Professional Documents
Culture Documents
சமயக் குரவர்கள் + images
சமயக் குரவர்கள் + images
பன்னிரு திருமுறைகள்:
நம்பியாண்டார் நம்பி தாம் தொகுத்த சைவ சமயப் பாடல்களுக்குத் திருமுறை என்னும் பொதுப் பெயர்
தந்தார். அவை முதல் திருமுறை, இரண்டாம் திருமுறை முதலிய பெயர்களைப் பெற்றன. அதாவது, ஒன்று, இரண்டு,
மூன்றுபோன்ற எண்ணுப் பெயரில் வழங்கின .திருஞானசம்பந்தருடைய பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாக இடம்
பெற்றன. திருநாவுக்கரசருடைய பாடல்கள் நான்கு, ஐந்து, ஆறுதிருமுறைகளாக வைக்கப்பட்டன. சுந்தரர் பாடல்கள்
ஏழாம் திருமுறையாக எண்ணப்பட்டது. இவ் ஏழு திருமுறைகளும் தேவாரம் என்று குறிப்பிடப்பட்டன.
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறை ஆகும். ஒன்பதாம் திருமுறை
ஒரு தொகுப்பு நூல். இது திருவிசைப்பா, திருப்பல்லாண்டு எனப்படும். இதில் ஒன்பது அடியார்கள் பாடிய பாடல்கள்
அடங்கும். திருமூலரின் திருமந்திரம் பத்தாம் திருமுறை. நம்பியாண்டார் நம்பி இப்பத்துத் திருமுறைகளையே
தொகுத்தார் என்றும் பதினொராம் திருமுறை அவர் காலத்துக்கு பின்னால் தொகுக்கப்பட்டது என்றும் கூறுவார்கள்.
பதினொராம் திருமுறையும் ஒரு தொகுப்பு நூலே ஆகும். காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள்
முதலியவர்களுடைய நூல்களோடு நம்பியாண்டார் நம்பியின் நூல்களும் இதில் அடங்கும். கி.பி. பன்னிரண்டாம்
நூற்றாண்டில் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகும்.
திருஞானசம்பந்தர்:
பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. பெரும்பாலும் ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாம் பாடலில்
இராவணன் கயிலாய மலையைத் தூக்க முயன்று துன்பப் பட்டதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் மாலும் தேடிக்
காண முடியாத சிவன் என்றும், பத்தாம் பாடலில் சமண பௌத்த மதத் துறவிகளின் போலி வாழ்ககை
் யைக் கடிந்தும் ,
எள்ளி நகையாடியும், பதினோராம் பாடலில் தம் பெயரை இணைத்தும் அப்பதிகத்தைப் படிப்பதனால் உண்டாகும் பயனைக்
குறிப்பிட்டும் பாடியுள்ளார்.
பக்தியால் நிறைவு பெற வேண்டிய மனித உள்ளம் ஈனக் கவலையால் துன்புறுவதைக் கண்டு ஞானசம்பந்தர்
‘நினைப்பெனு நெடுங்கிணற்றை நின்று நின்றயராதே’ (முதல். 118,8) என்று தேற்றி, உய்யும்வழி கூறுகிறார்.
எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், ஊழ் வலிமிக்கதாக உள்ளதே என நலிவோருக்குப் ‘பக்தி எல்லாத் தடைகளையும்
நீக்கி நன்மை பயக்கும். ஆகவே ‘ பக்தி செய்ம்மின்’ என்று பாடுகிறார். தலங்கள் தோறும் சென்று பக்தியையும்
் காழியர்கோனின் (சம்பந்தரின்) பாடல்களில் இயற்கை வருணனை தனியிடம் பெற்றுச் சிறப்புடன்
தமிழையும் வளர்தத
திகழ்கின்றது. இவருடைய பாடல்கள், சைவத் திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளாக இடம் பெற்றுள்ளன.
புதிய யாப்பு வடிவங்களைக் கையாண்டு ஏக பாதம், திருஎழுகூற்றிருக்கை, மாலைமாற்று, நாலடி மேல் வைப்பு, ஈரடிமேல்
வைப்பு, கோமூத்ரி முதலிய பாடல் வகைகளும், யமகம், மடக்கு முதலிய சொல்லணிகளும் அமையப் பாடியுள்ளார்.
இவருடைய காலம் 7 ஆம் நூற்றாண்டு.
திருநாவுக்கரசர்:
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” (ஆறாம். 98,1) என்று கூறித் திருத்தாண்டகம் பாடி
் ார். வாகீசர், அப்பர், தாண்டகவேந்தர் என்ற சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு.
