Professional Documents
Culture Documents
விஜயபாரதம் December
விஜயபாரதம் December
மதமாற்றம் தடுப்பு
திருவண்ணாமலை மாத்தூர் காமராஜ்
நகரில் ஹிந்துக் குழந்தைகள் மற்றும்
பெண்களை கிறிஸ்துமஸ் விழாவை vijayabharatham.org
காரணம் காட்டி, மதமாற்றம் செய்யும் பணி நடைபெற்றுக்
க�ொண்டிருந்தது. இதனை தடுக்கச் சென்ற இந்து முன்னணி
ஒன்றியத் தலைவர் ராமகிருஷ்ணனுக்கு கிறிஸ்தவ மதமாற்றுக்
கும்பலை சேர்ந்தவர்கள் க�ொலை மிரட்டல் விடுத்தனர். இது
சம்பந்தமாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதேப�ோல, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு கிறிஸ்தவ
மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் பரிசு தருவதாகக் கூறி
மதம்மாற்றும் ந�ோக்கத்தோடு ஹிந்து குழந்தைகளை
மருத்துவமனை நிர்வாகம் அழைத்தது. தகவலறிந்த
இந்துமுன்னணி ப�ொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து
சென்று மதமாற்றத்தை தடுத்து நிறுத்தினர்.
ஆக்கிரமிப்பு இடத்தில் தி.மு.க அலுவலகம்
மதுரை பழங்காநத்தம் பைபாஸ்
ர�ோடு அரசு ப�ோக்குவரத்து கழக
தலைமை அலுவலகத்தில் உள்ள
சுமார் ஒரு க�ோடி ரூபாய் மதிப்புள்ள
இடம் தி.மு.க த�ொழிற்சங்கத்தால்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்கு
vijayabharatham.org
தி,.மு.கவின் த�ொழிற்சங்கத்திற்காக
மாடியுடன் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு
நிர்வாகமும் அனுமதி அளிக்கவில்லை. மாநகராட்சி அனுமதியும்
பெறப்படவில்லை. இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கேட்டு
மாநகராட்சி மூன்று முறை 'ந�ோட்டீஸ்' அனுப்பியது. எனினும்
எதையும் கண்டுக�ொள்ளாமல் கட்டுமானப் பணிகளை தி.மு.க
த�ொழிற்சங்கம் த�ொடர்ந்து வருகிறது. இதனையடுத்து இறுதி
எச்சரிக்கையாக நான்காவது ந�ோட்டீஸ' அனுப்பப்பட்டு
உள்ளது. அனுப்பப்பட்ட ந�ோட்டீஸ்களுக்கு நிர்வாகம் சார்பில்
'எந்த கட்டடமும் எங்களால் கட்டவில்லை. நடைபெறும்
கட்டுமானத்திற்கும் நிர்வாகத்திற்கும் த�ொடர்பில்லை' என
பதில் அளித்துள்ளது. இதனால், கட்டுமானப் பணி மேலும்
த�ொடர்ந்தால் அந்த இடத்திற்கு 'சீல்' வைக்க வாய்ப்புள்ளதாகத்
தெரிகிறது.
மமதாவுக்கு பின்னடைவு
க�ோவாவில் சமீபத்தில் காங்கிரஸ்
கூட்டணியை விட்டு வெளியேறி திருணமூல்
காங்கிரஸ் கட்சிக்குத் தாவிய முன்னாள்
க�ோவா சட்டமன்ற உறுப்பினர் லாவ�ோ vijayabharatham.org
மம்லேதார், மற்றும் சுஜய் மல்லிக், ராம் மந்த்ரேக்கர், க�ோமல்
பர்வார், கிஷ�ோர் பர்வார் உள்ளிட்ட ஐந்து பேர் திருணமூல்
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். இதுகுறித்து
அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், ‘க�ோவாவிற்கும் க�ோவா
மக்களுக்கு பிரகாசமான நாட்களைக் க�ொண்டு வருவார்கள்
என்ற நம்பிக்கையுடன் நாங்கள் திருணமூல் கட்சியில்
இணைந்தோம். ஆனால் அக்கட்சி க�ோவாவையும் க�ோவா
மக்களையும் புரிந்து க�ொள்ளவில்லை. மக்களை மதரீதியாக
பிளவுபடுத்துகிறது. க�ோவா மக்களை பிரிக்கும் முயற்சிக்கு
நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தாங்கள் ஆளும் மேற்கு
வங்கத்திலேயே பெண்கள் நிலையை மேம்படுத்துவதில்
தவறிவிட்ட திரிணாமுல் காங்கிரஸ், க�ோவாவில் எதையும்
பெரிதாக செய்யப்போவது இல்லை’ என தெரிவித்து உள்ளனர்.
