ஒரு நாள் திரு முத்து ஒரு காட்டின் வழியே நடந்து சென்றார்.
அப்போது அவருக்கு சிங்கத்தின் கர்ஜனை
சத்தம் கேட்டது. பயந்து போன திரு முத்து சத்தம் வந்த திசை நோக்கி திரும்பிப் பார்த்தார் . கூண்டுக்குள்ளே ஒரு சிங்கம் அடைபட்டுக் கிடந்ததைக் கண்டார். அந்தச் சிங்கம் திரு முத்துவைப் பார்த்து, “என்னைக் கண்டு பயப்பட வேண்டாம். இந்த கூண்டுக்குள் ஓர் ஆடு இருப்பதைக் கண்டு, அதைச் சாப்பிட எண்ணி கூண்டுக்குள் நுழைந்து மாட்டிக்கொண்டேன். தயவு செய்து என்னை எப்படியாவது காப்பாற்றிவிடுங்கள்” என்று சிங்கம் மன்றாடியது. அதற்கு திரு முத்து “ நீயே மனிதனைக் கொன்று தின்கிறவன். உனக்கு எப்படி நான் உதவி செய்வது? நீ என்னைக் கொன்று தின்று விடுவாயே” என்று பதில் பேசினார்.