Professional Documents
Culture Documents
அகநானூறு- நல்லாவூர் கிழார்
அகநானூறு- நல்லாவூர் கிழார்
(தலைவன் கூற்று)
திணை : மருதம்
துறை : வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது.
பாடி யவர் : நல்லாவூர் கிழார்
சுற்றத்தார் கல் என்ற ஒலியினராய் விரைந்து வந்து தலைவியை நோக்கி, ‘நீ பெரிய
மனை வாழ்க்கைக்கு உரியவளாக ஆகுக’! என்று வாழ்த்தி, என்னிடம் அவளைக் கூட்டினர். ஓ ர்
அறையில் புணர்ச்சிக்குரிய இரவில், அவள் நாணத்தால் தன் புதுப்புடவைக்குள் ஒடுங்கிக் கிடந்த
இடத்தை நான் அடைந்தேன். அவளைத் தழுவும் விருப்பத்துடன் அவள் முகத்தை
மூடியிருந்த புடவையைச் சிறிது திறந்தேன். அப்போது அவள் தன் பெண்மையால் அஞ்சிப்
பெரு மூச் செறிந் தாள் . அப்போது ‘உன் உள்ளம் எண்ணியதை மறைக்காது சொல்வாய்!’ எனப்
பின் பு வின வினே ன் . அதனால் இனிய மகிழ்ச்சியுடன் கூடிய இருக்கையில், மானைப் போன்று
மடத்தையும் செருக்கை உடையதுமான பார்வையும், ஒடுங்கிய கூந்தலையும் உடைய மாமை
நிறத்தை உடையவள் சிவந்த மணிகள் பதித்த ஒளி பொருந்திய குழை காதில் அசைய, உள் ளம்
நிறைந்த மகிழ்ச்சியோடு விரைந்து தலை குனிந்தாள்.
துறை விளக்கம் : பரத் தை யர் சே ரியினின் று ம் வந் த தலை வன் தோ ழியை வாயிலாக
வேண்டினான்; தோழி, அதனை மறுத்தபோது அவன் முன்னர் நிகழ்ந்த ஒன்றை நினைவு கூர்ந்து
அவளுக்குச் சொல்லியது. தலைவியோடு மகிந்திருந்த தலைவன், தலைவிக்கு முன்பு நிகழ்ந்ததைச்
சொல்லியதுமாம்.
1. ' உழு ந் து தலை ப் பெய் த' எனத் தொடங்கும் அகநானூற்றுப் பாடலைப் பாடியவர் யார்?
விடை: நல்லாவூர் கிழார்
3. 'வால் இழை மகளிர் நால்வர்' இதில் ‘வால் இழை’ என்பது எதனைக் குறிக்கிறது.
விடை: மங்கல அணிகலன்
6. உள் ளத் தில் உள் ளதை மறை க் காமல் கூறு ? என்று யார் யாரிடம் வினவியது?
விடை: தலைவன் தலைவியிடம்
10. பழந் தமிழரின் திரு மண மு றை யைக் கு றிப் பிடு ம் ச ங் க இல க் கிய நூல் எது ?
விடை: அகநானூறு