Professional Documents
Culture Documents
இலக்கியம் 1
இலக்கியம் 1
பிரிவு : எஸ் 5
Unit : S5
Pengakuan Pelajar
Saya mengaku tugasan ini adalah hasil kerja saya sendiri kecuali nukilan dan ringkasan yang setiap satunya saya
jelaskan sumbernya.
1. முகப்பு
2. ஒத்துழைப்புப் பாரம்
4. உள்ளடக்கம்
5. நன்றியுரை
6. முன்னுரை
8. முடிவுரை
9. மேற்கோள் பட்டியல்
நான் எஸ் 5 பிரிவைச் சேர்ந்த மாணவியான தனேஷ்வரி த/பெ சதாசிவன் இந்த செய்பணியை மிகவும்
வெற்றிகரமாக செய்து முடித்ததற்கு எனக்கு பலர் உறுதுணையாக இருந்தனர். தமிழ் செவ்விலக்கியம் BTMB 3033
பாடத்தின் முதல் செய்பணி என்றதால், எனக்கு இப்பணியைச் செய்து முடிப்பதற்குச் சிறிது கடினமாக இருந்தது.
இருப்பினும், பலரின் உதவியோடு என்னால் இதனைச் சுலபமாக செய்ய முடிந்தது.
முதலில், இப்பணியை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு எனக்கு நல்ல சிந்திக்கக் கூடிய திறன் மற்றும்
வளமான ஆரோக்கியத்தை வரமளித்த இறைவனுக்கு என் நன்றி மலர்களைச் சமர்ப்பிக்கின்றேன்.
மேலும், நான் என் நன்றியினை என் பெற்றோர்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன். என் பெற்றோர்கள் நான்
இச்செய்பணியைச் செய்து முடிக்கும் வரை எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தனர். இச்செய்பணியைச் செய்து
முடிப்பதற்குத் தேவையான நூல்களை வாங்கி கொடுத்து எனக்கு நிதி வழியாக பேருதவிப் புரிந்த எனது
பெற்றோர்களுக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதையெடுத்து, நான் என் நன்றி மலர்களை என் நண்பர்களுக்குத் தெரிவிக்க விரும்பிகிறேன். என்
வகுப்பு தோழி தோழர்கள் எனக்கு பலவிதங்களில் உதவிகளைச் செய்துள்ளனர். இப்பணியைச் செய்வதற்குத்
தேவையான சில முக்கிய குறிப்புகளை என்னுடன் பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து, எனக்கு எந்நேரமும்
விளக்கங்களைக் கொடுக்க தயாராக இருந்தனர். ஆகவே, இறுதியாக எனக்கு இச்செய்பணியைச் செய்து
முடிப்பதற்கு உதவி புரிந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினைச் சமர்ப்பிப்பதில்
மகிழ்ச்சியடைகிறேன். நன்றி, வணக்கம்.
முன்னுரை
என்று சுப்ரமணிய பாரதியின் கவிதை வரிக்கேற்ப தமிழ்த் தாயின் ஆசியில் பிறந்த தமிழ்நாட்டின் பெருமைக்கு
உகந்தவன் கம்பன். கம்பன் வீட்டுக் கட்டுத் தரியும் கவிபாடும் என்பர். ஆக, இக்கம்பனின் கைவண்ணத்தில்
மலர்ந்தக் கம்பராமாயணமும் செவ்விலக்கிய தகுதியைப் பெற்று சிறந்த விளங்குகின்றது. இதனுடன், திருக்குறள்,
சிலப்பதிகாரம், சங்க பாடலகள் போன்ற முக்கியமான இலக்கிய படைப்புகளும் செவ்விலக்கியத்துள் அடங்கும்.
இவ்விலக்கிய படைப்புகளில் காணும் எழில்நலம் தமிழர் வாழ்வியலைக் காட்டும் உயர்நெறி அம்சமாக மிளிர்ந்து
தமிழ் இலக்கியத்திற்கு மெருகூட்டுகிறது. இருப்பின், கைகேயியின் சூழ்வினைப் படலம் உணர்த்தும் வாழ்வியல்
முரண் மாந்தர்களுக்கு நல்லதோர் படிப்பினையாக அமைவது சிறப்பு.
