Professional Documents
Culture Documents
HBTL 1103 Exam
HBTL 1103 Exam
HBTL 1103
BAHAGIAN A
SOALAN 1
அ) நினைவாற்றல் என்பது மூளையில் சேகரித்து வைக்கப்படும்
அனுபவம்,விஷயங்கள்,குறிப்புகள் ஆகியவற்றை மீண்டும் நினைவுபடுத்துவது ஆகும்.
அறிவின்
செயல்முறை
தொடர்ந்து விஷயங்களைச்
கல்வியைக் சேகரித்து
கற்றுத்தேறுதல் வைத்தல்
நினைவாற்றல்
என்றால்
தேவைப்படும் அனுபவங்களை
போது நிலை
எடுத்தாளுதல் நிறுத்துதல்
படி 2 வரிசைப்படுத்துதல்
BAHAGIAN A
SOALAN 1
ஆ) கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் முக்கியமானதொரு பிரச்சனையாக விளங்குவது
கற்பிக்கபடுவதை விளங்கிக் கொள்ளச் செய்வதும் கிரகிக்கச் செய்வதுமாகும்.மனப்பாடம்
செய்த தகவல்கள் மறந்து விடுகின்றன.ஆனால் தெளிவான கிரகிப்புடன் கற்றவை நீண்ட
காலம் நினைவில் நிற்கும்.இந்த வகையில் கிரகித்தலுடன் விளங்கிக் கொள்வதும் அதனை
நினைவார்த்தலுடன் மீட்பதும் கற்றல் செயற்பாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது.இதற்காகக்
கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள நான்கு
முக்கியமான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.கவனமான பார்வை , ஆர்வம்
,அக்கறை மற்றும் புதிதாகச் சிந்தித்தல் ஆகும்.
முதல் உத்தியானது, அடிப்படை உத்தியாகும்.ஒன்றிலிருந்து நூறு வரை
எண்னுங்கள்.பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள்.பிறகு 100 லிருந்து
தலைகீழாக 100,98,96 என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ண வேண்டும்.பிறகு
நான்கு நான்காகக் குறைக்க வேண்டும்.இப்படி எண்களைக் குறைத்து எண்ணக் கற்றுக்
கொண்டால்,நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது எனப் பொருள்படும்.
தொடர்ந்து,ஓர் ஆங்கிலப் பத்திரிக்கையை எடுத்து,அதன் ஒரு பத்தியில் இடம்
பெற்றுள்ள ”எஸ்” எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ள வேண்டும் அடுத்து
இரண்டு மூன்று பத்திகளில் உள்ள “ஏ” எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ள்
வேண்டும்.இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தால்,எத்தனை “எஸ்” அல்லது
“ஏ” எண்ணாமல் விடுபட்டிருக்கும் என்று தெரியவரும்.இதை வைத்து நினைவுத் திறனின்
அளவைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத்திறனை வெகுவாக வளர்த்துக்
கொள்ளலாம்.தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பற்றிக் கொஞ்சம் ஆராய்ச்சி
பண்ணலாம்.வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால்,இதை விட நன்றாக
இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கலாம்.சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும்
ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றல் பெருகும்.
உடலின் ஒவ்வோர் உறுப்பும் ஓர் இயந்திரம்.அதிலும் இதயமும், மூளையும்,ஓய்வில்லாத
இயந்திரங்கள், இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும்.மூளைக்கு
ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை
முன்னேற்றம் நின்று போய்விடும்.ஆகையால், எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை
கொடுத்துக்கொண்டே இருந்தால் நினைவாற்றலை மேம்படுத்தலாம்.உடற்பயிற்சி செய்வதன்
மூலம் நினைவாற்றலை கைவரப் பெற முடியும்.உடற்பயிற்சி மூளையைச் சுறுசுறுப்பாக
இயக்குகிறது.எனவே 15 முதல் 20 நிமிடங்களையாவது உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும்.