மேலும், இதற்கு பிரசாந்த் கிஷ�ோரின் ஐபேக் நிறுவனத்தை
அவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். ‘அவர்கள் க�ோவா
மக்களை முட்டாளாக்குகிறார்கள், மாநில மக்கள் குறித்த புரிதல்
அவர்களுக்கு இல்லை’ என்றும் கூறியுள்ளனர். விரைவில்
க�ோவாவில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இது, மமதா
பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மின்விநிய�ோகத்திற்கு மத்திய அரசு உதவி
மாநிலங்களுக்கு ச�ொந்தமான மின்
விநிய�ோக நிறுவனங்களின் செயல்பாட்டு
திறனை மேம்படுத்தவும், அவற்றின் நிதி
நிலையைச் சீர்படுத்தவும், சீர்திருத்தங்கள்
அடிப்படையிலான, முடிவுகள் சார்ந்த,
சீரமைக்கப்பட்ட விநிய�ோகத் திட்டத்தை vijayabharatham.org
மத்திய மின்சார அமைச்சகம் த�ொடங்கியது. மின் விநிய�ோகத்தை
நவீனப்படுத்துதல், கட்டமைப்பை வலுப்படுத்துதல்
ஆகியவற்றுக்கு மின் விநிய�ோக நிறுவனங்களுக்கு மத்திய
அரசு நிதி உதவி வழங்குகிறது. ரூ. 3,03,758 க�ோடி மதிப்பில்
ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்துக்கு மத்திய அரசு பட்ஜெட்டில்
ரூ. 97,631 க�ோடி ஒதுக்கியுள்ளது. 2025 - 26 நிதியாண்டு
வரை இது செயல்பாட்டில் இருக்கும். சீர்திருத்தங்களின்
அடிப்படையில் நிதி உதவி அளிக்கப்படும். அனைவருக்கும்
ஒரே அணுகுமுறை என்ற வகையில் இல்லாமல், ஒவ்வொரு
மாநிலமும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்
வகையிலான செயல் திட்டத்தின் அடிப்படையில் இதன்
அமலாக்கம் இருக்கும் என்பது இதன் தனித்துவமாகும். இந்தச்
சீர்திருத்தங்களை மேற்கொண்டு தங்கள் நிறுவனங்களின்
இயக்கத்தை சீர்படுத்தும் முனைப்பில், அசாம், மேகாலயா
ஆகிய இரண்டு வடகிழக்கு மாநிலங்கள் முன்னணியில்
உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
vijayabharatham.org
கர்மய�ோகி
விருது
2021
vijayabharatham.org
இதுதான் எதார்த்தம்
இந்த முதிய ஆப்பிரிக்கா சிங்கத்தின்
புகைப்படத்தைப் பாருங்கள். இன்னும்
சிறிது நேரத்தில் இது இறந்துவிடப்
ப�ோகிறது. ஒரு காலத்தில் இதனுடைய
ஒரு சிறிய உறுமல் ம�ொத்த காட்டையே
vijayabharatham.org குலைநடுங்கச் செய்தது. இதைக்
கண்டாலே அனைத்து விலங்குகளும் தலைத் தெறிக்க ஓடும்.
புலி, சிறுத்தைகள்கூட இதனை கண்டால் பதுங்கும். ஆனால்
இப்போது இது வயது முதிர்ச்சி பெற்ற சிங்கம். இதனால்
முன்புப�ோல துரத்தி சென்று வேட்டையாட முடியாது. கிடைக்கும்
மாமிசத்தை உண்ணக்கூட வாயில் பற்கள் கிடையாது. நகரவே
இப்பொழுது சிரமப்படுகிறது. இதுதான் நிகழும் என நன்றாகத்
தெரிந்து இந்த சிங்கம் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து
தனியே வந்துவிட்டது. காட்டு நாய்களின் கூட்டம் இதனை
பார்த்தால் அவ்வளவுதான். இந்த சிங்கத்தின் இறப்பு அவ்வளவு
சாதாரணமாக இருக்காது. அந்த சிங்கத்தை அவை க�ொஞ்ச
க�ொஞ்சமாக கடித்துக் க�ொல்லும். நரக வேதனை அது.
