நாங்கள் ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சார்ந்தவர்கள். நாங்கள் அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க்காடுகளில் வாழ்வதையே விரும்புவோம். நாங்கள் காட்டின் ராஜாக்கள் எனவும் அழைக்கப்படுவோம்,,,,,, நாங்கள் யார்?
எனக்கு இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள், ஒரு வாய்.
நான் அறிவியல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுகிறேன். மனிதன் செய்யும் வேலைகளைச் செய்வதற்காக மனிதனால் வடிவமைக்கப்பட்டவன் நான்,,,,,,நான் யார்?
என் முன்கைகளே எனது இறக்கைகளாகும்.
என் உடல் சிறகுகளினால் மூடப்பட்டிருக்கும். இறக்கைகளும், வாலும் நீண்ட இறகுகளை உடையனவாக இருப்பதனால் என்னால் இறக்கைகளை விரித்துப் பறக்க முடியும். நான் யார்?