Professional Documents
Culture Documents
வேலையைக் கொடுக்க நாங்கள் தயார்
வேலையைக் கொடுக்க நாங்கள் தயார்
ஆனால் உள்ளூர்வாசிகளின்
ஆதரவில்லையே ! – மைக்கி தலைவர்
கோலாலம்பூர் | 30/9/2021 :-
முடக்கம் கண்டுள்ள பல வணிகங்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாய்
தளர்வுகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், அதற்கு வேலை செய்ய ஆள் இல்லாமல் இருப்பது
பெரும்பிரச்சனையாக உள்ளது.
குறிப்பாக, இந்தியப் பாரம்பரிய வணிகங்களான ஜவுளி, நகைக்கடை,
உணவகங்கள் போன்ற வியாபாரங்களில் தொழிலாளர் பற்றாக்குறையால்
நிலைமை மோசமடைந்துள்ளதாக மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல்
சங்கங்களின் சம்மேளனம் எனப்படும் மைக்கியின் தேசியத் தலைவர்
டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனை என்பது இன்று
நேற்று தொடங்கியதோ அல்லது கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில்
உருவெடுத்தப் பிரச்சனையோ அல்ல.
ஆகக். கடைசியாக, 2016 ஆம் ஆண்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்
தருவிக்க அனுமதி கிடைத்ததைச் சுட்டிக் காட்டிய கோபால கிருஷ்ணன்,
இப்போதுள்ள முடக்கத்தால், ஒட்டு மொத்தத்தில் இந்திய வணிகர்கள் 30%
பெரும் பாதிப்புக்கு உள்ளானதாகவும், இந்திய சமுதாயத்தில் 80 முதல் 90
விழுக்காடு வரை அதன் தாக்கம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக்குறை விவகாரத்தில், கோவிட்-19 க்கு
முன்னர் அரசாங்கத்தின் கொள்கையைக் காரணம் காட்டப்பட்டதாகவும்,
தர்போதையச் சூழலில் 4.5 விழுக்காடு மலேசியர்களின் வேலையில்லாத்
திண்டாட்டத்தைக் காரணமாக அரசாங்கம் கூறூவதாகவும் அவர்
குறிப்பிட்டார்.
அரசாங்கம் ஏற்படுத்தி இருக்கும் My Future Jobs போன்ற தளங்கள் தொடங்கி
தொழிலாளர் தேவைப்படும் நிறுவானங்கள், கடைகளுன் முன்புறம்
பதாகைகள் உட்பட அனைத்து முயற்சிகளும் செய்தாகி விட்டது.
நியாயமான ஊதியமும் உறுதியளிக்கப்பட்டு இருந்தாலும்,
உள்ளூர்வாசிகளின் ஆதரவு கிடைக்காதச் சூழலில் தான் வெளிநாட்டுத்
தொழிலாளரின் தேவை ஏற்பட்டுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் ஏற்பட்ட முடக்கத்தால்,
வியாபாரத் தலம் செயல்பட அனுமதி வழங்கப்படாத நிலையில் சிரமப்
பட்டதாகக் குரிப்பிட்ட அவர், இப்போது வியாபாரம் செய்ய அனுமதி
இருந்தும் பணியாட்கள் இல்லாதச் சூழலில் வியாபாரம் செய்ய முடியாதச்
சூழலுக்கு வணிகர்கள் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நாட்டில் 4.5 விழுக்காட்டினர், அதாவது 800,000 க்கும் மேற்பட்டோர்
வேலையில்லாமல் இருக்கின்ற நிலையில், நாங்கள் வேலையைக்
கொடுக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், அதனைப் பயன்படுத்திக்
கொள்ள மலேசியர்கள் தயாராக இல்லை. இதில் எங்கள் மீது எந்தத் தவரும்
இல்லை.
பெரும்பாலானோர் நிர்வாகம், போக்குவரத்து (ஓட்டுநர்) போன்ற
வேலைகளைக் குறி வைத்து இருப்பதால், சேவை, உற்பாத்தி வேலைகளில்
நாட்டமில்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவை சீராக இயங்கினால்,
அவற்றை நிர்வகிக்கவும் ஒருங்கிணைக்கவும் நிச்சயமாக மலேசியகளுக்கு
வேலையை வழங்குவோம்.
இவ்விவகாரத்தில் மனிதவள அமைச்சர் ஆதரவாக இருந்தாலும், பிரதமரும்
தனையிட்டு நலிந்து கிடக்கும் இந்தியப் பாரம்பரிய வணிகங்களுக்கு
உயிரூட்ட வழி வகை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
தொடரும்...
கோலாலம்பூர் | 1/10/2021 :-