இதனடிப்படையில், உணர்ச்சி என்ற கூறானது இலக்கியத்தின் முதன்மைக் கூறாகும். அஃது, நம் கண்
முன்னேயும் மனக்கண் முன்னேயும் அழகுடைய பொருள்களைப் பரு வடிவில் தோன்றச் செய்கின்றன. இதனை,
கம்பராமாயண காப்பியத்தில் காண்கையில் காதல் உணர்வானது இராமனுக்கும் சிதைக்கும் இடையில் மிக
அழகாக மெய்ப்பிக்கப்படுகின்றது. காப்பியத்தில், “அண்ணனும் நோக்கினால், அவளும் நோக்கினால்” என்றார்
போல் இருவரும் பார்த்து முதல் கணமே அம்மெய்யான காதல் உணர்வை கண்கள் வழி பகிர்ந்தனர்.
என்ற வள்ளுவனின் குறளுக்கேற்ப சீதையின் சுயம்வரம் நிகழ்வில் இருவருமே ஒருவரின் ஒருவர் அழகில்
இலையித்த, நோக்குகையில் அப்பார்வையானது காமத்தின் பாதியன்று; மாறாக அதைவிட தெய்வீகமானது;
புனிதமானதாகவும் பரைசாற்றப்படுகிறது. இதுவே, உணர்ச்சி என்ற கூறானது. கம்பராமாயணத்தில் தெள்ளத்
தெளிவாக காண்பித்ததற்குச் சான்று.
என்ற வாலியின் கவிதை வரிக்கேற்ப நாம் காண்பனவற்றையும், காணாததையும் நம் சிந்தைக்குக் கொண்டு சென்று
அதனை மேம்படுத்துவது கற்பனையே. ஒன்றின் அழகை நாம் நுண்ணறிவால் நுகர்ந்து நம்முடைய மகிழ்ச்சி
நிறைந்த அனுபவமாக செய்துக்கொள்ள வேண்டும். மேலும், உணர்ச்சியைப் பெருக்கெடுக்கச் செய்வதும்
கற்பனையே. கம்பராமாயணம் மூலம் பார்த்தோமேயானால், கூனியின் சூழ்ச்சியான எண்ணங்களால் இராமனை
காட்டுக்கு அனுப்புவதிலும் இதனால் பரதன் நாட்டை ஆள்வான் என்பதனையும் கைகேயியிடம் மிகவும்
நாசுக்காக வெளிப்படுத்துகின்றாள். இராமனை பழித்தீற்க வேண்டுமென்ற வஞ்சக எண்ணத்தில், பதினான்கு
ஆண்டு வனவாசத்தில், அவனின் இளமையானது குலைந்து, தோற்றமும் மாறுவதால் மக்களும் அவனை
மறந்தவிடுவர் என்பதையும், கற்பனை காட்சி வழி கூனி தன் சூழ்ச்சி வலையில் கைகேயியைச் சிக்க வைக்கிறாள்.
கூனியின் இச்செயலே இக்காப்பியத்தில் கற்பனை மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அறிவுக்கூறு எனும் செவ்விலக்கியக் கூறானது, வாழ்வியல் உண்மை, சீரிய கருத்து, மற்றும் உயர்ந்த
நீதிநெறி போன்றவற்றைச் சுட்டிகாட்டுவதாகும். கம்பராமாயண்த்திலும் நன்கு திளைப்பதற்கும் தரத்தை
மதிப்பிடுவத்ற்கும் சில விடயங்களை அறிவுக்கூறுச் சான்றாக நாம் கண்டறியலாம். ஓர் உதாரணமாக, செய்தி
அறிந்த பின் தூய உள்ளம் படைத்தப் பரதன் தன் தாய் கைகேயியின் சதிதிட்டத்தை அறிந்து, மீண்டும் தன்
அண்ணன் இராமன் முறைபடி அரசால வேண்டுமென்பதற்காக முயற்சித்தான். ஆனால், கடமை தவறாத இராமன்
பரதனின் கோரிக்கையை ஏற்காத பட்சத்தில், இராமனின் பாதுகைகளை அயோதியின் அரியாசனத்தில்
அமர்த்தினான் பரதன். பின்பு பதினான்கு ஆண்டுகளுக்கு அவ்வாறே தன் அண்ணனையே அரசனாகச்
சிந்தையில் கொண்டு ஆட்சி நடத்தினான்.