தொடர்ந்து, மேலூட்டமாய்த் தகவலைக் கேட்டுக் கொள்வது,போகின்ற போக்கில் பார்த்து
வைப்பது என இல்லாமல் அளவுகளை சரியாகக் குறித்து தகவல்களைப் பதிவு செய்து
கொள்வது நினைவாற்றலை வலுபடுத்தும்.கண்டிப்பாக நினைவில் வைக்கவேண்டிய
விஷயங்களை வாய்விட்டுச் சொல்லிப்பார்த்தல் நல்லது.படித்தறியும்போதுகூட
பர்வையிலேயே படிப்பதைக் காட்டிலும் வாய்விட்டு சத்தமாக படித்தலும், முறையாக
வரிசைப்படுத்தி கொள்ளுதலும் சிறந்தது.கேட்பதன் மூலமாக அறிந்து கொள்ளும்போது
தொடர்புடைய நிறம் , சொற்கள், வாசம் , தன்மையோடு பதிவுசெய்து கொள்வதும்
நினைவாற்றலை வளர்கிறது.
அடுத்ததாக, நினைவாற்றலை கைவரப் பெற புதிய தகவல்கள் முன்பே அறிந்தவற்றோடு
தொடர்புடையது எனும்போது அவற்றை நினைவுபடுத்திப் பார்த்து இணைத்துப் பதிவு
செய்து மீண்டும் மீண்டும் கேட்கலாம்.
எழுதிவைக்கும் தகவல்களோடு அதற்குரிய படங்களையும் சின்ன சின்னதாய்ப்
பக்கத்திலேயே வரைந்து வைத்து எழுதிக்கொண்டால் நினைவுபடுத்திப் பார்க்கும் போது
தன் கருத்துகளைத் தன் நினைவுக்கும், பிறருக்குத் தகவலாகவும் பதிவு செய்வது
நினைவாற்றலை கைவரப் பெற சிறந்த முயற்சியாகும்.
BAHAGIAN A
SOALAN 3
BAHAGIAN A
SOALAN 3
ஆ)
பயிற்றுத் துணைப்பொருள்களில் செய்பொருள்கள் என்பது ஆசிரியரின் திறமைக்கேற்ப
தயாரிக்கப்படும் பொருள்களாகும். செய்பொருள்களைப் பயன்படுத்தும்போது ஆசிரியரின்
திறமை வெளிப்பட வேண்டும். இவ்வகைப் பொருள்கள் மாணவர்களின் உதவியோடும்
தயாரிக்கப்படலாம். செய்பொருள்களை ஆசிரியர்கள் மற்ற மூலங்களிலிருந்தும் பெற்றுக்
கொள்ளலாம். செய்பொருள்களைப் பலவிதமாக வகைப்படுத்தலாம். அவை:-
பொம்மைகள்
கோள்கள்
உருவங்கள் செய்ப்பொருள்கள் கிரகங்கள்
விண்வெளி
படங்கள்
BAHAGIAN B
SOALAN 2
குறிப்பேடு எனப்படுவது கற்றல் கற்பித்தலில் ஏற்படுகின்ற சிக்கல்களை
அடையாளம்கண்டு நினைவு கூறும் ஒரு கேடயமாகும்.பயிற்றுப்பணியின்போது கற்றல்
கற்பித்தலில் ஏற்படுகின்ற சிக்கல்களை அடையாளங்கண்டு குறித்து வைப்பதுதான்
குறிப்பேடு எனப்படுகிறது.அது மட்டுமில்லாமல் குறிப்பேட்டின் மூலம் நம்
எண்ணங்களையும்
மன உணர்வுகளையும் மனத்தை உளுக்கிய சம்பவத்தையும் குறித்து வைத்து, பிறகு
அதனைப் பற்றிச் சிந்தனை மீட்சி செய்ய முடியும்.சிந்தனை மீட்சியின் குறிப்புகள் தொடர்
நடவடிக்கைகள் மேற்கொள்ளத் துணைபுரியும்.
