Professional Documents
Culture Documents
தமிழர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள்
தமிழர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள்
அமுதான தமிழே நீ வாழி ! என் ஆவியிலே கலந்து நாவினிலே தவழும் அமுதான தமிழே நீ
வாழி! அவையினருக்கு வணக்கம். இன்று எனக்கு கிடைத்தத் தலைப்பானது “தமிழர் சாதிக்கப்
பிறந்தவர்கள்” என்பதாகும். தமிழர் இனம் என்பது தமிழ் மொழியைப் போன்றே தொன்மையையும்
மேன்மையையும் தாங்கியது ஆகும்.
எனும் பாடல் வரியில் நில உலகு தோன்றிய காலத்திலேயே தமிழ் இனம் தோன்றிவிட்டதையும்
மனித வாழ்வை உருவாக்கியதே தமிழ்மொழி என்றும் தமிழினத் தொன்மைச் சிறப்பு
வெளிப்படுத்துகிறது. அத்தகைய மரபினைத் தாங்கி வளர்ந்த நம் தமிழர்கள் சாதிக்கப்
பிறந்தவர்கள் அல்லவா? நம் தமிழர்கள் கால்பதிக்காத உயரம் உண்டா? இந்து நாகரீகம் தொடங்கி
இமயம் வரை நம் தமிழர் புகழ் பரவாத இடம் இல்லை. உலகிலுள்ள அணைகளுக்கு
முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும்,
நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை
தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை வியந்து பார்க்கையில் நம் மரபணு சாதிக்கப்
பிறந்தவரின் வம்சாவழி என்பதை மார்தட்டிச் சொல்லத் தோன்றுகிறது.
இன்றைய காலச் சூழலோடு இயைத்துப் பார்க்கையில் நம் தமிழரின் சாதனைகள் கல்வி, தொழில்,
விளையாட்டு, அறிவியல், அரசியல், கலை, தலைமைத்துவம் என்று பரந்து விரிந்த நிலையில்
உள்ளது. உதாரணமாக, மலேசியாவின் தலை சிறந்த பூப்பந்து வீராங்கனை கிஷோனா செல்வதுரை
இன்று ஸ்பெயின் அனைத்துலக சாம்பியன்ஷிப் பூப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை
வென்று வரலாறு படைத்தார்.