You are on page 1of 3

வீடு குத்தகை ஒப்பந்தப்‌பத்திரம்

2024-ஆம்‌ வருடம்‌ மாதம்‌ 7 ந்‌ தேதி, சென்னை - 600042, எண் 28,


கருணாம்பிகை காலனி வேளச்சேரி, என்ற முகவரியில்‌ வசிக்கும்‌ திரு.
துவாரகாநாதன், த.பெ. மாதவாச்சாரி, (AADHAR NO: 4627 0324 2945) (கட்டிட
சொந்தக்காரர்‌) முதல்‌பார்ட்டியாகவும்‌.

சென்னை – 600804, 3/296, பெருமாள் கோவில் தெரு திருவண்ணாமலை.


என்ற முகவரியில்‌வசிக்கும்‌திரு. ம. ரவீந்திரன் த.பெ. மணி, (AADHAR NO: 8190
5039 8408) (வீடு குத்தகைதாரர்) இரண்டாவது பார்ட்டியாகவும்‌ ஆக நாம்‌ இரு
பார்ட்டிகளும்‌ சேர்ந்து எழுதிக்‌ கொண்ட வீடு குத்தகை
ஒப்பந்தம்‌என்னவென்றால்‌.

சென்னை-600042, எண் 28, தரை தளம், கருணாம்பிகை காலனி


வேளச்சேரி, என்ற விலாசத்தில்‌ அமைந்துள்ள வீடு நம்மில்‌ 1 வது நபருக்குச்‌
சொந்தமானதாகும்‌.

-2-

மேற்படி வீடு நம்மில்‌ 2 வது பார்ட்டி குத்தகைக்குக்‌ கேட்க, அதற்கு முதல்‌


பார்ட்டியும்‌ கீழ்க்கண்ட நிபந்தனைகளின்பேரில்‌ குத்தகை விட
சம்மதித்துள்ளார்‌. அதற்கான ஒப்பந்த ஷரத்துக்கள்‌பின் வருமாறு.

ஷரத்துக்கள்‌
(1) 1 வது பார்ட்டிக்குச்‌ சொந்தமான மேற்கண்ட, விலாசத்திலுள்ள வீடு 2 வது
பார்ட்டிக்கு 11 மாத காலத்திற்கு லீஸ்க்குக்‌ கேட்டுக்‌ கொண்டதன் பேரில்‌ 1 வது
பார்ட்டி, 2 வது பார்ட்டிக்கு லீஸ்க்கு விட இதன்‌மூலம்‌சம்மதிக்கின்றார்‌.

(2) மேற்படி வீட்டிற்கு குத்தகை தொகையாக 2 வது பார்ட்டி, 1 வது பார்ட்டியிடம்‌ரூ.


3,00,000/- (ரூபாய்‌மூன்று லட்சம் மட்டும்‌) கொடுத்துள்ளார்‌. அதனை 1 வது பார்ட்டி
பெற்றுக்‌ கொண்டதற்கு இதுவே பணப்பற்று ரசீதாகும்‌. மேற்படி தொகைக்கு
வட்டி ஏதும்‌கிடையாது. இந்த தொகையை 2 வது பார்ட்டி வீட்டை காலி செய்யும்‌
போது 1 வது பார்ட்டி, 2 வது பார்ட்டியிடம்‌மேற்படி தொகையை திருப்பிக்‌கொடுக்க
சம்மதிக்கின்றார்‌.

(3) மேற்படி வீட்டை இரண்டாவது நபர்‌ வேறு யாருக்கும்‌ மேல்‌ வாடகைக்கோ


அல்லது லீசுக்கோ கொடுக்கக்கூடாதென்றும்‌, அரசு சட்ட விரோதமான
செயல்களை 2 வது பார்ட்டி செய்யமாட்டேன்‌என ஒப்புக்‌கொள்கிறார்‌.

(4) 1 வது பார்ட்டிக்கு மேற்படி இடம்‌ தேவைப்பட்டாலோ அல்லது 2 வது பார்ட்டிக்கு


வீடு தேவையில்லாத பட்சத்திலோ இரு பார்ட்டிகளும்‌ மூன்று மாத காலத்திற்கு
முன்பே தெரிவித்துவிட இரு பார்ட்டிகளும்‌ஒப்புக்‌கொள்கிறார்கள்‌.

(5) வீட்டை காலி செய்யும்‌பட்சத்தில்‌மின்கட்டண பாக்கி மற்றும்‌வேறு ஏதாவது


பாக்கித்‌ தொகை முதல்‌ பார்ட்டிக்குக்‌ கொடுக்க வேண்டியிருந்தால்‌, முதல்‌
பார்ட்டி வாங்கிய தொகையில்‌மேற்படி பாக்கித்‌தொகையை கழித்துக்‌கொண்டு
மீதித்‌ தொகையை கொடுக்க முதல்‌ பார்ட்டிக்கு உரிமையுண்டு. இதற்கு
இரண்டாவது பார்ட்டியும்‌சம்மதிக்கின்றார்‌.

(6) மேற்படி வீட்டை உரிமையாளரின்‌ அனுமதியில்லாமல்‌ எந்தவித மாறுதலும்‌,


மற்றும்‌சுவற்றை இடிப்பதோ, புதிதாகக்‌கட்டுவதோ போன்ற எந்தவித சேதாரமும்‌
கட்டாயமாக செய்யக்கூடாது. வீட்டை நல்லமுறையில்‌பராமரித்து வரவேண்டும்‌.

-3-

(7) இந்த ஒப்பந்தப்‌ பத்திரம் காலக்கெடுவான 11 மாதங்கள் (07.11.2022 to


06.10.2023 வரை) முடிந்ததும்‌ 2 வது பார்ட்டி வீட்டை குத்தகை தொடர்ந்து நடத்த
விரும்பினால்‌ அன்றைய நிலவரப்படி புதிய ஒப்பந்தப்‌ பத்திரம் செய்து கொள்ள
வேண்டியது.

(8) மேற்படி வீட்டை லீஸ் காலம் முடிந்து உரிமையாளரிடம் ஒப்படைக்கும் பொழுது


வீட்டை சுத்தம் செய்து எந்த வித சேதாரமும் இல்லாமல் ஒப்படைக்க வேண்டும்.

இந்தப்படிக்கு நாம்‌ இரு பார்ட்டிகளும்‌ சம்மதித்து கீழ்க்கண்ட


சாட்சிகளின்‌ முன்னிலையில்‌ ஏற்படுத்திக்‌ கொண்ட லீஸ் ஒப்பந்தப்‌ பத்திரம்‌
ஆகும்‌.

வீட்டின் உரிமையாளர் வீட்டின் குத்தகைதாரர்


சாட்சிகள்‌:-

1.

2.

You might also like