ஆசிரியர் குறிபேட்டில் மன உணர்வு,சுய மதிப்பீடு, சூழல், சூழலை
மாற்றயமைக்கும் வழிமுறை,புதுநோக்கு,அடுத்த கட்ட நடவடிக்கை போன்றவற்றை
எழுதலாம்.குறிப்பேடு எழுதுவதால் சிறந்த ஆசிரியரை உருவாக்க முடியும்.முதலாவதாக
ஆசிரியர் தமது போதனையில் எதிர்நோக்கும் குறைநிறைகளைக் கண்டறிய குறிப்பேடு
எழுதுகின்றனர்.ஆசிரியர் ஒரு திறனை நன்கு ஆராய்ந்து தன் வகுப்பு மாணவர்களின்
திறன் அறிந்து ஒரு பாடபோதனையைத் தாயாரிக்கின்றனர்.வகுபிற்கு சென்று போதனை
நடத்திய பிறகு ஆசிரியர் போதனையில் உள்ள குறைநிறைகளை எழுதுவது
கடமையாகும்.நிறைகள் ஆசிரியரை உட்சாகப்படுத்தும்.மனநிறைவைத்
தரும்.மாணவர்களுக்கு தரமான போதனை அவர்களின் தரத்திற்கும் ஏற்ப மெருகேட்டபட்டு
சிறந்த நடவடிக்கையாக அமையும்.அந்நிறைகளை மற்ற மாணவர்களுக்கும் தாராளமாக
பயன்படுத்தலாம்.
குறைகள் இருப்பின் ஆசிரியர் பாடத் தயாரிப்பில் குறையா அல்லது மாணவர்களுக்கு
பொருந்தாத நடவடிக்கைகளா? திறனுக்கு பொருத்தமில்லாத நடவடிக்கைகளா? என
ஆசிரியர் ஆராய்ந்து செயல்பட குறிப்பேடு உதவுகிறது.குறிப்பேட்டில் எழுதப்படும்
குறைகள் யாவும் பல கோணங்களில் ஆசிரியரால் ஆராயப்பட்டு,ஆசிரியர் தன் தவற்றை
உணர முடியும்.எனது அனுபவத்தில் தமிழ் மொழி பாடத்தில் மாணவர்களுக்கு சந்தச்
சொற்கள் போதிக்க போதனையை தயாரித்திருந்தேன்.பாடநூலில் உள்ள தமிழுக்கு
அமுதென்று பேர் எனும் கவிதையைத் தேர்ந்தெடுத்து அதன் வழி போதிக்க
விளைந்தேன்.குறிப்பேடு எழுதும்போதுதான் அச்சொற்கள் அனைத்தும் ஒரே
ஓசையுடையவை என்பதை உணர்ந்தேன்.ஆசிரியராக எனக்கு அப்போதுதான் தவறுகளை
உணர்ந்து,மறுநாள் நடவடிக்களை மாற்றம் செய்து முறையான விளக்கம் அளித்தேன்.
