அ) விடுபட்ட கதையைச் சரியான சொற்களைக் கொண்டு நிறைவுச் செய்க.
ஒளவையார் அடர்ந்த காட்டின் வழியே சென்று கொண்டிருந்தார்.
வெயில் கடுமையாக இருந்தது. பாதையும் இருந்தது. ஒளவை களைத்துப்
போனார். சிறிது நேரம் இளைப்பாறினார். ஒரு நாவல் மரத்தடியில் அமர்ந்தார்.
ஒருவன் அந்த மரக்கிளையில் அமர்நத
் ிருந்தான்.
ஒளவையார் அச்சிறுவனை நோக்கி, “சிறுவனே! எனக்குப் பசிக்கிறது. கொஞ்சம்
பறித்துப் போடுகிறாயா?” என்றார். உடனே அச்சிறுவன், “பாட்டி, சுட்ட பழம் வேண்டுமா?” சுடாத பழம் வேண்டுமா?” என்றான். ஒளவையாரும் “பெரியோரைப் பரிகாசம் செய்யாதே! எனக்குச் சுடாத பழமே தேவை, “ என்றார். சிறுவன் வேகமாக உலுக்கினான். பழங்கள் கீழே உதிர்ந்தன. ஒளவை, கனிந்த பழங்களைப் பொறுக்கிக் கொண்டார். பழங்களின் மேல் மண் ஒட்டியிருப்பதைக் கண்டு தம் வாயால் ஊதினார். ஒளவையின் அந்தச் செய்கையைக் கண்டு சிறுவன் நகைத்தான். பேசவும் ஆரம்பித்தான். ஒளவைக்கு அப்பொழுதுதான் தெரிந்தது சுடாத பழம் என்றால் காய் என்று. புலவரான தம்மையே சிறுவன் சாமர்த்தியமாகப் பேசி ஏமாற்றிவிட்டானே என்று ஆச்சரியமுற்றார். ‘கற்றது தானே’ என்று தனக்குத் தானே பேசிக் கொண்டு நடந்தார்.