Professional Documents
Culture Documents
விலைபோகும் விளைநிலங்களும்.final
விலைபோகும் விளைநிலங்களும்.final
உலகெங்கிலும் பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் உயிர் தொழிலாக உழவுத் தொழில்
இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணியாக கருதப்படுகிறது.
- நம் முப்பாட்டன் வள்ளுவன், உழவுத் தொழிலே உலகிற்கு அச்சானி என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே உழவின் அவசியத்தையும், மேன்மையையும் பதிவு செய்துள்ளார்.
இதற்குச் சான்றுகளாக நம் இலக்கியங்களில் பல பதிவுகள் உள்ளன. உலகிற்கு உழவுத் தொழிலை கற்றுக்
கொடுத்து செழிப்புடன் வாழ்நத
் தமிழினம், தனது வாழ்வாதாரத்தை இழந்து இன்று பல்வேறு
இன்னல்கள்க்கு ஆளாகியுள்ளது.
ஆண்டிற்கு ஆண்டு உணவு உற்பத்தியும் ,பயிரிடும் நிலப்பரப்பும் அசுர வேகத்தில் குறுகிக் கொண்டே
வருகிறது. இந்நிலை நீடிக்குமேயானால் உணவு பஞ்சம் என்பது தலைவிரித்தாடும் என்பதை அரசு உள்பட
அனைவரும் அறிவர்.
நிலை இப்படி இருக்க, வேளாண்மை செய்யும் நிலப்பரப்பு படு வேகமாக குறைந்துக் கொண்டே வருவது
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. அரசு ஒருபுறம் தொழில் வளர்ச்சி என்று பன்னாட்டு
நிருவனங்களுக்கு நிலங்களை கையகப்படுத்திக் கொடுத்து கொண்டெ இருக்கிறது. மற்றொரு புறம்
ரியல் எஸ்டேட் எனப்படும் மனை வணிக நிலத்தரகர்களால் பிடுங்கப்படுகிறது மிகுந்த
வேதனையளிக்கிறது.
இவைகள் ஏதோ சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், ஓசூர் போன்ற தொழில்சாலை நகரங்களை
சுற்றியுள்ள பகுதியில் நடைபெருகிறது என்று நம் நினைப்போமேயானால் மிகத் தவறாகும்.
திருச்சி, தஞ்சை, திருவாரூர்,நாகை போன்ற காவிரி பாயும் ,முப்போகம் நெல் விளைந்த நிலங்களும்
இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது யாராலும் செரித்துக் கொள்ள முடியாத அவலமாக
உள்ளது.உழவர்களை ஓர் திட்டமிட்ட பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கி அவர்களின் உடைமைகள்
பிடுங்கப்படுகிறது.
இதை விலை கொடுத்து வாங்குவது பெரும்ப்பாலும் நம்மில் ஒருவர் அல்லர் வேற்று மாநிலங்களில்
இருந்து குடியேரி இங்கு வாழ்பவர்களே, இன்று பட்டி தொட்டி எங்கும் அயல் மாநிலத்தவர்களே தம்
ஓவ்வொரு ஊரிளும் உள்ள வணிக நிருவனங்களை கணக்கெடுபோமேயானல் வணிக நிருவணங்கள்
அயலாரிடம் உள்ளது.
எற்கனவே தொடர் மின்வெட்டு, ஆள் பற்றாக்குறை, உரத் தட்டுப்பாடு மற்றும் வாங்கிய கடனுக்கு
வட்டிகட்ட முடியாத சூழல் போன்ற பல நெருக்கடிகளுக்கு இடையில் காவிரி டெல்டா உழவர்கள் உழவுத்
தொழிலை நடத்தி வந்த சூழலில் இந்திய, கர்நாடக அரசுகளின் வஞ்சகத்தால் காவிரி நீர் தொடர்ந்து
முடக்கப்படுவதால், இப்பிரச்சனைகளை தாக்குப்பிடிக்க முடியாத உழவர்கள் கடன் தொல்லையால்
இனியும் உயிர் வாழ முடியாது என்ற அவ நம்பிக்கை எற்பட்டு உயிரையும் மாய்த்துக் கொள்கிற துயரம்
தொடந்து கொண்டே உள்ளது.
சிலர் தங்கள் நிலங்களை விற்று கடன்கள் அடைக்கின்றனர். அண்மையில் உயிரிழந்த நான்கு காவிரி
டெல்டா உழவர்களின் உழவர்களின் குடும்பங்களே நிலையே இதற்கு சான்று. இந்நிலங்கள் பெரு
முதளாலிகளிடத்திலும், அரசியல் கட்சி பிரமுகர்களிடத்திலும் சென்று விடுகிறது.
இங்கு தொடந்து வேளாண்மை நடந்தாலாவது கூலி செய்தாவது உழவர்கள் தங்கள் வாழ்ககை் யை நடத்த
முடியும். ஆனால் அவர்கள் நிலங்களை வாங்கியவுடன் கற்களை நடவு செய்து பணத்தை அறுவடை
செய்கின்றனர் இப் பண முதலைகள்.
இவர்கள் இம்மன்னன் மக்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க மறுகிறார்கள், மேலும் இது போன்று
அயலார் குடியேற்றம் நடைபெறும் அப்பகுதி ஒரு கலப்பின சமூகம் வளர்வதற்கு வழிவகுக்கிறது.
இதனால் மக்கள் மனதில் ஒரு பதற்றமும், குற்ற செயல்கள் அதிகம் நடக்கும் பகுதியாகவும் மாற வழி
செய்கிறது.
இது போன்ற செயல்கள் தான் பிழைப்புத் தேடி அகதிகளாக இடம் பெயராமல், சொந்த நிலத்தில் தன்
மக்களை தன்மானத்துடன் வாழவும், வேளாண் உற்பத்தி பாதிக்காமலும், வெளியாரின் ஆதிக்கம்
குறைந்து குற்றச் செயல்கள் குறையவும் வழிசெய்யும்.
இப்படி பல நிலைகளை கையாண்டால் தான் நம் உழவர்களின் வாழ்வையும் அவர்களால் நம் வாழ்வையும்,
இம்மண்ணையும் காக்க முடியும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக தமிழ்நாடு விளங்கும்.
உழவர்களின் வாழ்வும் ஒளி பெறும்..
மு. வேலாயுதம்