Professional Documents
Culture Documents
(புதன்) 4S1
(புதன்) 4S1
பாடத்திட்டம்
பாடம் : தமிழ்மொழி
படிவம் : 4S1
மாணவர் எண்ணிக்கை : 18
நாள் / கிழமை : 29.08.2018 / புதன்கிழமை
நேரம் : 10.20 - 10.50 காலை ( 30 நிமிடம் )
பாடத்தலைப்பு : பாரதியாரின் கவிதைகள்
கற்றல் பேறு : 9.3 கவிதைகளை நயத்துடன் வாசிப்பர்.
படிநிலை : 9.3.1 கவிதை, செய்யுள் ஆகியவற்றின் பொருளறிந்து நயத்துடன் ஒப்புவிப்பர்.
9.3.2 கவிதை, செய்யுள் ஆகியவற்றின் பொருளறிந்து நயத்துடனும் உணர்ச்சியுடனும் ஒப்புவிப்பர்.
9.3.3 கவிதை, செய்யுள் ஆகியவற்றின் பொருளறிந்து நயத்துடனும் உணர்ச்சியுடனும் பாவனையுடனும்
ஒப்புவிப்பர்.
ஒருங்கணைப்புத் திறன் : 8.1.1 இலக்கிய வகைகளைப் பொருளுணர்ந்து பகுப்பாராய்ந்து கருத்துரைப்பர்.
பாட ஒருங்கிணைப்பு : நன்னெறிக்கல்வி
மாணவர் முன்னறிவு : மாணவர்கள் முன்னரே படிவம்-3 இல், கவிதையின் பொருளறிந்து நயத்துடனும் உணர்ச்சியுடனும்
ஒப்புவிக்கும் திறனை அடைந்துள்ளனர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
1. கவிதையின் பொருளறிந்து நயத்துடனும் உணர்ச்சியுடனும் பாவனையுடனும் ஒப்புவிப்பர்.
சிந்தனைத்திறன் : ஆய்வுச் சிந்தனை : ஊகித்தறிதல், பண்புகளை விளக்கப்படுத்துதல்
விரவி வரும் கூறுகள் : எதிர்காலவியல் : நன்னெறிப் பண்பைப் போற்றுதல்
பண்புக்கூறு : குடிமை, கூட்டுப்பணி, சுயமுயற்சி
பாடத்துணைப்பொருள் : ஒலிபெருக்கி (பாரதியாரின் அறிமுகம்), பாரதியாரின் வேடத்தில் மாணவர், பாடல்
மீட்டுணர்தல் :
வகுப்பறையில் நடத்தப்பட்ட முழுமைப் பயிற்றியலுக்குப் பின்
நான் என் முழுமைப் பயிற்றியலுக்கு எடுத்துக் கொண்ட பாடத்தலைப்பு “பாரதியாரின் கவிதைகள்” என்பதாகும். இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்,
கவிதையின் பொருளறிந்து நயத்துடனும் உணர்ச்சியுடனும் ஒப்புவிப்பர். அவ்வகையில், நான் இன்றைய முழுமைப்பயிற்றியலைத் திட்டமிட்டபடி சிறப்பாக நடத்தி
முடித்தேன். மாணவர்கள், சிறப்பாக கவிதையை நயத்துடனும் உணர்ச்சியுடனும் பாவனையுடனும் ஒப்புவித்தனர். அனைத்து மாணவர்களும்
பாடவேளையின்போது ஒத்துழைப்பு நல்கினர். இன்று மாணவர் ஒருவர் பாரதியின் வேடத்தில் வகுப்பிற்கு வந்ததது, மாணவர்களை கவர்ந்திருந்தது.
மாணவர்கள் இன்று நடத்தப்பட்ட அனைத்து நடவவடிக்கைகளிலும் ஈடுபாடுடன் கலந்துக் கொண்டனர். இன்றைய வகுப்பு மகிழ்ச்சியான வகுபாகாவே
அமைந்திருந்தது. அனைத்து மாணவர்களும் இன்றைய திறனை முழுமையாக அடைந்து விட்டனர்.