Professional Documents
Culture Documents
396301743 வழிகாட டிக கட டுரை
396301743 வழிகாட டிக கட டுரை
"மாலாவை இன்னும் காணவில்லை. இன்னிக்கு அவளால் எல்லாரும் திட்டு வாங்க போறோம்", என்று
யாழினியின் ஆழ்மனது கூறியது. பயத்தால் அவள் உடல் நடுங்கியது. மாலா பள்ளிக்குப் போகவில்லை. வீட்டின்
முன் கவலையுடன் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் மனதை எதோ ஒன்று வாட்டிக் கொண்டிருந்தது. "அந்தப்
பொருள் இல்லாமல் நான் எப்படிப் 'பள்ளிக்குப் போறது!", என்று தன் மனதிற்குள் புலம்பினாள்.
"என்னை மன்னிச்சிருங்க தீச்சர். 'பரிட்சை தாளு எல்லாம் எங்க வச்சேனு தெரியல! எல்லாம் என்
தப்புதான்”, என்று 'கண்ணீர் விடத் தொடங்கினாள் மாலா. ' " பரிட்சை தாளு காணாம போச்சா? இது எவ்வளவு
பெரிய பிரச்சனை தெரியுமா? இன்னிக்கு உன்ன என்ன பன்னுறேனு பாரு!", என்று பிரம்பை எடுத்தார் குமாரி
கலைமகள்.
வழிகாட்டிக் கட்டுரை 2
விடிந்தால் பானு அத்தையின் பிறந்தநாள். அப்பாவின் செல்லமான தங்கைதான் பானு அத்தை
மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கோல குபு பாருவிற்குச் சென்றுவிட்டார். அணிச்சலையும்
அம்மா செய்த பலகாரங்களையும் பத்திரமாக அப்பாவின் மகிழுந்தில் ஏற்றினோம். இரவு 9.00 மணிக்குத்
தெமெர்லோவிலிருந்து கோல குபு பாருக்கு அப்பாவின் வண்டி இறக்கைக் கட்டி பறந்தது.
"அப்பா! அங்க பாருங்க! அத்தை மாமா!’’, என்று அமுதா இன்பத்தில் துள்ளினாள். இன்ப
அதிர்ச்சியில் நாங்கள் அனைவரும் சில மணித்துளிகள் மூச்சுவிடவும் மறந்துவிட்டோம். மாமா அப்பாவை
ஏற்றிக் கொண்டு கோத்தோங் ஜெயாவில் உள்ள பெட்ரோனுக்குச் சென்றார். ஒரு நெகிழி கலனில்
பெட்ரோல் வாங்கி வந்தார்கள் அவர்கள் இருவரும். அப்பாவின் மகிழுந்தில் பெட்ரோல் ஊற்றினார்கள்.
"அம்மா! இனிமேல் நாங்க மீன் 'பிடிக்கவே போக மாட்டோம். உங்க பேச்ச மீற மாட்டோம்", என்று
கண்கலங்கினர். '"எவ்வளவு சொல்லியும் திருந்தாத 'பசங்க இன்னிக்குத் திருந்திட்டானுங்க.
கடவுளுக்குத்தான் நன்றி சொல்லனும்”, என்று முணுமுணுத்துக் கொண்டே தன் அறைக்குள் சென்றார்
திருமதி மாலா. சற்று நேரத்தில் சராவின் அப்பாவும் வீட்டை வந்தடைந்தார். தான் கொண்டு வந்த ஒரு
நெகிழிப் பாம்பைப் பத்திரமாக அலமாரிக்குள் எடுத்து வைத்தார்.
வழிகாட்டிக் கட்டுரை 4
"அங்கிள் எனக்கு இந்த ஐஸ்கிரீம் வேணும்", என்று ஆவலுடன் கேட்டாள் மீயாழ். மெலிந்த உடல்,
தலையில் தொப்பி. பழைய மிதிவண்டி. ஆனால், கண்களில் ஏதோ சூழ்ச்சி தெரிந்தது. "ம்ம்ம்.. விரைவா
எடுங்க நேரமாச்சு", என்று கட்டளையிட்டார் ஐஸ்கிரீம் வியாபாரி திரு.கோ.