சுயநலம்
ஆகையால், இதன்வழி நாம் பெற வேண்டிய படிப்பினைகள் பலவுண்டு. மனிதர்களாகிய நாம் தன்னலமற்ற
முறையான வாழ்க்கை வாழ வேண்டுமெனில், பொதுநலத்துடன் நடந்துகொள்வது சால்பு.
என வள்ளுவனின் வாய்ச்சொல்லுக்கேற்ப ஒரு சாரார் பக்கமில்லாமல் பிறர் நலனையும் கருதி வாழவ்து நன்மை
பயக்கும். பிறகு, எண்திசயிலும் கருத்து எழுந்தாலும், ஆழமாக சிந்தித்து, அவற்றின் விளைவுகளையும்
பகுத்தாய்ந்தப் பின்னரே செயல்பட வேண்டும். ஏன்னில், அது எதுவாயினும் நம்மையும் பிறரையும் பாதிக்காமல்
மிகச் சரியான் முடிவிற்கு வித்திடும்.
இந்த முரணான கருத்தினை இன்றைய காலத்தோடு ஒப்பிட்டு மதிப்பீடு செய்கையில், சுமந்து, பெற்றெடுத்து
வளர்த்த ஈன்றோரை, தான் வாழ்க்கையில் சிறந்ததொரு நிலைக்கு மேம்பட்டப் பின் மறக்கின்றனர். அவர்களின்
நிழலில்தான் உயர்ந்ததையும் நினைக்கத் தவறி பெற்றொரைப் புரக்கணித்து, தன் மனைவி மக்கள் என சிந்தித்து
தனக்கென சுயநலமாக ஒரு பாதையை வகுத்துகொண்டு செல்கின்றான்; தன் தாய்தந்தையரை முற்றிலும்
விட்டுவிடுகின்றான். தொடர்ந்து, இன்பத்திலும் துன்பத்திலும் பங்குண்டு என்பதனை வாய்மொழியாக மட்டுமே
கூறிவிட்டு, வாழ்க்கை என்று வருகையில் அவரவர் தம் பாதையைப் பார்த்து நடைப்போடுகின்றனர். ஒருவனைக்
கொண்டு ஒருவன் முன்னேறினாலும், அதற்கான அங்கிகாரத்தைப் பெற மட்டும் சுயநலம் எனும் பேய் தலை
விரித்து ஆடுகையில் அக்கணமே நன்றியை மறக்கின்றனர்; தோல்கொடுத்த நண்பனையும் எட்டி உதைக்கின்றனர்.
தன்னைப் பற்றி மட்டுமெ சிந்தித்து கொண்டு, யாரைப் பற்றியும் எதை பற்றியும் பாராமல் தங்களின் சொந்த
வாழ்விற்கு மட்டுமே முக்கியத்துவமளிக்கின்றார்கள். அன்மையில் கட்டட குடியிருப்பில் மேல் மாடியிலிருந்து
நாற்காலி எரியப்பட்டதனால், அச்சிறுவன் மீது அது விழுந்து அவன் இறந்தான். இஃது பிறரை எவ்வகையில்
பாதிக்கும் என்பதனை சிந்திக்காமல் சுயநலமாகச் செயல்பட்டதன் விளைவு.