இறைவன் அருள்நோக்கி வாழ்நத
தலங்கள் தோறும் சென்று உழவாரப்பணி செய்து சைவத்தைப் பரப்பினார். மேலும் மன்னனையும் சைவனாக மாற்றினார்
என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாம். வாழ்ககை
் யில் கடைப்பிடிக்க வேண்டிய, வாழ்ககை
் க்குத் தேவையான உண்மை
நெறிகள் பலவற்றைத் தம் பாடல்களில் நாவுக்கரசர் உணர்த்தியுள்ளார். “மெய்ம்மையாம் உழவைச் செய்து” என்று
தொடங்கும் (நான்காம், 96,2) பக்திப்பதிகப் பாடல், சிவகதியாம் நற்கதி அடையும் வழியைக் கூறுவதாகும்.
வாழ்ககை
் யாகிய பிறவிப் பெருங்கடைலைக் கடக்க நமக்குச் சிறப்பாக உதவுவது, நல்ல மனமும், நல்ல தெளிவான
அறிவும் ஆகும். இதனை ‘ மனம் எனும் தோணி பற்றி’ (நான்காம். 46, 2) எனும் பாடல் வழியாக நமக்கு
உணர்த்துகின்றார்.
‘முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்’ (ஆறாம். 25,7) என்னும் பாடல் மிகச் சிறந்த அகப்பொருள் பொதிந்த
பாடலாகும். இவருடைய பாடல்கள் 4 , 5, 6 ஆகிய திருமுறைகளாக விளங்குகின்றன. இவை திருநேரிசை,
திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம் எனப் பல வகைகளாக அமைந்துள்ளன. அவர் காலத்தே வாழ்ந்த அப்பூதியடிகள்
எனும் அந்தணர் திருநாவுக்கரசு என்னும் பெயரை மந்திரம்போல் போற்றி, அவரையே தெய்வமாக மதித்து வழிபட்டு
வந்தார். அப்பர் பாடியனவாக இப்போது 3066 பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன.
சுந்தரர்:
தமக்கு முன் சைவத் தொண்டு செய்த சிவனடியார்களை- நாயன்மார்களை இவர் போற்றிப் பாடியுள்ளார்.
சுந்தரர் தேவாரத்தில் உள்ள திருத்தொண்டத் தொகை நாயன்மார்களின் பெயர்களையும் சிறப்புகளையும் கூறுகிறது.
பெரியபுராணம் என்னும் நூல் அமைந்திடக் காரணமான திருத்தொண்டத்தொகை பக்தி இலக்கிய வரலாற்றில் ,
குறிப்பாகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான ஓர் இடத்தைப் பெற்றுள்ளது. சுந்தரத் தமிழில் தலங்கள் தோறும்
சென்று சுந்தரர் பாடியுள்ளார். இறைவனே எல்லாம் அருளுபவன். ஆகையால் செத்துப் பிறக்கின்ற மானிடரைப் புகழ்ந்து
இச்சகம் பேசுதல் தவறாகும் என்று குறிப்பிட்டுள்ளார். ஞானசம்பந்தர் பதிகங்களைப் போல்‘கடைக்காப்பு’ அமைந்து 11
பாடல்களாக, திருப்பாட்டுப் பதிகங்கள் என்று இவருடைய பதிகங்கள் காணப்படுகின்றன. இசையோடு கூடியதாய்,
அழகிய தமிழில் அமைந்துள்ள இவர் பாடல்கள் சுந்தரர் தேவாரம் எனப் போற்றப்படுகின்றன.
மாணிக்கவாசகர்:
பிற திருமுறைகள்:
ஒன்பதாம் திருமுறை:
பத்தாந் திருமுறை:
பதினோராம் திருமுறை:
பதினோராம் திருமுறை, திரு ஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன்,
சேரமான் பெருமாள், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபில தேவர், பரணதேவர், இளம்பெருமான் அடிகள், பட்டினத்துப்
பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிருவரின் 40 நூல்கள் இத்திருமுறையில் அடங்கும். மொத்தப் பாடல்கள்
1401.
காரைக்காலம்மையார்:
பட்டினத்தார்:
நக்கீரர்:
பன்னிரண்டாம் திருமுறை
.
பக்தி இலக்கிய புகைப்படங்கள்
திருஞான சம்பந்தர்:
திருநாவுக்கரசர்:
சுந்தரர்:
மாணிக்கவாசகர்: