Professional Documents
Culture Documents
காதர் மீரான்
நாம் செய்யும் வேலையை எப்படிச் செய்கிறோம் என்பதைப்
பொறுத்துதான் வெற்றி அமையும். பல இடங்களில் தென்னை விவசாயிகள்
போதுமான வருமானம் இல்லை என வேதனையை வெளிப்படுத்திக்
கொண்டிருக்கும் நேரத்தில்… தென்னைக்கு இடையில் பல பயிர்களை
ஊடுபயிராகச் சாகுபடி செய்வதோடு, விளை பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை
செய்து நல்ல லாபம் எடுத்து வருகிறார்கள், பல விவசாயிகள்.
அத்தகையோரில் குறிப்பிடத்தக்கவர், திண்டுக்கல் மாவட்டம்,
சித்தையன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த காதர் மீரான். இவர்
தென்னந் தோப்புக்குள் வாழை, மா, எலுமிச்சை, பலா, ரம்புட்டான்,
மங்குஸ்தான் உள்ளிட்ட பல வகையான பயிர்களைச் சாகுபடி செய்து
தென்னந்தோப்பை ஓர் உணவுக்காடாக உருவாக்கி வைத்திருக்கிறார்.
பலா...
பலா...
அதைத் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சப்போ எனக்குள்ள பெரிய மாற்றம்
உண்டாச்சு. பசுமை விகடன் மூலமாகத்தான் சுபாஷ் பாலேக்கர் பத்தித் தெரிஞ்சிக்கிட்டேன்.
தொடர்ந்து நம்மாழ்வார், பாலேக்கர் வீடியோக்களைப் பார்த்தேன்.
அவங்க எழுதின புத்தகங்களையும் படித்தேன். அதன் பிறகு,
கலப்புப்பயிர் சாகுபடிதான் செலவைக் குறைக்க ஒரே வழினு
புரிஞ்சது. அதுவும் முழுமையான இயற்கைவழி வேளாண்மைதான் செலவைக்
குறைக்குமென்று உணர்ந்தேன். இதன்படி உருவாக்கினதுதான் இந்த
உணவுக்காடு” என்ற காதர் மீரான் உணவுக்காட்டைச்
சுற்றிக்காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.
தேங்காய் அறுவடை...
தேங்காய் அறுவடை...
“தென்னை மரங்கள் மட்டுமே இருந்த இந்தத் தோப்பில் பல்வேறு
மரங்களைத் தற்போது நடவு செய்திருக்கேன். வேலியோரத்திலும் பாதை
ஓரத்திலும்கூட நிறைய மரங்கள் இருக்கு. குமிழ், மலைவேம்பு, தேக்கு, தோதகத்தி,
வேம்பு, சந்தன வேம்பு மரங்கள் நடவு செய்திருக்கேன்.
தென்னைக்கிடையில் ஊடுபயிர்கள்...
தென்னைக்கிடையில் ஊடுபயிர்கள்...
பண்ணையில் ஆட்கள் தலையீட்டைக் குறைச்சிக்கிட்டிருக்கேன்.
பயிர்களைத் தொந்தரவு பண்றதே இல்லை. அதனால், 70 சதவிகித செலவு
குறைஞ்சிருக்கு. தென்னையில் மகசூல் குறைவா இருந்தாலும் ஊடுபயிர்கள் மூலமாகக்
கிடைக்கிற வருமானம் ஈடுகட்டிடுது” என்ற காதர் மீரான், வருமானம்
பற்றிப் பேசத் தொடங்கினார்.