Professional Documents
Culture Documents
Agm கபடதாரி
Agm கபடதாரி
முதலில் லக்கினம்:
ஒருவன் ஏமாற்றுகாரனாகவும் , வஞ்சகனாகவும், கண்ணியமில்லாமல் நடந்து கொள்வதற்கும் அடிப்படை
லக்னமும் நான்காமிடமும் பாதிக்கப்படுவதே.
லக்னம், ராசி சுபத்தன்மை அடையாத பாவிகளால் பாதிக்கப்பட்டால் நாம் அவர்களிடம் எச்சரிக் கையாக
இருக்கவேண்டும். ஏனென்றால் லக்னமும் ராசியும்தான் முக்கியமாக ஒருவரின் குணாதிசயங்க ளை
குறிப்பிடும் இடம்.
இரண்டாவதாக நான்காமிடம்:
நான்காமிடம் என்பது ஒழுக்கம் , கற்பு, நல்ல குணம் அல்லது குணக்கேடு, கபடம் அல்லது நேர்மை,
ரகசியமாக மனதிற்குள் ஒன்று வைத்துக்கொண்டு வெளியே ஒன்றை பேசுவது அல்லது வெளிப்படையாக
பேசுவது போன்றவற்றை குறிக்கிறது.
மூலநூல்கள் பாவார்த்த ரத்னாகரம் என்ற மூலநூல் சனி சுபத்தன் மை அடையாமல் நான்கில் அமர்ந்து
லக்னத்தை பார்த்தால் அவன் ஒரு கபடதாரி, ஏமாற்றுக்காரன் , கோளன், என்கிறது. மேலும் ஒன்றுக்கு
மேற்பட்ட பாவிகள் லக்னத்திற்கு நான்கில் சேர்ந்திருந்தாலோ ராசிக்கு நான்கில் சேர்ந்திருந்தாலோ அவன்
ஏமாற்றுக்காரன் . நான்கில் குருவின் தொடர்பின்றி சனி செவ்வாய் சேர்க்கை, ராகு செவ்வாய் சேர்க்கை,
ராகு சனி சேர்க்கை இருந்து லக்னம் சுபத்தன்மை அடையாவிட்டாலும் அவன் சமூகத்திற்கு கெடுதல்
செய்ய எண்ணும் வஞ்சகன் . சனியுடன் குரு சேர்ந்தால் ஆன்மிகம் , ஞானம், புனிதம் உண்டாகுவதால்
பாதிப்பு இல்லை.
பொதுவாக சுபரோடு சேராமல் பாவக்கிரக வீட்டில் கேந்திரத்தில் அமர்ந்த சனி மிகுந்த குணக் கேடுகளை
உருவாக்குகிறது.
சனிக்கு பகைவீடுகளான கடகம், சிம்மம், மேசம் (நீசம்,), விருட்சிகம் ஆகியவற்றில் சனி சுபர்
தொடர்பின்றி இருந்து லக்னத்தை பார்த்தால் அச்சாதகன் கபடதாரி.
குரு, சுக்கிரன, தனித்த புதன், வளர்பிறைசந்திரன் லக்னம் , ராசி, நான்காமிடம், நான்காமதி- பதியோடு
சேர்ந்திருந்தால் நல்லகுணம் , தர்மசிந்தனை, நல்லசெயல், புண்ணியசெயல்களில் நாட்டம் போன்றவை
இயல்பாக ஏற்படும்.