You are on page 1of 2

திருவாசகம் – மாணிக்கவாசகர்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

கோனாகி யான் எனது என்றவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே


விளக்கம்
இறைவன் ஆகாயமாகவும் நிலமாகவும் காற்றாகவும்
வெளிச்சமாகவும் உடலாகவும் அந்த உடலில் உறையும்
ஆன்மாகவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான்.தன்னை
உணர்ந்தவர்களுக்கு உள்ளவனாகவும் தன்னை நம்பாதவர்களுக்கு
இல்லாதவனாகவும் விளங்கி நம்மை
அரசாளுகின்றான்.நான் ,எனது என்ற செருக்குடையவரை
அவரவர் விருப்பம்போல் ஆடவிட்டு இறுதியில் இறையாற்றலை
அவர்கள் உணரும்படி செய்யும் இறைவனின் தன்மையைப்
போற்றிப் புகழ்வதற்குச் சொற்களே கிடையாது.

தமிழ்மொழி ஆசிரியர்: திருமதி.கி.சாந்தி

You might also like