் டுத்து எழுதுக:- 3x1=3 1. காளைச்சண்டையை தேசிய விளையாட்டாகக் கொண்டிருக்கும் நாடு ______________. அ) பெலகாம் ஆ) பிரான்ஸ் இ) ரஷ்யா ஈ) ஸ்பெயின் 2. மணிமேகலை ________________ காதைகளை உடைய நூல் அ) பதினைந்து ஆ) இருபது இ) நாற்பது ஈ) முப்பது 3. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்தத ் வர் ____________ அ) கால்டுவெல் ஆ) பெஸ்கி இ) எலியட் ஈ) ஜி.யு.போப் ஆ) கோடிட்ட இடத்தை நிரப்புக:- 5x1=5
1. பகுபத உறுப்புகள் ____________ வகைப்படும்.
2. குற்றியலுகரம் _______________ வகைப்படும். 3. குடும்ப விளக்கு என்னும் நூலை இயற்றியவர் ____________. 4. கண்ணன் _____________ தொங்கவிடப்பட்ட பந்தலில் நுழைந்தார். 5. ஆயிரங்கால் மண்டபம் அமைத்தோர் ______________. இ) பொருத்துக:- 4x1=4
1. மணப்பாறை - கருவாட்டுச் சந்தை
2. ஒட்டன் சத்திரம் - மீன் சந்தை 3. நாகப்பட்டினம் - மாட்டுச் சந்தை 4. கடலூர் - காய்கறிச் சந்தை ஈ) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி:- 5 x 2 = 10
1. ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறு பெயர்களைக் குறிப்பிடுக?
2. இணைய இணைப்பு இல்லா மின்னணு இயந்திரங்கள் எவை? 3. துன்பம் வராதிருக்க வழி யாது? 4. உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்? ஏன்? 5. சிற்பிகளைக் கற்க கவிஞர்கள் என்று சிறப்பிக்கக் காரணம் தருக? 6. முல்லை நிலத்தில் மான்கள் ஏன் அஞ்சி ஓடின? 7. ஆகுபெயர் எத்தனை வகைப்படும் அவை யாவை? உ) எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி:- 4x2=8
1. உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரா விழா நிகழ்வுடன் ஒப்பிடுக?
2. கீழடி என்னும் இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த பொருள்கள் தருக. 3. மருத்துவர் முத்து லட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக. 4. சிறுபஞ்சமூலம் ஆசிரியர் குறிப்புத் தருக. 5. பல்லவர் காலக் குடைவரைக் கோவில்களின் சிறப்பைக் கூறுக. ஊ) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி:- 2 x 8 = 16
1. மதுரை மாநகரச் சிறப்புகள் குறித்து மாங்குடி மருதனார் கூறுவனவற்றை எழுதுக
(அல்லது) ஏமாங்கத நாடு வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக. 2. சிறுபஞ்சமூலம் பூவாது காய்க்கும் - பாடலைத் தருக. (அல்லது) முத்தொள்ளாயிரம் அல்லல் பழனத்தும் - பாடலைத் தருக. 3. தரும் என முடியும் திருக்குறளை எழுதுக. (அல்லது) கற்க கசடற எனது தொடங்கும் குறளை அலகிட்டுத் தருக.