"எப்பவும் ஏன் இந்த இடத்திற்கு வந்தா மட்டும் நேரமாச்சு நேரமாச்சுனு சொல்றாரு?", என்று
யோசிக்கத் தொடங்கினான் கனியன் பூங்குன்றன். கடந்த வாரம் பக்கத்து ஊரில் போதைப் பொருளால்
தயாரிக்கப்பட்ட பனிக்கூழ்களை வழங்கி குழந்தைகளைக் கடத்திய செய்தி அவன் நினைவுக்கு வந்தது.
அரக்கப் பரக்க அங்கிருந்து கிளம்பினார் திரு.கோ. "அங்க வீடுகள் எதுவும் இல்ல. அப்புறம்
எதற்கு அந்த வழியா வேகமா போறாரு", என்று முணுமுணுத்தாள் மீயாழ். "ஆனந்த். இன்னிக்கும்
அங்கிள் அந்தக் காட்டு வழியாகத்தான் போறாரு பாரு", என்று ஆச்சரியத்துடன் கூறினாள்
அழகோவியா.
ஒரு குடிசை வீட்டைச் சென்றடைந்தார் திரு. கோ. வாண்டுகளும் அவரைப் பின் தொடர்ந்து
சென்றனர். வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்தத
் னர். அவர்களை அறியாமலேயே
அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
அந்த ஓட்டை வீட்டில் பசியால் வாடியிருந்த தன் ஊனமுற்ற தாயுக்குத் திரு. கோ சோறு ஊட்டிக்
கொண்டிருந்தார். ஏழ்மையிலும் தன் அம்மாவைப் பராமரிக்கும் திரு. கோவை எண்ணி சிறுவர்கள்
பெருமிதம் கொண்டனர்.
வழிகாட்டிக் கட்டுரை 5
"நாளையிலிருந்து நான் வேலைக்குப் போக போறேன் தேவி. ஒரு வெட்டு கிடச்சிருக்கு. வீடடு
் ல
சும்மா இருக்குறதுக்கு மரமாவது வெட்டுவோம். கொஞ்சம் காசாவது கிடைக்கும். ஏற்கனவே செஞ்ச
வேலைதானே. பிள்ளைங்க படிச்சு முடிச்ச பிறகுதான் எனக்கு ஓய்வு", என்று சொல்லியவாறு தன்
அறையை நோக்கி நடந்தார். தன் கணவரின் தியாகத்தை எண்ணி கண் கலங்கினார் திருமதி தேவி.
குழந்தைகள் எதையும் கண்டு கொள்ளாமல் படித்துக் கொண்டிருந்தனர்.
வழிகாட்டிக் கட்டுரை 6
ஆனால், அப்பா அப்படிச் செய்யவில்லை. அன்று என்னை வீட்டிலேயே விட்டுச் சென்றார். அன்று
மாறினேன். என் தவற்றை உணர்நதே
் ன். காலத்தை மதித்தேன். அதனால் இன்று அனைவரும் மதிக்கும்
காவல் அதிகாரியாக உங்கள் முன் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். மாணவர்களே! நீங்களும்
மாறுங்கள். வாழ்வில் முன்னேறுங்கள். காலம் பொன் போன்றது.
வழிகாட்டிக் கட்டுரை 7
துரியோதனன் கர்ணனைப் போல அவர்கள் நல்ல நண்பர்கள். அவர்கள் இருவரும் படிப்பில்
கெட்டி. விளையாட்டில் சொல்லவே வேண்டாம். யாழவன் மிகவும் பொறுமையானவன். மறவனோ அதற்கு
எதிர்மறையானவன்.
"நன்றி நண்பர்களே! இன்று மாலை ஆறு மணிக்கு என் வீட்டில் எனக்கு பிறந்தநாள்
செய்கிறார்கள். எல்லாரும் வந்துருங்க", என்று மிக மகிழ்ச்சியுடன் கூறினான் யாழவன். "யாழவா! இந்தா
என்னோட சின்ன பரிசு", என்று ஓர் அழகிய பரிசை நீட்டினான் மறவன்.
