் நெடுமான் அஞ்சி, அதிகன், அதியன், அஞ்சி, அதிகமான், குறுநில
மன்னன், அதிகர் குடும்பத்தில் பிறந்தவன், தகடூரில் ஆண்டவன். தகடூர் – இன்றைய தருமபுரி.
நள்ளி
…………………………. கரவாது
நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த முனை விளங்கு தடக்கை, 105
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு
நளி மலை நாடன் நள்ளியும் (103-107)
குறிப்பு: நளி – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24), நளி என்
கிளவி செறிவும் ஆகும், (தொல்காப்பியம், உரியியல் 27). நள்ளி, கண்டீரக் கோப்பெரு நள்ளி,
குறுநில மன்னன், கண்டீர நாட்டை ஆண்டவன், இன்றைய நீலகிரி.
சொற்பொருள்: கரவாது – மறைக்காது, நட்டோர் – நண்பர்கள், உவப்ப – மகிழும்படி,
நடைப்பரிகாரம் – இடையூறுகள் நீங்கி வாழ்க்கையை வாழ்வதற்கு உரிய பொருட்கள் (பரிகாரம் –
பொருட்கள், இடையூறு நீக்குகை), முட்டாது – எல்லை இல்லாது, கொடுத்த – கொடுத்த, முனை
விளங்கு – போரில் வெற்றிப் பெற்ற, தடக்கை – பெரிய கைகள், துளி மழை பொழியும் – மழைத்
துளி பெய்யும், வளி துஞ்சு – காற்று தங்கும், நெடுங்கோட்டு – உயர்ந்த உச்சிகள் கொண்ட, நளி
மலை நாடன் நள்ளியும் – அடர்ந்த மலைகளையுடைய நாட்டையுடைய நள்ளியும், பெரிய
மலைகளையுடைய நாட்டையுடைய நள்ளியும்
ஓரி
…………………….. நளி சினை
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்துக்
குறும் பொறை நல் நாடு கோடியர்க்கு ஈந்த,
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த 110
ஓரிக் குதிரை ஓரியும் (107-111)
குறிப்பு: காரிக்கும் ஓரிக்கும் நடந்த போர் பற்றின குறிப்புகள்: அகநானூறு 209, நற்றிணை
320, சிறுபாணாற்றுப்படை (110-111) ஆகிய பாடல்களில் உள்ளன. ஓரியைக் கொன்று, பின்
ஓரியின் கொல்லி மலையைச் சேர மன்னனுக்குப் பரிசாகக் காரி கொடுத்தான் (அகநானூறு
209). பொ. வே. சோமசுந்தரனார் உரை – காரிக்குதிரை – கரிய குதிரையுமாம், ஓரிக்குதிரை –
பிடரி மயிரையுடைய குதிரையுமாம். நளி – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம்,
உரியியல் 24), நளி என் கிளவி செறிவும் ஆகும், (தொல்காப்பியம், உரியியல் 27). ஓரி, வல்வில்
ஓரி, குறுநில மன்னன், கொல்லி மலையை உடையவன், கொல்லி மலை நாமக்கல் மாவட்டத்தில்
உள்ளது.
சொற்பொருள்: நளி – அடர்ந்த, பெரிய, சினை – மரத்தின் கிளைகள், நறும் போது – நறுமணமான
மலர்கள், கஞலிய – நெருங்கின, பொலிந்த, நாகு – இளமை, முதிர் – முதிர்ந்த, நாகத்து –
சுரபுன்னை மரங்களுடைய, குறும் பொறை – சின்ன மலைகள், நல்நாடு – நல்ல நிலங்கள்,
கோடியர்க்கு – கூத்தாடுபவர்களுக்கு, ஈந்த – ஈன்ற, காரிக் குதிரை – காரி என்ற பெயரையுடைய
குதிரை, காரியொடு – காரியுடன், மலைந்த – போரிட்ட, ஓரிக் குதிரை ஓரியும் – ஓரி என்ற
பெயரையுடைய குதிரையையுடைய ஓரியும்
……………………. என ஆங்கு
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் (111-112)
பொருளுரை: என அந்த ஏழு பேர், எழுந்த போர்களில் வெற்றி அடைந்தவர்கள், கணைய மரம்
போன்ற திண்மையான தோள்களை உடையவர்கள்.
சொற்பொருள்: என ஆங்கு எழு சமம் கடந்த – என அங்கு ஏழு பேர் எழுந்த போர்களில் வெற்றி
பெற்றோர், எழு உறழ் திணி தோள் – கணைய மரம் போன்ற திண்மையான தோள்களை
உடையவர்கள் (எழு – கணைய மரம், கோட்டைக் கதவில் உள்ள குறுக்கு மரம், உறழ் – உவம
உருபு)
நல்லியக்கோடனின் ஈகைச்சிறப்பு
………………………………………………………..பேர் இசை
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு,
தாங்கரு மரபின், தன்னும், தந்தை
வான் பொரு நெடு வரை வளனும் பாடி,
முன் நாள் சென்றனம் ஆக (125-129)
நல்லியக்கோடனைக் காணுமுன்
இருந்த வறுமை நிலை
……………….. இந்நாள்
திறவாக் கண்ண சாய் செவிக் குருளை, 130
கறவாப் பால் முலை கவர்தல் நோனாது,
புனிற்று நாய் குரைக்கும், புல்லென் அட்டில் (129-132)
குறிப்பு: கறவா பால் முலை (131) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – பிறரால் கறக்கப்படாத
பாலினையுடைய முலை. புனிறு – புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே (உரியியல்
79, தொல்காப்பியம்). குருளை – மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும்
குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு
இளமைப் பெயரே (மரபியல் 1, தொல்காப்பியம்).