இதுதான் தனது முடிவு என்று இந்த சிங்கத்துக்கு நன்றாகத்
தெரியும். ஒரு துறவி ப�ோன்று அமைதியாக தனது மரணத்தை
ந�ோக்கி காத்துக் க�ொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில்
எல்லாம் முடிந்து விடும். எனினும் தன்னுள் இருக்கும் க�ொஞ்ச
சக்தியை க�ொண்டு நிற்க முயற்சிக்கிறது இந்த சிங்கம். சாவிலும்
சிங்கம் சிங்கமே.
நீ உன்னுடைய ப�ொருளின் மீது பெருமைக�ொள்கிறாயா?
நீ உன்னுடைய சரீர அழகின் மீது கர்வம் க�ொண்டவளாக
இருக்கிறாயா? நீ உன்னுடைய புகழ்ச்சியின் மீது இச்சை
க�ொண்டவனாக இருக்கிறாயா? உன் ச�ொந்தபந்தங்கள்,
நட்பின்மீது மிகுந்த அபிமானம் வைத்திருக்கிறாயா? நீயும் ஒரு
நாள் இந்த சிங்கத்தை நிலைக்கு வருவாய். நாம் எல்லோரும்
வருவ�ோம். அப்பொழுது நம்முடைய இந்த ப�ொருள், அழகு,
புகழ்ச்சி, பெருமை, ச�ொந்தபந்தங்கள், நட்பு எனும் மாயைகள்
அனைத்தும் ஒரு தேவையில்லாத ஒரு மலிவான ப�ொருளாக
மாறிவிடும். இதுவே வாழ்க்கையின் க�ொடிய எதார்த்தம். ஒரு
நாள் ஒரு சில நிமிடங்கள் உன்னுடைய ம�ொத்த வாழ்வும் உன்
கண் முன் பிரதிபலிக்கும். அப்பொழுது அந்த பிரதிபலிப்பை
பார்த்து ரசிக்கும் அளவிற்கு நீ வாழ்ந்திருக்க வேண்டும்.
திருப்பாவை 13
தூக்கத்திலிருக்கும் பெண்ணை
ந�ோக்கி," "பறவை உருவமெடுத்து
பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும்,
அரக்கனான ராவணனின் தலையைக்
க�ொய்யவும் அவதாரம்
எடுத்த நாராயணனின் புகழைப்
பாடியபடி நாம் அனைவரும் பாவை
ந�ோன்பு நிகழும் இடத்திற்குச் சென்று
விட்டோம். கீழ்வானத்தில் சுக்கிரன் என்ற
வெள்ளிக்கிரகம் உச்சிக்கு வந்து விட்டது,
குரு என்ற வியாழக் கிரகம் மறைந்து vijayabharatham.org
விட்டது! பறவைகள் பாடத் த�ொடங்கி விட்டன. விழித்தும்
விழிக்காமல் அரை நித்திரை காண்பவளே!
விடியலை உணர்த்தும் அறிகுறிகள் தெரிந்தும், குளிக்க
வராமல் படுக்கையில் கிடந்து என்ன செய்கிறாய் பெண்ணே!
தூக்கத்தைத் தவிர்த்து எங்களுடன் நீராட வா!," என
கண்ணனைப் பாடிவரும் த�ோழியர் அழைக்கின்றனர்.
திருவெம்பாவை 13
"தடாகம் நடுவே பூத்துக் குலுங்கிய
நிலையில் கருநீலக் குவளை மலர்கள்.
அருகில் பூத்துப் படர்ந்த அம்சமாய்
செந்நிறத்தாமரை மலர்கள் தங்கள்
அழுக்கை இக்குளத்தில் களைய மக்கள்
அணி அணியாய் வருகை. அவர்கள்
உதடுகளில் நமசிவாய மந்திரத்தின் ஒலி. vijayabharatham.org
எங்கள் பிரானான சிவனும், பார்வதியும் ப�ோல் இத்தகைய
பின்னணியில் தடாகத்தின் த�ோற்றம் தெரிகிறது.
தாமரை மலர்கள் நிறைந்த இந்தத் தெய்வீக குளத்தில், நம்
சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் ஒலியெழுப்ப,
நம் உள்ளமெல்லாம் ப�ொங்க பாய்ந்து நீராடுவ�ோம்," எனத்
த�ோழிகள் கூறுகின்றதாய் மணிவாசகர் இப்பாசுரத்தைக்
கட்டமைத்துள்ளார். "இயற்கையே இறைவனையும்
இறைவியையும் அடியார்களின் கண்களுக்கு நினைவூட்டிக்
க�ொண்டிருக்கிறது. மனமாகிற ப�ொய்கையில் இவ்விருவரும்
தங்கியிருப்பதை நாம் உணர வேண்டும்" என்பது பாடலின்
சாரம்.
ஆர். கிருஷ்ணமூர்த்தி