Professional Documents
Culture Documents
தொகுதி 1
தொகுதி 1
அடைந்தார்
அடையவில்லை
___________________________________________________________________________
தொகுதி 1 : அறிவியலும் நாமும்
பாடம் 2 : விந்தை உலகம்
மாற்று சக்தி மூலங்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள்
உள்ளன. முதல் காரணம் பூமியில் உள்ள நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற இயற்கை சக்தி மூலங்கள்
குறைந்து வருவது. இரண்டாவது காரணம் இயற்கை சக்தி மூலங்களைப் பயன்படுத்துவதால்
தூய்மைக்கேடு ஏற்படுகிறது.
நாம் பயன்படுத்தும் வகையில் மாற்று சக்தி மூலங்கள் நிறையவே உள்ளன. காற்று சக்தி, சூரிய
சக்தி, புவிவெப சக்தி, நீர் சக்தி போன்றவை அவற்றுள் சில. காற்று சக்தி என்பது பெரிய
காற்றாலைகளின் உதவியோடு காற்றை ஒருமுகப்படுத்தி பெரிய விசையாழிகளைச் சுழலச் செய்து
மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலைகள் உள்ள இருக்கும் இடங்களில் விவசாயம்
செய்யலாம். காற்றாலைகள் நன்முறையில் இயங்க காற்று பலமாக வீசிக்கொண்டே இருக்க வேண்டும்.
காற்றின் வேகம் குறையும்போது மின்சார உற்பத்தியும் குறையும்.