சொற்பொருள்: இந்நாள் திறவாக் கண்ண சாய் செவிக் குருளை – இந்த நாளில் திறக்காத
கண்களையுடைய வளைந்த காதுகளையுடைய குட்டிகள், கறவாப் பால் முலை கவர்தல் – பால்
கறக்கப்படாத முலைகளிலிருந்து உண்ணுதல், நோனாது – தன் பசி மிகுதியால் பொறுக்க
முடியாது, புனிற்று நாய் குரைக்கும் – அண்மையில் ஈன்ற நாய் குரைக்கும், புல்லென் அட்டில் –
புன்மையுடைய எங்கள் அடுக்களை
குறிப்பு: தறுகண் பூட்கை (141) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – விரைந்து கொல்லுதல்
செய்யும், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை – கொடுமையுடைய வலிமை.
……………………… நீயிரும்
இவண் நயந்து இருந்த இரும்பேர் ஒக்கல்
செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின் (143-145)
பொருளுரை: நீங்களும் இங்கு உங்களை விரும்பி இருக்கும் மிகப் பெரிய சுற்றத்துடன், உயர்ந்த
உள்ளத்துடன் செல்வீர் ஆயின்,
சொற்பொருள்: நீயிரும் இவண் நயந்து இருந்த இரும்பேர் ஒக்கல் – நீங்களும் இங்கு உங்களை
விரும்பி இருக்கும் மிகப்பெரிய சுற்றத்துடன் (இரும்பேர் – ஒருபொருட் பன்மொழி), செம்மல்
உள்ளமொடு செல்குவீர் ஆயின் – உயர்ந்த உள்ளத்துடன் செல்வீர் ஆயின்
குறிப்பு – அறல் (162) – தாள இறுதி. பாணி – தாளம். வயின் (163) – இடம். இங்கு
மனைக்கு ஆகுபெயர்.
குறிப்பு – அகநானூறு 394 – இன் புளி வெஞ்சோறு. உறு -உறு தவ நனி என வரூஉம் மூன்றும்
மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).
சொற்பொருள்: நறும் பூங்கோதை தொடுத்த நாட் சினைக் குறுங்கால் காஞ்சிக் கொம்பர் ஏறி –
நறுமணமான மலர்களை மாலையாகத் தொடுத்தது போலப் பருவத்தில் பூக்களைக் கொண்ட
கிளைகளையும் குறிய தாளினையுடைய காஞ்சி மரத்தின் கிளையில் ஏறி (கொம்பர் – மொழி
இறுதிப் போலி), நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து – நிலையாக இருத்தல் அரிதாகிய
குளத்தின்கண் கூர்ந்து நோக்கி நெடும் பொழுதிருந்து, புலவுக் கயல் எடுத்த பொன் வாய்
மணிச்சிரல் – புலவு நாற்றமுடைய கயல் மீனை மூழ்கி எடுத்த பொன் நிற வாயையுடைய
நீலமணியின் நிறத்தையுடைய கிச்சிலி, வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை – பெரிய நகம் கிழித்த
வடு அழுந்திய பச்சை இலை, முள் அரைத் தாமரை – முள்ளை உடைய தண்டினை உடைய
தாமரை, முகிழ் விரி நாட்போது – அரும்பு மலர்ந்த அதிகாலை மலரில், கொங்கு கவர் நீலச்
செங்கண் சேவல் – தேனை நுகரும் நீல நிறத்தையும் சிவந்த கண்ணையுமுடைய ஆண் வண்டு,
மதி சேர் அரவின் மானத் தோன்றும் – நிலாவைச் சேர்கின்ற பாம்பை ஒக்கும் (அரவின் – இன்
சாரியை), மருதம் சான்ற மருதத் தண் பணை – மருத ஒழுக்கம் நிலைபெறுதற்கு அமைந்த மருத
நிலத்தின் குளிர்ந்த வயல், அந்தணர் அருகா – அந்தணர்கள் குறைதல் இல்லாத, அருங்கடி வியன்
நகர் – அரிய காவலையுடைய பெரிய மனைகள், அம் தண் கிடங்கின் – அழகிய குளிர்ச்சியான
அகழியுடைய, அவன் ஆமூர் எய்தின் – அவனுடைய ஆமூரை நீவீர் அடைந்தால்
நல்லியக்கோடனின் ஊர்ச்சிறப்பும்
அதன் அண்மையும்
Advertisements
REPORT THIS AD