பழிவாங்குதல்
ஒருவர் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ, இழைக்கும் தவற்றை மன்னிப்போம் மறப்போம், என புராணங்கள்
வழி நம் சான்றோர்கள் கூறியது போல் இல்லாமல், அதை மனதில் வைத்து கர்வம் கொண்டு வஞ்சம் தீர்ப்பதே
பழிவாங்குதல் எனப்படும். வஞ்சத்தைத் தீர்ப்பதன் வழியே, அத்ம திருப்தியை ஏற்படுத்திக்கொள்வதுதன்
பழிவாங்குதலின் முக்கிய கூறாகக் கருதப்படுகிறது. முரணான ஒன்றாக விளங்கும் இச்செயலை,
கம்பராமாயணத்திலும் நாம் கண்டறியலாம். சிறுவயதில் இராமன் கூனிக்கு அறியாமல் செய்த தவற்றை, வஞ்சக
எண்ணம் கொண்ட கூனி வஞ்சத்தைத் தீர்க்க எண்ணினாள். சூழ்ச்சி செய்து அதனுள் கைகேயியையும் சிக்க
வைத்து நல்லதொரு குடும்பச் சூழலை சீர்குலைத்து வேடிக்கைக் கண்டாள். அவள் பழிவாங்க
வேண்டுமென்பதற்காகக் கைகேயியைப் பகடகாயாகப் பயன்படுத்தியதோடு, அவள் திட்டமிட்டப்படி இராமனையும்
வனவாசத்திற்கு அனுப்பினாள்; இராமன் வாழ்வில் துன்பப்பட வேண்டும், துயரப்பட வேண்டும் என்ற அவள்
எண்ணமுன் ஈடேறியது. வயது வரம்பையும் பொருட்படுத்தாமல், கீழ்த்தனமாக அதுவும் இராமனை பழிவாங்க
வேண்டும் என எண்ணிய கூனியின் முருகுணர்ச்சியானது அங்கு உடைந்து விட்டது. வாழ்வியல் உண்மைகளை
உணராத கூனி, முற்றிலும் நடுநிலையாக நடந்துகொள்ளாமல் சிறந்த ஒருவனுக்குத் தீங்கு இழைத்தாள்.
அவ்விடத்தில் கொண்டிருக்க வேண்டிய அழகுணர்ச்சியை இழந்தாள். கம்பராமாயணத்தில், மற்றொரு நிகழ்வும்
இம்முரணான கருத்திற்கு இன்னும் வலு சேர்ச்சின்றது. தன் தங்கைச் சூர்ப்பனகைக்கு இராமனால் அவளம்
நேர்ந்துவிட்டது, என எண்ணிய இராவணனும் பழிவாங்கத்துடித்தன்.
என்ற குறளுக்கேற்ப, இராமனின் மனைவி என்பதை அறிந்தும், பழிவாங்கும் நோக்கில் சீதையை அடைய
எண்ணினான் அரக்கனின் பேரரசன் இராவணன். இராமனை பழிவாங்க வேண்டுமென்பதற்காகவே சீதையைத்
தன் வசப்படுத்தி தன் தாரமாக்க நினைத்தான்.
இதன்வழி நமக்குப் படிபினையாகப் பார்த்தோமேயானால், அறிஞர்களின் வார்த்தை என்ற நூல் மூலம், சொல்லும்
செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே, உலகில் மிகவுன்ம் இன்பமாக வாழும் மனிதன் என ஜவஹர்லால்
நேரு சொன்னது போல், நாம் வாக்கும் செயலும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே நம்முடைய வாழ்க்கை
சிறப்பானதாக அமையும். நாமும் பிறருக்கு முன்னோடியாகவுன் திகழ முடியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
மேலும், ஒருவருக்கு வாக்கையோ ஓர் உறுதியையோ அளிக்கும் முன் அதனால விளையக்கூடிய நன்மை
தீமைகளை ஆழமாக ஆராய்வது சால்பு. இதனால், நாளடைவில் பல சிக்கலிலிருந்து விடுப்படுவடுதோடு,
பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதையும் நம்மால் உறுதி செய்ய இயலும்.
