You are on page 1of 1

பயிற்சித்தாள்

பெயர் :
வகுப்பு :
திகதி :

அ) வாக்கியத்தில் விடுபட்ட இடங்களைச் சரியான இடைச்சொற்களைப் பயன்படுத்தி நிறைவு


செய்திடுக.

1. குமுதனுக்குக் காய்ச்சல் கண்டது. அவன் பள்ளிக்குச் செல்லவில்லை.

2. தமிழரசியை ஆசிரியர்கள் பாராட்டினர். அவள் சிறப்பான முறையில்


கவிதை படைத்தாள்.

3. அப்பாதை பாதுகாப்பானது இல்லை. கவனமாகச் செல்லுங்கள்.

ஏனென்றால் ஆகையால் எனவே

ஆ) சரியான இடைச்சொற்கள் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

நமது பாதுகாப்பு மிகவும் அவசியம். ஆகவே, நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

நான் பள்ளிக்கு வருவேன். ஆனால், பிரியா அங்கு வரமாட்டாள்.

காகத்திற்குத் தாகம் எடுத்தது. ஏனென்றால், அது தண்ணீரைத் தேடி அங்கும் இங்கும் அலைந்தது.

சிவா கவிதை போட்டியில் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில், அவனுக்குக் கவிதை சொல்ல தெரியாது.

You might also like