Professional Documents
Culture Documents
AGM திருக்கணித பஞ்சாங்கம்
AGM திருக்கணித பஞ்சாங்கம்
இந்த பஞ்சாங்க முறைப்படி 11.10 .2018 இரவு 07: 28 மணிக்குதான் குரு தனது பகைவீடான துலாம் ராசியிலிருந்து அதி நட்பு
வீடான விருட்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
திருக்கணித பஞ்சாங்க முறையே காலம் காலமாக நம் ஞானிகளால் மிகவும் நுட்பமாக ஜோதிடபலன்களை கணிக்க
பயன்படுத்நப்பட்டு வருகிறது.
உதாரணமாக,
மகாகவி காளிதாசர் தனது உன்னதமான ஜோதிடநூலான உத்தரகாலாமிர்தம் என்ற ஜோதிடகடலிலேயே "திருக் கணித
முறைப்படி" கிரக பாதசாரங்களை கணிக்கவேண்டும் என்கிறார்.
இந்த வாக்கிய பஞ்சாங்க முறையை பயன்படுத்தி ஜோதிடம் கணிப்பதாலேயே இன்று தமிழகத்தில் பல திருமணங்கள்
முறிவை சந்திக்கின்றன.
1936 ஆம் ஆண்டு உலக ஜோதிட மாநாட்டிலேயே அனைத்து ஜோதிடர்களாலும் வாக்கிய பஞ்சாங்க முறை
ஒழிக்கப்பட்டுவிட்டது.
இன்றும் ஜோதிடம் முழுமையாக தெரியாத அரைகுறைகளால் மட்டுமே இந்த வாக்கிய பஞ்சாங்க முறை தமிழகத்தில்
பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வாக்கிய பஞ்சாங்க முறை தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசர் இரண்டாம் சரபோஜி காலத்தி்ல் அவரது அவையில்
இருந்த வரருஷி என்ற பஞ்சாங்க கணிதனால் வாயமொழி செய்யுளாக பயன்படுத்த ஒரு உத்தேச பஞ்சாங்க முறையாகும்.
இன்னும் சொல்வதென்றால் இந்த வாக்கிய பஞ்சாங்க முறை தவறென்றாலும் எங்கள் குலத்தில் பயன்படுத்திவிட்டார்கள்
என்ற ஒரே காரணத்திற்காக இன்றும் தவறான இந்த பஞ்சாங்க முறையை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்.
மேலும் வாக்கிய பஞ்சாங்க முறையில் இந்திய ஜோதிடத்தின் ஆணி வேராண பாகைமுறை, சட்வர்க்க கணிதம்,
அஷ்டவர்க்கம், போன்ற எதுவும் கிடையாது.
மூன்று நூற்றாண்டுகளாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் வாக்கிய பஞ்ணாங்கப்படியே அனைத்து கிரக பெயர்ச்சிகளும்
ஒரேயொருவரால் கடைபிடிக்கப்படுவதால் மட்டுமே இந்த தவறான ஜோதிட முறை இன்றும் குத்துயிரும் கொலையிருமாக
இருக்கிறது.
பொதுபலனை சொல்லி மக்களை ஏமாற்றும் போலி ஜோதிடர்கள் ஒழிந்தால் இந்த வாக்கிய பஞ்சாங்க முறையும் ஒழியும்.
திருக்கணித முறையே ஜோதிட பலன்களை நுட்பமாக காண பயன்படும் முறை என்பதற்கு தலைசிறந்த ஆதாரம் மகாகவி
காளிதாசரின் உத்தரகாலாமிரதம் என்ற அற்புதநூலில் முதலாவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள கீழ்க்காணும்
செய்யுளாகும்.
வாக்கியம் சரியென்பவர்கள் யாரும் இதற்கு ஆதாரபூர்வமாக பதில் சொல்லியதே-யில்லையென்ற ஒன்றே திருக்கணிதமே
ஜோதிடம். மற்றது போலியென்பதற்கு தலைசிறந்த சான்று.