"மிக்க நன்றி மறவா! எனக்காக ஒன்று செய்வீயா?", என்று கேட்டான். "என்ன செய்யனும்?",
என்று ஆர்வத்துடன் கேட்டான் மறவன். "இன்று பள்ளியின் அருகிலுள்ள ஆற்றில் குளிக்க போகலாமா?
மிகவும் ஆசையாக இருக்கின்றது", என்று ஆவலுடன் கேட்டான் யாழவன்.
"விளையாடாத யாழவா! அந்த ஆறு மிகவும் ஆபத்தானது. அது ஆள் விழுங்கி ஆறுனு என்
அம்மா சொல்லிருக்காங்க", என்று மறவன் எச்சரித்தான். “யாரு என்ன சொன்னாலும் இன்று
என்னுடைய ஆசையை நிறைவேற்றித் தான் ஆக வேண்டும்", என்று யாழவன் மனதில் முணுமுணுத்துக்
கொண்டான்.
மாலை வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான் மறவன். "ஐயோ! அம்மா .. உதவி!
உதவி!", என்று யாரோ அலறும் சத்தம் மறவன் காதில் விழுந்தது. யாழவன் ஆற்றில் தத்தளித்துக்
கொண்டிருந்தான். மறவன் துடிதுடித்துப் போனான். "எத்தனையோ தடவை சொல்லியாச்சு! இப்ப கத்தி
என்ன பயன்? என்று முணுமுணுத்துக் கொண்டே ஆற்றில் குதித்தான் மறவன்.
க்ரீங்க்ரீங்! பள்ளி மணி ஒலித்தது. கூட்டை விட்டுப் பறக்கும் பறவைகள் போல மாணவர்கள்
பள்ளியை விட்டுப் பறக்கத் தொடங்கினர். சில மாணவர்கள் வரிசையாகச் சென்றனர். சிலர்
குடுகுடுவென ஓடினர். இன்னும் சில மாணவர்கள் பள்ளிக்கு முன் உள்ள பேருந்து நிற்குமிடத்தில்
காத்துக் கொண்டிருந்தனர்.
மூங்கில் தோட்டமும் மூலிகை வாசமும் நிறைந்த ஓர் அடர்ந்த காடு அது. கதிரவன் உறங்கச்
செல்லும் நேரம் அது. "நாம் எப்படியாவது இந்தக் காரியத்தில் வெற்றிப் பெற வேண்டும்", என்று
உறுதியாகக் கூறினார் எங்கள் தளபதி.
நானும் பிரவினும் அவர் கூறுவதைக் கண்ணுங் கருத்துமாய்ச் செவி சாய்த்தோம். போலிஸ் வலை
வீசி தேடிக் கொண்டிருக்கும் திருட்டுக் கும்பல் தான் நாங்கள். பல கொலை, கொள்ளைகளைப் புரிந்து
போலிஸ் கண்களில் மண்ணைத் தூவிய கும்பல்தான் இது. இந்தக் கும்பலில் புதியதாக
இணைந்தவன்தான் நான்.
"அதோ! அந்த வீடுதான்", என்று மகிழ்ச்சியுடன் கூறினார் தளபதி. "அது மட்டும் எனக்கு
கிடைச்சதுனா! நான் இவ்வளவு நாளாகக் கஷ்டப்பட்டது வீண் போகாது", என்று மனதிற்குள் கூறிக்
கொண்டேன்.
படகில் இருந்து இறங்கினோம். தளபதியும் பிரவினும் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே
சென்றனர். நான் வெளியே காவலுக்கு இருந்தேன். வெகு நேரம் ஆகியும் உள்ளே சென்றவர்கள் வெளியே
வரவில்லை. வீட்டினுள் ஏதோ சத்தம் கேட்டது. நான் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன்.
"ஏதோ பேச்சுக் குரல் கேட்குதே! அடப்பாவிகளா! குத்தி கொலையே செஞ்சிடானுங்களே!",
என்று மனம் கலங்கினேன். திடீரென்று அவ்வீட்டைக் காவல் அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். நான்
சற்றும் பயப்படவில்லை . என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடினேன்.