பூப்பந்துப் போட்டியில் மாநில அளவில் முதல் நிலையில் வாகை சூடிய
நண்பனைப் பாராட்டி ஒரு பாராட்டுரை எழுதுக.
அவைத் தலைவருக்கு நன்றி. பூப்பந்துப் போட்டியில் மாநில அளவில்
முதல் நிலையில் வாகை சூடிய இப்பள்ளி மாணவனும் என் நண்பனுமாகிய இளங் கு மறனு க்காக ஏற்பா டுசெய் யப் பட்டுள்ள பாராட்டு விழாவிற் குவரு கை புரிந்திருக்கும் பள்ளித் தலைமையாசிரியர் ஐயா முத்து இராமலிங்கம் அவர்களே, பள்ளித் துணைத் தலைமையாசிரியர்களே, ஆசிரியர்களே, பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களே, சக நண்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
இப்பள்ளியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடன் பயிலும் என்
நண்பன் முகுந்தனைப் பற்றி இன்றைய நிகழ்ச்சியில் பாராட்டி உரையாற்றிட வாய்ப்பு வழங்கிய ஏற்பாட்டுக் குழுவினருக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சபையோரே,
நண்பன் முகுந்தன் ஆரம்பப்பள்ளி முதல் பூப்பந்து விளையாட்டில்
மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். அத்தோடு, அப்பொழுதே பல போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் வென்றுள்ளான். நண்பன் முகுந்தன் விளையாட்டில் மட்டுமின்றி கல்வியிலும் சிறந்த மாணவனாகத் திகழ்ந்தான். எல்லாதேர் விலும் சி றந்த பு ள் ளிகள்பெற் றதோடு , யு.பி.எஸ ்.ஆர். தேர்வின்போது பள்ளியிலேயே சிறந்த மாணவனாகத் தேர்வுபெற்றுப் பள்ளித் தலைமையாசிரியரின் சிறப்புப் பரிசையும் பெற்றார். அவர் நேரத்தைப் படிப்புக்கும் விளையாட்டுக்கும் சரியாகப் பகிர்ந்துகொண்டதால்தான் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார்.