ஆக, இவ்வாறு நடந்துகொள்வதால் விளை தீமைகளைப் பற்றி சிந்திக்கும் தன்மையானது இல்லை. தான்
நினைத்ததை மட்டும் சாதிதால் போதுமென நினைத்து கைகேயி பொய் முகம் காட்டியதற்கு, ஏற்பட்ட விளைவே
இராமனின் வனவாசமும் மன்னர் தயரதனின் உயிரிழப்பும். அவள் பிடிவாதத்தால் செய்த செயலே நலல்
மகனையும் இழந்து, நாட்டிற்கு நல்ல அரசனையும் இழந்து நின்றாள். மேலும், தன்னை முழுமனதோடு தாய் என்று
நினைத்த இராமனின் அருமையை சூழ்ச்சி என்று வரும்பொழுது மகன்களினிடையில் பேதம் பார்த்து இறுதி
நொடியிலும் உணரத் தவறினாள். இராமனுக்கும் சீதைக்கும் தகப்பன் என்றும் மாமனார் என்றும் இருந்த உரிமை
உறவைப் பறித்தாள். அவள் சதியில் இலட்சுமனனும் சதியென்று தெரியாமல், பாசமும், அக்கறையும் கண்களை
மறைத்தால், தானே வந்து வீழ்ந்தான்.
இவையெல்லாம் கொண்டு நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிச்சயம் உண்டு. தான் எண்ணியதை
அடைந்தால் மட்டும் போதுமே, நிறைவேறினால் போதுமே என்கிற மாசடைந்த சிந்தனையைக் கழற்றி எரிய
வேண்டும். இன்னும் சொன்னால், அத்தீய எண்ணத்தை முறியடிப்பதற்கு பொய் முகம் காட்ட வேடமிடக்கூடாது.
பாசாங்கு செய்வதே நினைத்ததை நடத்திமுடிக்க ஒரு ஆயுதம் என்பதை மனதில் பதையவத்தலாகாது. ஏனெனில்,
அந்நாடகம் முடிந்ததும் பலவாறு சிக்கல்கள் நேர்ந்தால், நாமே அதற்கு முமுதற்காரணம்; வேடம் கலைந்ததும்
மீண்டு பழைய நிலைக்கு வீழ்ந்த ஒன்றை இட்டுச் செல்வது மிகக் கடினமான காரியமாகும்.
இச்சூழலை நாம் இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தோமானால், இயல்பாகவே அதிகம் பொய் முகம்
காட்டி, நாடகம் போடும் மானிடருக்கு இங்கு பஞ்சமில்லை.
என்ற பாடல்வரிக்கேற்ப, எதிலும் எப்பொழுதும் பாசாங்குச் செய்து செயல்படுபவரே இன்று அதிகம். நல்லதொரு
சான்றாக, கடந்த மாதம் செல்லியல் எனும் வலைப்பகுதியில், வெளிவந்த செய்தியானது, துணைப்பிரதமர் என்ற
பதவிக்கே இலக்கணமாக திகழ்ந்த ஆஸ்திரேலிய துணைப்பிரதமர், தான் கொண்டிருந்த கள்ள உறவு
அம்பலப்பட்ட்தால் பதவி விலகினார். எவ்வள்வுத்தான் நல்லவர் போல் பணியில் அமர்ந்தாலும் யாரும்
அறிந்திடாத அவரின் மறுப்பக்கமானது தெரிய வரும்பொழுது, இதுநாள்வரை இருந்த அவரின் நெறிகள் யாவும்
சுக்குநூறாய் உடைந்துவிடும். இதுபோன்று, இன்று அனைவரும் இப்படி பல முகத்திரைகளைக்
கொண்டிருக்கின்றனர். தான் பொய் முகத்துடன் செயல்படுவதாலும், சமூதாயத்தில் பழகுவதாலும் அதனின்
பாதிப்பை அறியான். இப்படி ஒவ்வொருவராக நடிக்கத் துவங்கி, நினைத்ததைச் சாதிக்கையில், கிடைக்கப் பெறும்
விடயாமானது, எந்தவொரு பயனில்லாமலு, உண்மையற்றதாகவும் போய்விடுகின்றது. இவ்வழியே, வாழ்வில்
உயர்வதற்கான சிறந்தப் பாதையென தீர்மானிக்கின்றனர். இதன் உண்மையை அறிந்தவர்களும்கூட , இப்படி
வேடமிடுபவர்களால் தங்களை யாருக்கும் யாதொரு பயனுமில்லாத பாதைக்கு இட்டுச் செல்கின்றனர்.
முடிவுரை
தென்றல் பதிப்பகம்.
செல்லியல் ( 5 மார்ச் 2018 ) Retrieved from Bilingual Digital News Media.
http://selliyal.com
பின் இணைப்பு