சர்வதேச ‘கோறணி தொற்று’ நோய் கால கட்ட உடல் நலக்கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கை அமலாக்கம்
வணக்கம். தேசிய வகை மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மேற்குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை
21 செப்டம்பர் 2020 முதல் நடத்தப்படவுள்ளது என்பதை இவ்வறிக்கையின் வழி தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
2. வருகின்ற 23 செப்டம்பர் 2020 முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் புறப்பாட நடவடிக்கை மதியம்
12.40-லிருந்து 1.40 வரை நடைபெறவுள்ளது.
3.மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் விளையாட்டுத் துறை அமைச்சு வெளியிட்ட
நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் கீழ் நடத்தப்படவுள்ளது என்பதை இதன்வழி தெரிவித்துக் கொள்கிறோம்.
4.இத்துடன் மாணவர் கலந்து கொள்ள வேண்டிய அனுமதி பாரம் இணைக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்/பாதுகாவலர் பாரத்தைப் பூர்த்தி செய்து வருகின்ற 21 செப்டம்பர் 2020-க்குள் பள்ளியில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். மேல் விபரங்களுக்குப் பள்ளியின் புறப்பாட நடவடிக்கை துணைத் தலைமையாசிரியர் திரு.நாகராஜன் வேலு அவர்களைத் தொலைபேசி எண் 04-3334428 மூலம் தொடர்பு கொள்ளவும்.