தொடர்ந்து,குறிப்பேடு எழுதுவதால் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை
மாற்றியமைக்கும் திறனையும் வளர்க்க முடிகிறது.ஆசிரியர் போதனையின் போது
மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு அவர்களின்
சிந்தனைத் திறனைத் தூண்டுவதாகவும் அமைதல் வேண்டும்.குறிப்பேடு எழுதும் போது
ஆசிரியர் குறிப்பிட்ட நடவடிக்கையை மேம்படுத்தி மாற்றிக்கொள்ள உதவும்.எனது
அனுபவத்தில் சந்தச்சொற்கள் போதிக்கும் அனுபவத்தில் நடவடிக்கை வரிசைகிரமாக
அமையவில்லை.சந்த சொற்களையொட்டி விளக்கம் அளித்த பிறகு,மாணவர்களுக்கு முதல்
நடவடிக்கையாக பாடலில் விடுபட்ட சந்தச்சொற்களை எழுதப் பணித்தேன்.மாணவர்கள்
மிகவும் சிரமப்பட்டனர். அப்போது என் போதனை நடவடிக்கைகள் வரிசகிரமாக இல்லை
என்பதை உணர்ந்த்தேன்.உடனே,நடவடிக்கைகளை மாற்றி வரிசைப்படுத்தினேன்.பிறகு
சுலபமான நடவடிக்கையிலிருந்து கடினமான நடவடிக்கையை மாணவர்கள்
மேற்கொண்டனர்.சந்தச் சொற்களை முழுமையாக அறிந்த பிறகே மாணவர்கள் பாடலில்
உள்ள சந்தச் சொறகளை அடையாளங்கண்டு அதற்கேற்ப விடையினை எழுதினர்.
அடுத்ததாக,குறிப்பேடு எழுதுவதால் ஆசிரியர்கள் தங்களுடைய சிந்தனையை
மேம்படுத்துவத்ற்குக் கற்ற்ல் கற்பித்தல் தொடர்பான தனது மன அழுத்தங்களையும்
தாக்கங்களையும் தயக்கமின்றி எழுத முடிகிறது. பாட போதனையில் நடவடிக்கைகள்
புதுப்பிக்க உதவுகிறது.எடுத்துக்காட்டாக,ஆசிரியர் ஒரே மாதிரியான போதனையை
மாணவர்களிடத்தில் நடத்த இயலாது.மாணவர்களும் அப்போதனையை விரும்பி கற்றுக்
கொள்ள மாட்டார்கள்.திறனுக்கு ஏற்றவாறு,மாணவர்கள் தன் அன்றாட வாழ்க்கை சூழலில்
பயன்படுத்தக் கூடிய நடவடிக்கையாக இருப்பதை ஆசிரியர் உறுதிப்படுத்த
வேண்டும்.எனது அனுபவத்தில் சந்த சொற்கள் திறனை மாணவர்களுக்கு போதித்த பிறகு,
அவர்களின் ஆளமையை அறிய சுயமாக சந்தச்சொற்களி அடங்கிய பாடலொன்றினை
எழுதிவர பணித்தேன்.மாணவர்கள் அனைரும் சுயமாக சிந்தித்து பாடலை
எழுதினர்.இந்நிலை மாணவர்களின் ஆக்கசிந்தனையை வலுவடய செய்கிறது.
இறுதியாக,ஆசிரியர்கள் தங்கள் அனுபவங்களை பிறரோடு பகிர்ந்துக் கொள்ளவும்
குறிப்பேடு உதவுகிறது.ஆசிரியர்கள பலர் போதனா முறையில் கைத்தேர்ந்தவர்களாக
இருக்கின்றனர்.அவர்களின் அனுபவங்கள்.அவர்களின் சிறப்பான போதனை முறைகள்
மானவர்களுக்கு போதிக்கும் இளம் ஆசிரியர்களுக்கு முன்னுதரனமாக இருத்தல்
மயவேண்டும்.னது அனுப்பவத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் பாடத்திற்கு தகுந்தவாறு
நனிச்சிறந்த ஆசிரியர்கள் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் உள்ளனர்.அவர்களின்
துல்லிய போதனையை மாணவர்கக்கு கற்றுக்கொடுக்கக் வேண்டும்.எனது அனுபவத்தில்
மாணவர்களுக்கு வழங்கப்படும் பனுவலை முதலில் ஆராய வேண்டும் என்பதைத்
தெரிந்துக் கொண்டேன்.மேலும், வாசிப்பு பனுவல்கள் எளிமையான சிறிய வாக்கியங்களால்
அமைந்திருத்தல் அவசியம் என கற்றுக்கொண்டேன்.