Professional Documents
Culture Documents
7,80,000
லாபம்
இடுபொருள்
இடுபொருள்
கடையம் எனும் ஊரில் இருக்கிறது, சண்முகவேலுவின் எலுமிச்சைத் தோட்டம். இருபுறமும் மூலிகைகள்,
பூச்செடிகள் அணிவகுத்துள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். வீடடு
் க்குப் பின்புறம் இருக்கிறது
எலுமிச்சைத் தோட்டம். ்
ஒரு ந ண ் ப கல் வே ளையி ல்அறு வடைசெ ய் தஎ லு மி ச் சையைத் ்
தரம்பிரித்துக் கொண்டிருந்த அவரைச் சந்தித்தோம். எலுமிச்சைச்சாறு கொடுத்து உபசரித்த சண்முகவேலு,
மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார்.
மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை எலுமிச்சைக்கு நல்ல விலை கிடைக்கும். ஒரு வருஷத்துக்கு 32,500
கிலோவுக்குக் குறையாமல் எலுமிச்சை கிடைக்குது.
அதேமாதிரி ஆடிக்காத்து துவங்குறதுக்கு முன்னாடியும் மொத்தமா பறிச்சிடுவேன். மற்றகாலங்களில்,
அதாவது சந்தையில் விலை குறைவாகக் கிடைக்கும் காலங்களில் கீழே விழுகிற காய், பழங்களை மட்டும்
சேகரிச்சு விற்பனைக்கு அனுப்புவேன். பொதுவா, மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை எலுமிச்சைக்கு
நல்ல விலை கிடைக்கும். மழைக்காலத்தில் விலை இருக்காது. விரத காலங்கள், கோயில் திருவிழாக்கள்,
முகூர்த்த தினங்களில் நல்ல விலை கிடைக்கும்.
“இரண்டரை ஏக்கரில் எலுமிச்சை மூலமா ஒரு வருஷத்துக்கு 32,500 கிலோவுக்குக் குறையாமல் எலுமிச்சை
கிடைக்கிது. பழங்களைத் தரம் பிரிச்சுத்தான் மார்க்கெட்டுக்கு அனுப்புவேன். முதல் தரப் பழங்களுக்கு நல்ல
விலை கிடைக்கும். மற்ற பழங்களுக்கு விலை குறைவாத்தான் கிடைக்கும். ஒரு கிலோ எலுமிச்சைக்கு 20
ரூபாய்க்குக் குறையாமல் விலை கிடைக்கும். சீசன் சமயங்கள்ல நல்ல விலை கிடைக்கும். சில சமயங்களில்
ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேலகூட விற்பனையாகும்.
ஒரு ஏக்கர் நிலத்தில் எலுமிச்சைச் சாகுபடி செய்வது குறித்துச் சண்முகவேலு கூறிய தகவல்கள் பாடமாக
இங்கே…
நடவு செய்த 3-ம் மாதம் முதல் 12-ம் மாதம் வரை ஒவ்வொரு பாசனத்தின்போதும் 200 லிட்டர்
ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். நடவு செய்த 12-ம் மாதத்துக்குமேல்
10 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பஞ்சகவ்யாவையும் ஜீவாமிர்தத்தையும் கொடுத்துவர
வேண்டும். ஜீவாமிர்தம் எனில் வடிகட்டிய 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் அப்படியே
கலந்துவிடலாம்.
பஞ்சகவ்யா எனில், 3 லிட்டர் பஞ்சகவ்யாவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து அந்தக் கரைசலைப்
பாசன நீரில் கலந்து விட வேண்டும்.
தொடர்ந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை 1 கூடை தொழுவுரம், 500 கிராம் கடலைப் பிண்ணாக்கு, 250
கிராம் வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு கன்றுக்கு அருகிலும் (2 அடி தூரத்தில்)
சிறு பள்ளம் பறித்து இட வேண்டும். கன்றில் முளைக்கும் பக்கக்கிளைகளைக் கவாத்துச் செய்ய வேண்டும்.
அதேபோல், காய்ந்த கிளைகளையும் அவ்வப்போது கவாத்து செய்துவிட வேண்டும். எலுமிச்சைக்
கன்றுகளைச் சுற்றிக் களைகள் மண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நடவு செய்த 5-ம் மாதத்தில் பூக்கத்தொடங்கும். அந்தப் பூக்களை உதிர்த்துவிட வேண்டும். நடவு செய்து
இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பூக்கும் பூக்களைக் காய்க்க அனுமதிக்கலாம். படிப்படியாக மகசூல்
அதிகரித்து 5-ம் ஆண்டுக்கு மேல் நல்ல மகசூல் கிடைக்கும். அறுவடை செய்யும்போது கிளைகளைக்
குச்சியால் தட்டியோ, மரத்தை உலுக்கியோ பழங்களை உதிர்க்கக் கூடாது. இதனால், மரத்துக்கும்,
கிளைகளுக்கும் பாதிப்பு உண்டாகும். பூ மற்றும் பிஞ்சுகளும் உதிர்ந்து விடும். நீளமான குச்சி ஒன்றை எடுத்து
அதன் முனையில் கொக்கியைப் பொருத்தி அதன் மூலம் பழங்களைப் பறிக்க வேண்டும். பழத்தை மரத்தில்
முழுவதும் பழுக்கவிடக் கூடாது. பச்சை நிறம் இளம் மஞ்சள் நிறத்துக்கு மாறும் சமயத்தில் பறித்துவிட
வேண்டும்.